Results 1 to 9 of 9

Thread: உஷ்……….. பேசாதீங்க

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0

    உஷ்……….. பேசாதீங்க

    அளவு கோல் தேவையில்லை
    அவ்வப்போது கடித்துக்கொள்ளும்
    நாச்சேதாரமும் இல்லை
    ஒன்றுமில்லாததிற்கெல்லாம்
    காற்றில் வீணைமீட்டும் அவசியமில்லை
    எப்படி பேசுவதன்று
    தலையை பிடித்துக்கொள்ளவும்
    இப்படியா பேசினேன்று
    தலையில் அடித்துக்கொள்ளவும்
    அவசியமில்லை
    பழைய வார்த்தை
    தங்கிப் போயிருக்குமோவென்று
    பம்மிப் பேசவும் விம்மி அழுகவும்
    தேவையே இல்லை
    ஒரு வாசகமென்றாலும்
    அது பெரு வாசகமென்று
    முச்சந்தியில் நிற்க வைத்து
    நாக்கைப் பிடுங்கும் கேள்வி
    எப்பொழுது வருமென்று
    எதிர்பார்க்கத்தேவையில்லை
    உங்கள் நாவுகளே நீண்டு
    உங்கள் கழுத்துக்களை
    கட்டி நெறிக்கும்
    கனவுகளை கண்டிப்பாய்
    காணும் அவசியமில்லை
    எல்லாவற்றிக்கும் மேலாய்
    உள்ளாறும் தீயினால் சுட்ட புண்
    ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று
    கீழார்களிடமெல்லாம்
    தவணை முறையில்
    உபதேசம் வாங்கிக் கட்டிக்கொள்ளும்
    நிலையெல்லாம் ஏற்படாது
    ஒவ்வொரு சாதனைகளுக்குப் பின்
    சில மௌனங்களும்
    ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின்
    சில நாவுகளும்
    தொங்கிக் கொண்டிருக்கின்றன
    என்பதை உணர்ந்துகொள்ளும் போது.

    எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
    mahasin2005@yahoo.co.in
    Last edited by எஸ்.எம். சுனைத் ஹஸனீ; 28-06-2008 at 06:53 AM.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    ஒவ்வொரு சாதனைகளுக்குப் பின்
    சில மௌனங்களும்
    ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின்
    சில நாவுகளும்
    தொங்கிக் கொண்டிருக்கின்றன
    என்பதை உணர்ந்துகொள்ளும் போது.
    அருமையான வரிகள்.
    உணர்ந்ததால் தானோ என்னவோ... படித்தும் பதில் போடாமல் போய்விட்டார்கள். நானும் எஸ்கேப்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    ரொம்ப நன்றி கவிதாக்கா. உங்களுக்காச்சும் பதில் போடணும்னு தோணுச்சே.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    சொற்களும் மௌனமும் வேறு வேறு வர்க்கங்கள்..
    ஆனாலும் சொற்களுக்கிடையிலான மௌனங்களின் அர்த்தத்தை
    முன் - பின் சூழ்ந்த சொற்கள்தாம் தீர்மானிக்கின்றன..
    மெளனத்தை விவரிக்க இதைவிட வேறு வார்த்தைகள் உண்டா?

    மெளனம் நமக்கு நல்லதா கெட்டதா?

    மெளனம் எந்தெந்த நேரத்தில் நமக்குத் தேவைப்படுகிறதோ அதை அந்தந்த நேரத்தில் மெளனிக்கப் பழகவேண்டும். வார்த்தையின் அளவும், வார்த்தைக்கு இடைப்பட்ட மெளனமும் நம்மை எவ்வளவு தூரத்தில் வைக்கவேண்டுமோ அவ்வளவு தூரத்தில் வைக்கும்.

    வார்த்தையின் வீரியம் அடுத்தவரைப் பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும். மெளனத்தின் தூரம், அடுத்தவர் எரிச்சலைக் கிளப்பாத வண்ணம் இருக்கவேண்டும். அவசர வார்த்தைகளும் நிதான மெளனமும் ஆகாதது நமக்கு.

    என்றேனும் உணர்ந்துகொள்ளும் போது நமக்குள்ளான நாவடக்கம் எத்தனை தூரத்தில் நிலைத்து நிற்கும்?

    கவிதை உங்களை யோசிக்க வைத்து எழுதியிருக்கிறது.. ஆழப்புரிதல் அதில் ஆழப்புதைந்திருக்கிறது.

    வாழ்த்துகள் ஜுனைத்


    Quote Originally Posted by kavitha View Post
    அருமையான வரிகள்.
    உணர்ந்ததால் தானோ என்னவோ... படித்தும் பதில் போடாமல் போய்விட்டார்கள். நானும் எஸ்கேப்.
    சிலர் சொல்வாங்களே "நெத்தியடி" அப்படீன்னு... இது என்ன வகை "அடி"?
    நல்லவேளை.. நான் இப்பத்தான் பார்த்தேன்./

    Quote Originally Posted by mahasin2005 View Post
    ரொம்ப நன்றி கவிதாக்கா. உங்களுக்காச்சும் பதில் போடணும்னு தோணுச்சே.
    ஜுனைத்.. இங்கே வருபவர்கள் தொழில்முறைக் கவிஞர்களோ விமர்சகர்களோ அல்ல. அவசர யுகத்தில் சிறிதுநேரம் நிதானிக்க வருபவர்கள். தங்கள் திறமையைக் காட்டிகொள்ள இடமாக இதை வைத்திருக்கிறார்கள். ஏதாவது நிர்பந்தமாகவோ பணிப்பளுவாகவோ அல்லது வேறெந்த காரணமாகவோ பதில் போடாமல் போயிருக்கலாம்... உங்கள் பதிலில் ஒளிந்திருக்கும் கேள்வியை உங்களுக்கே நீங்கள் கேட்டுப்பாருங்கள்.. உண்மை விளங்கும்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    சிலர் சொல்வாங்களே "நெத்தியடி" அப்படீன்னு... இது என்ன வகை "

    கடைசியா ஒரு வாசகத்தை சொல்லி எனக்கு ஒரு அடி அடிச்சுட்டீங்க. உங்கள் வார்த்தை நன்றாய் உள்ளத்தில் தைத்திருக்கிறது ஆதவா.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by mahasin2005 View Post
    சிலர் சொல்வாங்களே "நெத்தியடி" அப்படீன்னு... இது என்ன வகை "

    கடைசியா ஒரு வாசகத்தை சொல்லி எனக்கு ஒரு அடி அடிச்சுட்டீங்க. உங்கள் வார்த்தை நன்றாய் உள்ளத்தில் தைத்திருக்கிறது ஆதவா.
    உடலில் மருந்துக்காக ஊசியிடுவதற்கும், வெறுமே ஊசியைக் குத்துவதற்கும் வித்தியாசம் உண்டு ஜுனைத்.. நான் வலியோடு குத்தினால் கூட "பக்க"விளைவுகள் நன்றாகவே இருக்கும். சிலர் ஊசியைத் திருப்பிக் குத்தி குருதியெடுத்ததும் உண்டு. நீங்கள் வாஞ்சையோடு தடவுகிறீர்கள்...

    அன்புடன்
    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ரொம்பவே வித்தியாசமான கரு!

    பேசினால்தானே இங்கே பிரச்சினைகள்.....
    பேசாமலே இருந்துவிட்டால்... இது தீர்வா... இது தீர்வை தராது.. உள்ளத்திற்கு சோர்வை தான் தரும்...

    இடம் பொருள் பார்த்து, பேசுகின்ற வார்த்தைகளுக்கு, எப்பொழுதுமே மரியாதை உண்டு.
    அடுத்தவர் மனம் புண்படாவண்ணம் பேசுவது கலை...

    எத்தனை பேருக்கு அது கைவந்த கலை?!

    யோசிக்க வைத்தீர்கள்... வாழ்த்துக்கள் நண்பரே! தொடருங்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அருமை ஜூனைத்..

    அளவான அவசியத்துக்கேற்ற மௌனம் - ஒரு ரத்தினம்.

    கவீ தொடங்க
    ஆதவன் மிக ஆழ்ந்து அலச
    ஷீ உணர்ந்து எழுத

    பின்னூட்டங்களால் மின்னும் திரி இது!

    அனைவருக்கும் என் அன்பு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஒவ்வொரு சாதனைகளுக்குப் பின்
    சில மௌனங்களும்
    ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின்
    சில நாவுகளும்
    தொங்கிக் கொண்டிருக்கின்றன
    என்பதை உணர்ந்துகொள்ளும் போது.
    முதலில் மன்னியுங்கள் ஜூனைத் அண்ணா...!
    ஏற்கனவே படித்து அசந்த கவிதை.. பின்னூட்ட மிட நேரம் ஒத்துழைக்கவில்லை..


    உங்களின் அழகான வரிகளில் மிளிர்கிறது கவிதை..!!

    பேச்சின் அவசியத்தில்
    மௌனம்.. வில்லங்கம்..

    அமைதியின் அவசியத்தில்
    மௌனம்.. மாணிக்கம்..!

    வெற்றிக்கு பின்..
    மௌனித்தல் தான்..
    மேன்மை...!!


    சில நேரங்களில் தலைக்கனமென தவறாகக் கொள்ளவும் வாய்ப்புண்டு..

    தோல்வியின் பின்..
    அழுந்தி உடுத்தனும்.
    மௌனம்..


    சில நாவுகள் நம் உணர்வுகளை அப்போது தான்.. பதம் பார்க்கும்...!!

    அவசியமும்..
    ஆளுமையும்
    ஒரு சேர...
    மௌனப் பிகடனம்..
    அவ்வப்போது
    தேவையே...!!


    மனமார்ந்த பாராட்டுகள் சகோதரரே..!!


    பெரியண்ணாவின் ரத்தினப் பதில்..
    இம்புட்டு நேரம் நான் சொல்ல விளைந்ததைச் சொல்லிவிட்டது...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •