உன் கன்னத்தில்
முத்தம் பதிக்க
எத்தனை முறை
வேண்டுமானாலும்
இறந்து பிறப்பேன்
பிரசவத்தில்....
புரியாத நீ...
தெரியாத நான்...
உன்னை
முத்தமிட்ட கணத்தில்
தெரிந்து கொண்டேன்..,
உனக்குப் புரிந்த மொழியை...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பாராட்டுக்கு நன்றி ஓவியன் அவர்களே
பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.
மூன்று கிலொ எடையுள்ள
கையடக்கப் பூவினை
மொழியில்லா உலகினுள் உலவிவிட்டு
விழி திறக்காமல் மறுத்தவளை
பெறுதற் கில்லா பேறு பெற்ற
எனக்குப் பிறக்காமல் பிரசவித்தவளை
ஏற்று முத்தமிடுகிறேன்
ஏச்சுக்கள் மகிழ்வாய் திரும்பியது
இந்நிழலுக்கு உயிராய்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
வெறுமனே கவிதை என்று படித்தால் அசத்தலான கவிதை மீரா...
அதற்கு முதற்ற்கண் பாராட்டுக்கள்.
ஆழ ஊன்றிப்பார்ப்பின்...
ஒரு தாய் ஒருபோதும் தன் குழந்தையை நன்றி கூறும் முகமாக முத்தமிடுவது கிடையாது. ஒரு பிரதிபலனையும் எதிர்பாராது அன்பை பொழிபவளே தாய். அப்படிப்பட்ட தாயின் முத்தத்தை தாங்கள் குற்றிப்பிட்டதுபோல சித்தரிக்க முடியுமா?
இது என்னுடைய கருத்து.
எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாய் அன்னையே
இத்தனை இன்பங்கள் உன்னுள் - மலர்ந்திட
முத்தம் பொழிந்திடும் உன்னில் பிறக்கநான்
எத்தனை கொண்டிருந்தேன் பேறு
- வெண்பா
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
Last edited by கண்மணி; 04-07-2008 at 01:11 AM.
திரியை தொடங்கி ஒரு சில நிமிடங்களிலேயே பதிவிட்டு இத்திரியை உயிரூட்டிய சிப்லி, விராடன் மற்றும் சிவாவுக்கும் நன்றிகள் பல..........
தொடர்ந்து என் அழைப்பையேற்றுவந்து பதிவிட்ட ஹசனீ , அரேன், ஓவியன் , பில்லா , மீரா....... ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்..........
தொடர்ந்து வந்து கவிதை தந்த அக்னி, நம்பிகோபாலன்,
ஆதவன் ஆகியோருக்கும்..... பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய ஓவிய மற்றும் கண்மணிக்கும் நாரதரின் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்.......
இத்திரியை தொடர்ந்து உயிர்ப்பாக வைத்திருப்பது உங்களனைவரதும் பொறுப்பு........
ஆஹா! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்........
இன்னும் எழுதுங்கள். இன்றைய கிறுக்கல்கள் நாளைய உலகின் தலைவிதியாக கூட மாறலாம்!
உங்கள் முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள்
Last edited by Narathar; 03-07-2008 at 02:16 PM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
முத்தமுரசிச் சொல்வேன்
காதோர ரகசியம்
உனக்கொன்று கண்ணே!
உன் முனகல் கூட
அம்மா என ஒலிக்கக் கேட்டு
மரத்த மனது
துளிர்க்குதடி!
பூவின் மென்மை
தண்டின் உறுதி
இலையின் கருணை
வேரின் ஆற்றல்
(தொப்புள்)கொடியில் பூத்த மலர்
உன்னுள்ளும் இருக்கட்டும்
உன் பூவிதழ் கோதலில்
பூத்துச் சுரந்து
மேகங்களுக்கு மேல் எனைப்
பறக்க வைப்பவளே
கண்ணுறங்கு மகளே
காலங்கள் காத்திருக்கும்
உனக்காக.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks