Results 1 to 2 of 2

Thread: களவு..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    களவு..

    களவு..

    கட்டியணைத்த சுகத்தில்
    மூண்ட தீ
    பொசுக்கியது காதலை..

    சாம்பலில் வழிகின்றன
    கண்ணீர் துளிகளும்
    சில கவிதைகளும்..

    பார்வை புகுந்து நலம்
    விசாரிக்க
    சரி செய்கிறாய் மாராப்பை..

    எத்தனை முறை எழுதிப் பார்த்தும்
    அடங்கவில்லை
    வார்த்தைக்குள் காதல்..

    ஏனோ நானும்
    ஒரு ராஜகுமாரனாய் உன்
    கனவுகளில் வந்து போகிறேன் போலும்...

    இல்லையெனில்,
    இவ்வளவிற்குப் பிறகும்
    என்னை காதலிக்க காரணம்தான் என்ன?

    ஈர்ப்பு விசைகளற்ற கணங்களில்
    துகளாய் பறக்கையில் நீயும்
    வந்து போகிறாய் ஒரு தேவதையாய்..

    சமுதாய பாரம்பரிய
    எல்லைகளை வெட்டியே
    விளையாடுகிறோம் நீண்ட நாட்களாய்..

    எனில், நம்மை எல்லோரும்
    அழைக்கிறார்கள்
    ஒழுக்கமற்றவர்கள் என்று..
    Last edited by விகடன்; 29-04-2008 at 10:03 AM.

  2. #2
    இனியவர் anbu's Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    UAE
    Posts
    637
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஆஹா அற்ப்புதம் ராம்பால் அவர்களே !

    ஒழுக்கமற்றவர்களையும் ஒழுங்குபடுத்தும்
    உங்கள் கவிதை வரிகள் பிரமாதம்..............

    காதலர்களின் எல்லைதாண்டிய போக்கு
    ஆனாலும் காதல் அவர்களிடம் சாகவில்லை.................

    ஒவ்வொரு வரியும் சொல்கிறது உங்கள் கவித் திறனை.

    என்னை மேலும் கவிதை படிக்கத் தூண்டுகிறது உங்கள் கவிதைகள்.
    Last edited by விகடன்; 29-04-2008 at 10:03 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •