Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 18 of 18

Thread: ரோ(ல்)(தனை) மாடல்..!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    இரசித்தேன் கவிச்சமர் விள்ளலை..!
    நன்றி அண்ணா...
    Quote Originally Posted by நம்பிகோபாலன் View Post
    பற்றாமலே பற்றி எகிறுது பெட்ரோலின் விலை..
    உண்மைதான்...
    இன்றைய நிலையில் அனைத்தினது விலை உயர்வுக்கும், அடிப்படைக் காரணம் எரிபொருள் விலை உயர்வுதானே...
    Quote Originally Posted by கண்மணி View Post
    பெட் - ரோலை -செல்லப் பாத்திரத்தை
    பேட் - ரோலாக்கிய =வில்லப் பாத்திரமாக்கிய

    மிகவும் ரசித்தேன் கண்மணி...
    பேட் ரோலாக நான் எங்கே மாற்றினேன்...
    அதுவாக மாறிடுத்து...
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாழ்த்துகள் பிரிச்சி மேயும் புலியாரே.
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிவா.ஜி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    ஒருமையில் விளிப்பதற்கு மன்னிக்கவும், விளிப்பு எத்தகையதானதாக இருந்தாலும் அன்பை மட்டுமே குறிக்குமென்பதால்.
    முகில்ஸ் அண்ணலே...
    ஒருமை எனக்கு இனிமையையே தருகின்றது. இப்பதிவோடு நிற்கட்டும் மன்னிப்பு. இனியும் தொடரவேண்டாமே...
    பாராட்டுக்களுக்கும், அன்புக்கும் நன்றி...
    மனதை மகிழ்விக்கும் அழகிய பின்னூட்டம்...
    Quote Originally Posted by அனு View Post
    நன்றிகள் அக்னி,!!
    நன்றி அனு...
    Quote Originally Posted by ஆதவா View Post
    எனக்கு இந்தக் கவிதையில் உடன்பாடில்லை நண்பா! (மன்னிக்கவும். இது என் கருத்து மட்டுமே!)
    மன்னிப்புக் கேட்க என்ன இருக்கின்றது ஆதவரே...
    செதுக்கல்களை நான் எப்போது தட்டிக் கழித்திருக்கின்றேன்.?
    செதுக்கல்களால் நான் களிப்படைகின்றேன்...

    நான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லத் தவறிவிட்டேனா..?

    உண்மையில், நான் கொண்ட கரு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தின் மீதானதே அன்றி பெட்ரோலியம் மீதானதல்ல...

    பெட்ரோல் விலை ரூ.71 இந்தத் திரிக்கு போட நினைத்த பின்னூட்டம், கொஞ்சம் பெரியதாகிட, கவிதையாகப் பதிந்து விடுவோம் என்று பதிந்துவிட்டேன்.

    நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டுமோ, நான் சாடுவது விலையேற்றத்தை என்று...

    எரிச்சலில் எரிப்பது, என்று நான் நினைத்தது,
    எரித்தே ஆகவேண்டும், ஆனால் விலையேற்றத்தினால் எரியும் மனத்தோடு என்று...

    எரிப்பதும் நீதான் - எரிப்பது எரிபொருள் என்று(ம்) சொல்லலாமல்லவா...
    எரிவதும் நீதான் - எரிந்து போவது
    எரிய வைப்பதும் நீதான் - வயிறெரிய வைப்பது

    இவையே நான் நினைத்த அர்த்தம்...

    விலையேற்றம் என்ற பதத்தைக் குறிப்பிட்டால், பொருந்தாது போய்விடுமோ என்று எண்ணினேன்...

    ஆதவர் என்னைத் தெளிவுறுத்த வேண்டுகின்றேன்...

    நன்றி ஆதவா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அக்னி, இதுவரையிலும் முழு கவிதையில் உடன்பாடில்லை என்று உங்களைப் பார்த்து சொல்லக் காரணமே நீங்கள் எனது உற்ற நண்பர் என்பதால் மட்டுமே! மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் என்னுடன் உண்டு. அதோடு, அப்படி ஒரு கவிதையை பிழை சொல்லும் அளவுக்குத் தகுந்தவனா என்ற தாழ்வு மனப்பான்மையும் உண்டு.. என்றாலும் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல்தான் எழுதினேன்... எங்கே இந்த பதிவினால் பதிவர் சோர்ந்து போய் எழுதாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் தான் அதிகம் மேவியிருக்கிறது அக்னி.

    நீங்கள் பெட்ரோல் விலையேற்றத்தைக் குறிப்பிட்டு எழுதியமை என்றும் நான் அறிவேன். ஆனால் கவிதை அப்படி போகாத காரணத்தினால் அது தவறு என்று சொன்னேன். ஆனால் நீங்கள் விலையேற்றத்தையும் பெட்ரோலையும் கலந்து கவிதையில் சாடிவிட்டீர்கள். அதுதான் சிறு குழப்பம்,/

    பெட்ரோல் விலையின் வளர்ச்சி என்று கவிதையின் வரிகளைப் பார்த்தால் அது மிகச் சரியே!

    ஆனால்

    எரிச்சலில்
    உன்னை எரித்தாலும்,
    எரிந்துகொண்டே
    ஏறிப்போகின்றாய்...
    எரிச்சலில் உன்னை எரிப்பது என்ற வரியில் " உன்னை" என்பது பெட்ரோலையே குறிக்கிறது. அன்றி பெட்ரோல் விலையேற்றத்தை அல்ல... "உன்னை" என்ற பதம் விலையேற்றத்தைக் குறிப்பதானால் எரிப்பது எப்படி? (to burn)

    எரிப்பதும் நீதான் - எரிப்பது எரிபொருள் என்று(ம்) சொல்லலாமல்லவா...
    அப்படி என்றால் நீ என்பதற்கு டெஃபனிசன் பெட்ரோல் அப்படித்தானே!! அப்படியென்றால்

    எரிய வைப்பதும் நீதான் - வயிறெரிய வைப்பது - வயிறு எரிய வைப்பது பெட்ரோல் என்பது அர்த்தமாகிறது.... நீங்கள் உங்கே விலையேற்றத்தைக் குறிப்பிட ஒருவரியும் தென்படவில்லை.

    கண்மணியின் பின்னூட்டத்தில் சொன்னது போல, பெட்ரோலை bad role ஆக சித்தரித்து விட்டீர்கள்...

    உங்கள் உள்ளார்ந்த கருத்து சரியே! அதன் வெளிப்பாடாக வந்த கவிதை சற்றே இடறலைச் சந்தித்துவிட்டது உண்மையே!!

    புரிதலுக்கு நன்றி
    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    உங்கள் உள்ளார்ந்த கருத்து சரியே! அதன் வெளிப்பாடாக வந்த கவிதை சற்றே இடறலைச் சந்தித்துவிட்டது உண்மையே!!
    புரிந்து கொண்டேன் ஆதவா...

    தெளிவான விளக்கம். அதனால் நான் விட்ட தவறுகள் நன்றாகத் தெரிகின்றன.

    நான் எப்போதுமே என் மீதான எந்தவொரு விமர்சிப்பையும், தவறாகக் கொள்வதில்லை.
    அவை என்னைச் சீராக்கத்தான் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
    அந்தவகையில் உங்கள் செதுக்கல்கள் தொடரட்டும். அழகுற நான் தயாராகத்தான் உள்ளேன்.

    நவரசக்கவிக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது. நான் வியக்கும் மன்றக் கவிகளில் நீங்களும் ஒருவர்.
    மன்றத்தில், சமகாலத்தில், அதுவும் நல்ல நட்போடு பயணிப்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #17
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அழகிய கவிதையும், அருமையான உரையாடல்களும், பின்னூட்ட கவித்துளிகளும்..... கவிதைப்பயணிக்க இந்த எரிபொருள்களும் தேவை தானே! தொடர்ந்து எழுதுங்கள் அக்னி. வாழ்த்துகள்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அழகான கவிதை
    அழகான பின்னூட்டங்கள்
    உண்மையான விமர்சனங்கள்
    கற்றுக் கொண்டேன்
    நிறைய விடயங்கள்
    அனைவருக்கும் நன்றிகள்...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •