என்ன பார்க்கிறாய் தாயே..
கண்ணீரில் நீ வளர்த்து
காலடியில் நிற்கும் பயிர்
காய்வதற்குள் வருமோ காவிரி நீர் என்றா?
அவ மாரி...
மழையாய் தான் பொழிஞ்சு
மனச குளிர வச்சு
அணைகளை நிரம்பி அழிச்சு
தமிழச்சி வளர்த்த பயிரை
தழுவி அணைப்பதற்காய்
அவசியம் வருவா நீ
அழுவாம வீட்டுக்கு போ
Bookmarks