வீடு விட்டிறங்க
வாசலை நாடுகையில்
திடீர் பிரசன்னமாகும்
விளக்குமாறு....!!
வாசலைக் கடந்து
வீதியில் இறங்குகையில்
குறுக்கே தாவும்
கறுப்புப் பூனை..!!
வாகன ஒலி கேட்டு
வீதி விட்டகன்று
சிறகடித்து ஒழியும்
ஒற்றை மைனா...!!
காலை வாரவென்றே
காத்திருந்து தடுக்கி
கலகம் செய்யும்
வீதியோரக் கருங்கல்...!!
இத்தனையும் இணைந்து
முயன்றிருந்தால்
அகன்று போயிருக்குமோ
அந்த அகால மரணம்.....!!!
பி.கு - நேற்றைய தினம் எனக்கு நன்கு பரிட்சயமான ஒருவருக்கு ஈழத்தில் நிகழ்ந்த கோராமான அகால மரணத்தின் தாக்கத்தில் உதித்தது இந்தக் கவிதை...
செய்தி...
அந்த அண்ணனது ஆத்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கின்றேன்.....
Bookmarks