எந்திரன் :: நிழலுக்கு உயிர்
::::: படக்கவிதை உங்களுக்காக!
அன்பின் மன்ற சொந்தங்களே......
நமக்கு அவ்வளவாக கவிதை எழுத வராது!
ஆனால் கவிதைகள் மீது தீராத காதல்.
அந்த காதலினால் இந்த திரியை நான்
மன்ற கவிதை காதலர்களுக்காக ஆரம்பிக்கின்றேன்..........
இந்தப்பகுதியில் நம் மன்றிலுள்ள ஆஸ்தான கவிஞ்சர்கள் மட்டுமல்லாமல்
புதியவர்களும் பங்கெடுக்க வேண்டுமென்பது என் ஆசை , அவா.... அதனால் இத்திரியை வெகு இலகுவானதாக அமைக்க விரும்புகின்றேன்.
==========================================================================
இத்திரியில் உங்கள் கவி உணர்வை தூண்டிவிடும் ஒரு படம் தரப்படும்,
அந்த படத்தைப்பார்த்து உங்கள் மனதில் எழும் கவிதையை இங்கு நீங்கள் பதியலாம்......
அது மரபுக்கவிதையாக, புதுக்கவிதையாக அல்லது ஹைக்கூவாக இருக்கலாம்... எந்தவித கட்டுப்பாடும் இல்லை..
உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவி வடிக்க வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு......
கவிதை எழுத வராதவர்கள்: என்னைப்போன்றவர்களது பொறுப்பு கவிஞ்சர்களை பின்னூட்டமெனும் ஊக்க மருந்து கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது...
அதுபோல கவி உணர்வை தூண்டும் படங்களையும் நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்...
ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென கருதுகின்றேன். ஒரு படம் வெளிவந்து அந்தப்படத்துக்கு மூன்று கவிதைகளுக்கு குறையாமல் வந்த பின்னர், முதல் படம் வந்து 1 நாளைக்குப்பிறகு, (மன்ற விதிகளுக்கு உட்பட்ட ) அடுத்த படத்தை மன்ற உறுப்பினர்கள் யாரும் பதியலாம்.
=========================================================================
இதோ உங்கள் கற்பனைக்கு..........
உங்கள் கவி வரிகளை எதிர்பார்த்து
எனது முதலாவது படம்.
எங்கே உங்கள் கவிதைகள் களைகட்டட்டும்.!!!
Bookmarks