Page 148 of 149 FirstFirst ... 48 98 138 144 145 146 147 148 149 LastLast
Results 1,765 to 1,776 of 1787

Thread: தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!

                  
   
   
  1. #1765
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    என்ன பார்க்கிறாய் தாயே..
    கண்ணீரில் நீ வளர்த்து
    காலடியில் நிற்கும் பயிர்
    காய்வதற்குள் வருமோ காவிரி நீர் என்றா?
    அவ மாரி...
    மழையாய் தான் பொழிஞ்சு
    மனச குளிர வச்சு
    அணைகளை நிரம்பி அழிச்சு
    தமிழச்சி வளர்த்த பயிரை
    தழுவி அணைப்பதற்காய்
    அவசியம் வருவா நீ
    அழுவாம வீட்டுக்கு போ

  2. #1766
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by பிரேம் View Post
    அன்றும் இப்படித்தான்,
    மடித்துக்கட்டிய புடவையோடு
    பாடிய பாட்டுக்கு வாயசைத்து
    நாற்று நட்டாள் அவள்...

    நான்
    நாற்று நடுகையில்
    பாட்டுப்பாடுகின்றேன்,
    பசியை மறக்க...

    காலில் பட்ட வயல்நீரினால்
    தலையில் நீர்கோர்த்து
    விட்டதாம் அவளுக்கு...

    வயல்நீரிற் கால் பட்டதனால்
    உலையில் நீர்கொதிக்கும்
    என் வீட்டில் இன்று...

    அவள் ஓய்வெடுக்கின்றாளாம்,
    கோடிகளில் நஷ்டம் கொடுத்து...

    கோடி ஒன்றில் ஓய்வெடுக்கின்றேன்,
    நாளைய கஷ்டம் நினைத்தபடி...

    நடிகைவீட்டு நாய்க்குக்
    காவலுக்கு இரண்டுபேராம்...

    பாதிப்பசியை நீரில் நிரப்பிவிட்டு,
    காவல்காக்குது என்வீட்டு நாய்...
    Last edited by அக்னி; 09-02-2011 at 04:10 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #1767
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    வணக்கம் அன்பு சொந்தங்களே....

    மீண்டும் நிழலுக்கு உயிர்கொடுப்போமா ???
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  4. #1768
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாங்க நாரதரே...நலமா? நிச்சயமாய் கொடுப்போமே....உறவுகளின் வித்தியாச பார்வைகள் அழகான கவி வரிகளாய் வந்து விழுவதை மீண்டும் கண்டு ரசிப்போமே....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. Likes Narathar liked this post
  6. #1769
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அன்பின் மன்ற சொந்தங்களே............
    இந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் எழும் என்னங்களை
    கவிதையாக இங்கு பதிந்து
    இந்த நிழலுக்கு உயிரூட்டுங்கள்




    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #1770
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அன்பின் மன்ற சொந்தங்களே......

    நமக்கு அவ்வளவாக கவிதை எழுத வராது!
    ஆனால் கவிதைகள் மீது தீராத காதல்.
    அந்த காதலினால் இந்த திரியை நான்
    மன்ற கவிதை காதலர்களுக்காக ஆரம்பிக்கின்றேன்..........

    இந்தப்பகுதியில் நம் மன்றிலுள்ள ஆஸ்தான கவிஞ்சர்கள் மட்டுமல்லாமல்
    புதியவர்களும் பங்கெடுக்க வேண்டுமென்பது என் ஆசை , அவா.... அதனால் இத்திரியை வெகு இலகுவானதாக அமைக்க விரும்புகின்றேன்.

    ==========================================================================

    இத்திரியில் உங்கள் கவி உணர்வை தூண்டிவிடும் ஒரு படம் தரப்படும்,
    அந்த படத்தைப்பார்த்து உங்கள் மனதில் எழும் கவிதையை இங்கு நீங்கள் பதியலாம்......

    அது மரபுக்கவிதையாக, புதுக்கவிதையாக அல்லது ஹைக்கூவாக இருக்கலாம்... எந்தவித கட்டுப்பாடும் இல்லை..

    உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவி வடிக்க வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு......

    கவிதை எழுத வராதவர்கள்: என்னைப்போன்றவர்களது பொறுப்பு கவிஞ்சர்களை பின்னூட்டமெனும் ஊக்க மருந்து கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது...

