Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: அகால மரணம்....!!

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    அகால மரணம்....!!

    வீடு விட்டிறங்க
    வாசலை நாடுகையில்
    திடீர் பிரசன்னமாகும்
    விளக்குமாறு....!!

    வாசலைக் கடந்து
    வீதியில் இறங்குகையில்
    குறுக்கே தாவும்
    கறுப்புப் பூனை..!!

    வாகன ஒலி கேட்டு
    வீதி விட்டகன்று
    சிறகடித்து ஒழியும்
    ஒற்றை மைனா...!!

    காலை வாரவென்றே
    காத்திருந்து தடுக்கி
    கலகம் செய்யும்
    வீதியோரக் கருங்கல்...!!

    இத்தனையும் இணைந்து
    முயன்றிருந்தால்
    அகன்று போயிருக்குமோ
    அந்த அகால மரணம்.....!!!



    பி.கு - நேற்றைய தினம் எனக்கு நன்கு பரிட்சயமான ஒருவருக்கு ஈழத்தில் நிகழ்ந்த கோராமான அகால மரணத்தின் தாக்கத்தில் உதித்தது இந்தக் கவிதை...

    செய்தி...

    அந்த அண்ணனது ஆத்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கின்றேன்.....
    Last edited by ஓவியன்; 30-06-2008 at 08:59 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    உங்கள் உணர்வுகள் வார்த்தைஜில் நன்றாகவே பிரதிபலிக்கிறது நண்பா. ஆனால், சகுனங்களை நம்பினால் மரணங்கள் நடக்காதென்ற மூட நம்பிக்கையை வலியுறுத்துவதாக உங்கள் கவிதை அமைகிறது. இது ஒரு தவறான கருத்தியலாக எனக்கு படுகிறது.

    உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற வேகத்தில் மறுவளமாக சகுன்ங்களை நம்புங்கள் என்ற போதனையை செய்துவிட்டீர்களென நினைக்கிறேன். வேறு விதமாக வெளிப்படுத்தியிருக்கலம்.

    ஆழ ஊடுருவியவர்களால் அகாலமான நண்பருக்கு என் அஞ்சலிகளும்.
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    தீபன் உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு......

    ஒரு ஆற்றாமை, இயலாமை இரண்டின் வெளிப்பாடாக இந்தக் கவிதையை வரைந்தேன்....

    அறிவுக்குத் தப்பென்று தெரிந்தாலும் அவர் உறவினர்கள் மனதில் இப்படிப் பட்ட ஒரு ஆற்றாமையே இருக்கும்....

    அதன் வெளிப்பாடே இக் கவிதை....

    _______________________________________________________________________________________________________

    நன்றி தீபன், உங்கள் ஆலோசனைக்கேற்ப கவிதையின் போக்கினைக் கொஞ்சம் திருத்தி, திருப்பியுள்ளேன்...
    Last edited by ஓவியன்; 30-06-2008 at 03:25 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்திருந்தால் இந்த மரணம் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நமக்கு இந்த மாதிரி விஷயங்கள் முன்னே தெரிந்திருந்தால் நாம் இறைவனுக்கு மதிப்பு கொடுப்போமா என்று தெரியாது.

    கவிதை ஆழமாக இருக்கிறது, ஆனால் சகுனம் என்ற சகதியில் யாரும் விழவேண்டாம்.

    உங்களுக்குத் தெரிந்தவரின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்,

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்திருந்தால் இந்த மரணம் நடக்காமல் இருந்திருக்கலாம்.
    ,
    இந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்தக் கவிதை அண்ணா....
    மற்றும்படி சகுனத்தின் மேல் எனக்கும் நம்பிக்கை இல்லை....

    புரிதலுடான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    நன்று நண்பா... உங்கள் மாற்றத்தின்பின்னான கவிதை சரியாக அமைந்துள்ளது.
    தசாவதாரத்தில் கடைசியில் கமல் கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லுவதைப் போல சகுனத்தை நம்பினாலாவது நம் வாழ்க்கை வாழப்பட மாட்டாதா என்ற ஆதங்கத்தை சரியாக பிரதிபலிக்கிறது.
    வாழ்த்துக்கள். வருத்தங்கள்.
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உன்னோடு சேர்ந்து எனது ஆழ்ந்த வருத்தங்களும்..ஓவியா.

    ஆற்றாமை, அதிக வலி -இவை வாட்டும்போது
    மனம் தாவிப்பற்றும் கிளைகள் -
    ஊழ்வினை, விதி...

    நம்மை மீறிய நட்டங்கள் நடக்கும்போது எப்படி மனதைத் தேற்ற?

    அன்னாரின் குடும்ப சோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மனம் வேதனையான சம்பவங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிகையில் இப்படியான சில தேற்றல்கள் பிதற்றலென அறிவுக்குத் தெரிந்தும் சொல்லி தேற்ற வேண்டியிருப்பதை மறுக்க முடியாது..

    ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணாருக்கு..

    உங்களின் துக்கத்தோடு நானும் கலந்து கொள்கிறேன் ஓவியன் அண்ணா..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    உங்களது எண்ண வெளிப்பாடு எனக்குப் புரிந்தது ஓவியன். அதன்படி கவிதையினை அந்தப் போக்கிலே படித்து கவிதை நாயகரின் மனஅலைச்சலைப் படித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது.

    இறந்து போனபின்னர், இப்படி செய்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டாரோ என்று நினைப்பதுண்டு.. எனது உறவினர்/நண்பர் ஒருவர் இறக்கும்போது நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டேன். (என்னே அலைவரிசை!) சகுனங்களில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. ஆனால் நம்பியிருந்தால் ஆகியிருக்குமோ என்ற நப்பாசை.

    இதைக் கவிதையாகப் பார்க்கும்போது சிலையின் அழகு தெரிகிறது
    உங்கள் நண்பரின் இரங்கலாகப் பார்க்கும்போது உளிபிடித்த கையின் வலி தெரிகிறது.

    இன்னும் நிறைய படைப்புகள் எழுதுங்கள். இரங்கல்களாக அல்ல.

    அன்புடன்
    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தற்பொழுதுதான் இந்தச் செய்தியைப் பார்த்தேன்.
    பார்த்துவிட்டு மன்றம்வந்தால், தெரிந்த உறவு பிரிந்த, வேதனை வெளிப்படும் கவிதையும் மன்றில்...

    தினம் காலையில் எழுந்து,
    கணினியை எழுப்பி,
    தினச்செய்தி பார்த்ததும்,
    வலிக்கும் செய்திகளும் தரும் ஒரு ஆறுதல்,
    இன்று உன் சொந்தங்கள் நலம் என்று...

    செய்தி பார்த்து முடித்து, மூடிய நொடியில்,
    மனதில் மீண்டும் சலனம்;
    இன்று ஏது நடக்குமோ என்று...

    தினம் காலையில்,
    இணையச்செய்திகளுக்குள் மரணச்செய்தி
    தேடும் என் மனதுக்குப் புரியவில்லை;
    நான் தேடுவது சரியா என்று...

    தேடல் தொடர்கின்றது...
    எதுவரை என்று தெரியாமலே...

    Quote Originally Posted by ஆதவா View Post
    இதைக் கவிதையாகப் பார்க்கும்போது சிலையின் அழகு தெரிகிறது
    உங்கள் நண்பரின் இரங்கலாகப் பார்க்கும்போது உளிபிடித்த கையின் வலி தெரிகிறது.
    Last edited by அக்னி; 30-06-2008 at 08:02 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    இதைக் கவிதையாகப் பார்க்கும்போது சிலையின் அழகு தெரிகிறது
    உங்கள் நண்பரின் இரங்கலாகப் பார்க்கும்போது உளிபிடித்த கையின் வலி தெரிகிறது.

    இன்னும் நிறைய படைப்புகள் எழுதுங்கள். இரங்கல்களாக அல்ல.
    நன்றி ஆதவா,

    நிறைய எழுதவேண்டுமென நானும் நினைத்துக் கொள்வேன், ஆனால் நேரம் அதற்கு இடம் கொடுக்காது முரண்டு அடம் பிடிக்கும்...

    இருந்தாலும், நிறைய எழுத வேண்டும், நிச்சயமாக எழுதுவேன்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதவா சொன்னதைப்போல உளியின் வலி தெரிகிறது. மிகச் சரியான எண்ண ஒட்டங்கள். ஒரு மரணத்துக்குப்பிறகு இப்படித்தான் நினைக்கத் தோன்றும்.

    இனி இப்படி நினைக்கா வண்ணம் எந்த நெருங்கிய நட்புக்கும் நேரக்கூடாது என்றெ நெஞ்சம் நாடுகிறது. உங்கள் நன்பரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஓவியன். வார்த்தைகள் கவிதையில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •