Results 1 to 4 of 4

Thread: கடவுளுக்குக் கூட காசேதான் கடவுளப்பா!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0

    கடவுளுக்குக் கூட காசேதான் கடவுளப்பா!


    கொட்டும் மழையில்
    கவிதை தெறிக்கிறது
    கொளுத்தும் வெயிலில்
    கவிதை கொப்பளிக்கிறது
    அதிகாலைக் கதிரவனில்
    கவிதை உதிக்கிறது
    தூரத்தெரியும் விண்மீன்களில்
    கவிதை ஜொலிக்கிறது
    சுழலும் மின் விசிறியில்
    கவிதை வீசுகிறது
    எரியும் தெருவிளக்கில்
    கவிதை பிரகாசிக்கிறது
    வீட்டு ரோஜாச்செடியில்
    கவிதை மலர்கிறது
    பழுத்த மாங்கனியில்
    கவிதை இனிக்கிறது
    சுளிக்கும் தாய் முகத்தில்
    கவிதை புன்னகைக்கிறது
    சுற்றியுள்ள செடி கொடிகளில்
    கவிதை மணக்கிறது
    ரூபாய் நோட்டுகளில் மட்டும்
    காந்திதான் சிரிக்கிறார்.
    கவிதையும் சிரிக்க வில்லை
    கவிஞனும் சிரிக்கவில்லை.

    எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
    junaidhasani@gmail.com

    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஏனோ தெரியவில்லை, பல கலைஞர்களின் நிலை இதுதான்...

    ஏற்கனவே இதே கருவினைக் கொண்டு நம்ம ஆதவன் வடித்த சில கவிதைகள் இந்த மன்றில் உண்டு...
    அவற்றையும் தேடிப் படித்துப் பாருங்கள்........

    ___________________________________________________________________________________________________

    அழகான கவிதைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.......

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சரஸ்வதி இருக்கும் இடத்தில் லட்சுமி இருக்கமாட்டார்களாம்...
    இது ஒரு தொன்ம வகை நம்பிக்கை!

    இரும்புப்பெட்டிக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?
    இது சிவப்பு வகை சிந்தனை!


    பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
    வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
    என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
    புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது -

    இது இன்றைய கவிஞர் குரலாய்
    கவி வைரமுத்து சொன்னது!

    -------------------------

    உங்கள் கவிதைக்கு 500 இ-பணம் அளித்து
    புதுப்பாதை அமைக்கிறேன்..

    வாழ்த்துகள் ஜூனைத்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காந்திச் சிரிப்பை கண்ணில் காட்டிவிட்டு
    கவிதை எழுதச் சொல்வார்...
    எழுதி முடித்ததும் எடுத்துக்கொள்வார்...
    காந்திச் சிரிப்பையும், கவிதையையும்!
    கவிஞன் தன் அடுத்த கவிதையை
    அழுகைக்கு எழுதுவான்...
    தன் அழுகைக்கு தானே எழுதுவான்!

    பெரும்பாலான கவிஞர்களின் பரிதாப நிலை உங்கள் கவி வரிகளில் தெரிகிறது ஜுனைத். பாராட்டுகள்.

    ஒரு சிறிய மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமோ...?

    அதாவது...கவிதையில் அடிக்கடி கவிதை என்ற சொல் வராமல்
    இப்படி இருந்தால்....

    கவிதை.......
    கொட்டும் மழையில் தெறிக்கிறது
    கொளுத்தும் வெயிலில் கொப்பளிக்கிறது
    அதிகாலைக் கதிரவனில் உதிக்கிறது
    தூரத்தெரியும் விண்மீன்களில் ஜொலிக்கிறது
    சுழலும் மின் விசிறியில் வீசுகிறது....


    எப்படி இருக்கும்?

    வாழ்த்துகள் ஜுனைத்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •