Page 2 of 149 FirstFirst 1 2 3 4 5 6 12 52 102 ... LastLast
Results 13 to 24 of 1787

Thread: தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    நன்றியுடன்
    முத்தமிட்டேன் உன்னை..
    மலடி என்னும்
    வார்த்தையில் மடிந்துவிடாமல்
    எனக்கு
    மறு ஜென்மம் தந்ததற்க்காக..........
    எம் சமுதாயத்தில் புரையோடிப்போன ஒரு விடயத்தை அழகாகச் சொல்லும் கவிதை.
    பாராட்டுக்கள் மீரா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #14
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    உன் கன்னத்தில்
    முத்தம் பதிக்க
    எத்தனை முறை
    வேண்டுமானாலும்
    இறந்து பிறப்பேன்
    பிரசவத்தில்....

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    புரியாத நீ...
    தெரியாத நான்...

    உன்னை
    முத்தமிட்ட கணத்தில்
    தெரிந்து கொண்டேன்..,
    உனக்குப் புரிந்த மொழியை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by meera View Post
    நன்றியுடன்
    முத்தமிட்டேன் உன்னை..
    மலடி என்னும்
    வார்த்தையில் மடிந்துவிடாமல்
    எனக்கு
    மறு ஜென்மம் தந்ததற்க்காக..........

    எத்தனை கொடுமையான விடயமிதுவென்பதை அழகாக வரிகளில் புகுத்திய மீராவுக்கு என் பாராட்டுக்களும்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    பாராட்டுக்கு நன்றி ஓவியன் அவர்களே
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மூன்று கிலொ எடையுள்ள
    கையடக்கப் பூவினை

    மொழியில்லா உலகினுள் உலவிவிட்டு
    விழி திறக்காமல் மறுத்தவளை

    பெறுதற் கில்லா பேறு பெற்ற
    எனக்குப் பிறக்காமல் பிரசவித்தவளை

    ஏற்று முத்தமிடுகிறேன்

    ஏச்சுக்கள் மகிழ்வாய் திரும்பியது
    இந்நிழலுக்கு உயிராய்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    நன்றியுடன்
    முத்தமிட்டேன் உன்னை..
    மலடி என்னும்
    வார்த்தையில் மடிந்துவிடாமல்
    எனக்கு
    மறு ஜென்மம் தந்ததற்க்காக..........
    வெறுமனே கவிதை என்று படித்தால் அசத்தலான கவிதை மீரா...
    அதற்கு முதற்ற்கண் பாராட்டுக்கள்.

    ஆழ ஊன்றிப்பார்ப்பின்...
    ஒரு தாய் ஒருபோதும் தன் குழந்தையை நன்றி கூறும் முகமாக முத்தமிடுவது கிடையாது. ஒரு பிரதிபலனையும் எதிர்பாராது அன்பை பொழிபவளே தாய். அப்படிப்பட்ட தாயின் முத்தத்தை தாங்கள் குற்றிப்பிட்டதுபோல சித்தரிக்க முடியுமா?

    இது என்னுடைய கருத்து.

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாய் அன்னையே
    இத்தனை இன்பங்கள் உன்னுள் - மலர்ந்திட
    முத்தம் பொழிந்திடும் உன்னில் பிறக்கநான்
    எத்தனை கொண்டிருந்தேன் பேறு

    - வெண்பா
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    நான்
    பல முறை
    மரணிக்க தயார்

    ஒருமுறை
    உன்
    பட்டுமேனியை
    தொட்டு நுகர்வதற்காக........
    மிகவும் உயர்ந்த சிந்தனை மீரா.


    Quote Originally Posted by meera View Post
    நன்றியுடன்
    முத்தமிட்டேன் உன்னை..
    மலடி என்னும்
    வார்த்தையில் மடிந்துவிடாமல்
    எனக்கு
    மறு ஜென்மம் தந்ததற்க்காக..........
    பாராட்டுக்கள்.
    நான் என்றுமே உங்கள் கவிதைக்கு அடிமை.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    நான்
    பல முறை
    மரணிக்க தயார்

    ஒருமுறை
    உன்
    பட்டுமேனியை
    தொட்டு நுகர்வதற்காக........
    இதுக்கு மேல என்ன சொல்றது...???

    நுகர்வது - வேணாம் தங்கச்சி .. முகர்வதுன்னு சொல்லிடலாமா?

    நுகர்வதுன்னா பலன் தேடுவது... தாய் தன் மகளை நுகர மாட்டாள்.. உச்சி முகர்வாள்.. சரியா?

    (தங்கச்சி, எனக்கு புரியறது உனக்குப் புரியுதா?)

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    திரியை தொடங்கி ஒரு சில நிமிடங்களிலேயே பதிவிட்டு இத்திரியை உயிரூட்டிய சிப்லி, விராடன் மற்றும் சிவாவுக்கும் நன்றிகள் பல..........

    தொடர்ந்து என் அழைப்பையேற்றுவந்து பதிவிட்ட ஹசனீ , அரேன், ஓவியன் , பில்லா , மீரா....... ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்..........

    தொடர்ந்து வந்து கவிதை தந்த அக்னி, நம்பிகோபாலன்,
    ஆதவன் ஆகியோருக்கும்..... பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய ஓவிய மற்றும் கண்மணிக்கும் நாரதரின் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்.......

    இத்திரியை தொடர்ந்து உயிர்ப்பாக வைத்திருப்பது உங்களனைவரதும் பொறுப்பு........

    Quote Originally Posted by பில்லா View Post

    நண்பர்களே இது பில்லா தன் வாழ்கையில் எழுதிய முதல் கவிதை,,, இல்லை இல்லை...... கிறுக்கல்

    அன்புடன்
    பில்லா
    ஆஹா! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்........
    இன்னும் எழுதுங்கள். இன்றைய கிறுக்கல்கள் நாளைய உலகின் தலைவிதியாக கூட மாறலாம்!

    உங்கள் முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள்
    Last edited by Narathar; 03-07-2008 at 02:16 PM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    முத்தமுரசிச் சொல்வேன்
    காதோர ரகசியம்
    உனக்கொன்று கண்ணே!

    உன் முனகல் கூட
    அம்மா என ஒலிக்கக் கேட்டு
    மரத்த மனது
    துளிர்க்குதடி!

    பூவின் மென்மை
    தண்டின் உறுதி
    இலையின் கருணை
    வேரின் ஆற்றல்

    (தொப்புள்)கொடியில் பூத்த மலர்
    உன்னுள்ளும் இருக்கட்டும்

    உன் பூவிதழ் கோதலில்
    பூத்துச் சுரந்து
    மேகங்களுக்கு மேல் எனைப்
    பறக்க வைப்பவளே

    கண்ணுறங்கு மகளே
    காலங்கள் காத்திருக்கும்
    உனக்காக.

Page 2 of 149 FirstFirst 1 2 3 4 5 6 12 52 102 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •