ரொம்ப நாளாவே மரபுக்கவிதைகள் எழுதணும்னு ஆசை. வெண்பா எழுதுவது எப்படிண்ணு மன்றம் வந்தப்புறம் நிறைய திரிகள் வாசிச்சன் அதிலருந்து எப்படியாவது எழுதிப்பழகணும்னு ஆசை அதிகமாயிடுச்சு. மன்றத்தை விட்டால் எழுதிப்பழக வேறு எந்த இடமிருக்கிறது... அதனால துணிந்து களத்திலறிங்கிட்டேன்.
என்ன ஆனாலும் சரி உருப்படியா ஒரு வெண்பாவாவது எழுதாம இந்த இடத்த விட்டு போறதா இல்ல.... உங்கள விடுறமாதிரியும் இல்ல.. பிழைதிருத்தி என்ன எழுதவைக்கிறது உங்க கைல தான் இருக்கு...
தனைமறந்த தந்தை வினைமறந்த தம்பி
எனைமறந்த காதல் விலைமறந்த வேலை
இவைநிறைந்த உள்ளம் துயில்மறந்த வேளை
கவிநிறைந்து வந்தமுதல் பா
***********************************************************************
நான்செய்த தீங்கென்ன நல்மனம் இல்லா
வான்செய்த தீங்காலே வெந்தெரியும் மண்பாலை
தான்செய்த தீப்பிழம்பு தந்ததிந்த கொப்பளங்கள்
நன்செய்ய ஏது மருந்து
***************************************************************************
உடல்வலி என்றே உருகிடும் மாந்தர்
குடல்வலி என்றே மருகிடும் மாந்தர்
உடல்நிலை எண்ணாது போவர் தமக்கு
மனவலி வந்தால் மறந்து
Bookmarks