    அதுபோல கவி உணர்வை தூண்டும் படங்களையும் நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்...
    ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென கருதுகின்றேன். ஒரு படம் வெளிவந்து அந்தப்படத்துக்கு மூன்று கவிதைகளுக்கு குறையாமல் வந்த பின்னர், முதல் படம் வந்து 1 நாளைக்குப்பிறகு, (மன்ற விதிகளுக்கு உட்பட்ட ) அடுத்த படத்தை மன்ற உறுப்பினர்கள் யாரும் பதியலாம்.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  8. #1771
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இல்லாத உணவுண்டு,
    பானையைக் கழுவியது
    தண்ணீராலல்ல.., கண்ணீரால்...

    அந்த ஈரம் காய்த்துவிட,
    அடுப்பில் வெப்பமில்லை..,
    எரித்து நீண்ட நாள்...

    பசி எரியக் காய்ந்துபோனது
    அன்னையில் எனக்கான பால்...

    அதை அணைக்கத்
    தேடிச் சென்றுவிட்டாள்
    அன்னை...
    அவள் வரும்வரையில்,
    எனக்கும் கொஞ்சம்
    கிடைக்குமா உன் பால்...
    Last edited by அக்னி; 27-06-2012 at 07:01 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. Likes கீதம், Narathar liked this post
  10. #1772
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Narathar View Post


    தாய்ப்பால் -
    சுரக்கவில்லை என் தாயின்பால்!
    ஆவின்பால் -
    அது என் ஆசைகளுக்கப்பால்!
    ஆட்டுப்பால் -
    ஒருவேளை சாத்தியம்!
    குட்டியது குடித்தபின்
    கிட்டக்கூடும் சொட்டுப்பாலேனும்!

  11. Likes Narathar liked this post
  12. #1773
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அக்னியின் வறுமை காட்டும் வளமான வரிகளும், தங்கை கீதத்தின் மிகப்பொருத்தமான அழகிய வரிகளும் நிழலுக்கு உயிரூட்டுகின்றன. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  13. #1774
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மேய்ச்சலுக்கும் போகாமல்
    பீய்ச்சுகிறது பாலை
    தன் குட்டிக்கு தாய் ஆடு
    இப்போதைக்கு ஒரு மழலையேனும் பசியாறட்டுமென
    இந்த தாய்க்கும், தன் பிள்ளைக்கும்
    உணவு கொண்டுவர
    அந்தத் தாய் வேலைக்குச் சென்றிருக்கிறாள்
    திரும்ப வரும்வரை
    குட்டியின் பசியாறுகிறதா எனக் கண்காணிக்க
    குழந்தையை விட்டுப்போயிருக்கிறாள்...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  14. Likes கீதம், Narathar liked this post
  15. #1775
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Narathar View Post
    [B][COLOR="#FF0000"][COLOR="#0000FF"]


    தாலாட்டுப் பாடிக் கேட்டதில்லை
    தாய்ப்பால் ருசி கண்டதில்லை
    அப்பாவுக்கு அரவணைக்க நேரமில்லை
    அவர் அன்னைக்கு உடல்நலம் போதவில்லை
    சொத்துக்கள் அதிகம் இருக்கவில்லை
    சொந்தபந்தங்களுக்கு உறவு தெரிவதில்லை
    சிரிக்க அவசியம் வருவதில்லை
    சிந்தவும் கண்ணீர் மிச்சமில்லை
    அம்மா என்று யாருமில்லை
    அதனால் தானே இந்தநிலை?
    அந்தக் கவலை உனக்கில்லை
    அன்னை இருக்காள் துயரில்லை
    ஒருமுறை காட்டு உன் முகத்தை
    ஒத்த குழந்தைப்பருவ சந்தோசத்தை
    உனைப் பார்த்தாவது தெரிந்து கொள்கிறேன்!!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  16. Likes கீதம், Narathar liked this post
  17. #1776
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தங்கை ராஜிசங்கரின் கோணமும் அருமை. அழகான வார்த்தைகளில் ஆதங்கம் சொல்லும் கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்ம்மா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 148 of 149 FirstFirst ... 48 98 138 144 145 146 147 148 149 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •