களவு..
கட்டியணைத்த சுகத்தில்
மூண்ட தீ
பொசுக்கியது காதலை..
சாம்பலில் வழிகின்றன
கண்ணீர் துளிகளும்
சில கவிதைகளும்..
பார்வை புகுந்து நலம்
விசாரிக்க
சரி செய்கிறாய் மாராப்பை..
எத்தனை முறை எழுதிப் பார்த்தும்
அடங்கவில்லை
வார்த்தைக்குள் காதல்..
ஏனோ நானும்
ஒரு ராஜகுமாரனாய் உன்
கனவுகளில் வந்து போகிறேன் போலும்...
இல்லையெனில்,
இவ்வளவிற்குப் பிறகும்
என்னை காதலிக்க காரணம்தான் என்ன?
ஈர்ப்பு விசைகளற்ற கணங்களில்
துகளாய் பறக்கையில் நீயும்
வந்து போகிறாய் ஒரு தேவதையாய்..
சமுதாய பாரம்பரிய
எல்லைகளை வெட்டியே
விளையாடுகிறோம் நீண்ட நாட்களாய்..
எனில், நம்மை எல்லோரும்
அழைக்கிறார்கள்
ஒழுக்கமற்றவர்கள் என்று..
Bookmarks