என்னவளே
என் வீட்டில் நீ விட்டுச் சென்றவுன்
கைகுட்டை பல கதைகள் சொன்னது
உன் கண்ணங்களை பற்றி கவிதை பாடியது
பருக்களைப் பற்றி பாடம் நடத்தியது
உன் உதட்டுச் சாயம் தன்மேல்
ஒட்டிய உறவைச் சொன்னது
உன் உள்ளங்கையில் அடங்கி
பருகிய உஷ்ணத்தை சொன்னது(வெப்பத்தை சொன்னது)
எப்படி கேட்டும்
எதுவும் சொல்லவில்லை
உன்னில் தொலைந்தயென்
இதயத்தை பற்றி
உன்னைப் போலவே
உன் கைகுட்டையும்
Bookmarks