Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 117

Thread: கலைவேந்தனின் மீராவின் கண்ணன்...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    கலைவேந்தனின் மீராவின் கண்ணன்...!

    மீராவின் கண்ணன் - ஓர் உன்னதக் காதல் ஓவியம்

    1.
    ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
    ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்!
    மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
    சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!


    2.
    என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
    என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
    இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
    நன்றே வந்து நகையாட்டு கண்ணா!


    3.
    நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
    ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
    வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
    சேயாக என்னை சீராட்டு கண்ணா!


    4.
    துயிலாடும் போதென் துகிலாடு மென்று
    துணைகாக்க உன்னை தருவாயென் றெண்ணி
    துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
    தூயவனே என்மாயவனே எனைகாத்திடு கண்ணா!


    5.
    தீராமல் விளையாடி ஓயாத உன்னை
    சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
    ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
    பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!


    தொடர்வாள் மீரா!

  2. Likes மதி liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    தொடருங்கள் வேந்தரே
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கண்ணன், முருகனைப் பாடவென்றால்
    கன்னல் தமிழுக்கும் தனி ஆர்வம் போலும்!

    அன்று கண்ணதாசன்..
    இன்று கலைவேந்தன்..

    சந்தம் சிந்தும் சொல்லழகோடு
    சொந்தம் பேசும் மீரா கதை வளரட்டும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    3.
    நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
    ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
    வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
    சேயாக என்னை சீராட்டு கண்ணா!
    ஓயாமால் பாராட்டுபவளை...
    சேயாக சீராட்ட வந்திடுவான்.. கண்ணன்..

    மீராவின் காவியம்
    இன்னும் வளரட்டும்...

  6. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உண்மையான அன்பும், உண்மைக் காதலும்
    என்றும் வீண் போவதில்லை....!!

    கண்ணனின் காதலியாய்
    கவிதை வடிக்கும் கலைவேந்தனுக்கு
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.........!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #6
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    தொடர் வரிகள் காண அவலுடன் காத்திருக்கிறேன்....

    தொடருங்கள் உங்கள் படைப்பை....
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  8. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இங்கே தமிழோடு விளையாடிக்கொண்டிருக்கிறீர்களே!!

    ஒவ்வொன்றும் தமிழ்கொஞ்சும் அமுதம். இருமுறை படித்தேன்.

    தொடருங்கள்.. உடன் வருகிறோம்.. இப்பாவினை ஏதேனும் மரபு இலக்கணங்கள் வைத்து எழுதியிருப்பின் இன்னும் சுவை கூடும் என்பது என் தாழ்மையான கருத்து.,.

    அன்புடன்
    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    தொடருங்கள் வேந்தரே
    உங்க ஆசிக்கு நன்றி அண்ணா!

    Quote Originally Posted by இளசு View Post
    கண்ணன், முருகனைப் பாடவென்றால்
    கன்னல் தமிழுக்கும் தனி ஆர்வம் போலும்!

    அன்று கண்ணதாசன்..
    இன்று கலைவேந்தன்..

    சந்தம் சிந்தும் சொல்லழகோடு
    சொந்தம் பேசும் மீரா கதை வளரட்டும்!
    என்றும்போல தாய்போல் பாராட்டும் இளசுக்கு என் வணக்கங்கள்!
    Quote Originally Posted by அறிஞர் View Post
    ஓயாமால் பாராட்டுபவளை...
    சேயாக சீராட்ட வந்திடுவான்.. கண்ணன்..

    மீராவின் காவியம்
    இன்னும் வளரட்டும்...
    நன்றி அறிஞரே! கண்டிப்பாய் வளரும்!

    Quote Originally Posted by ஓவியன் View Post
    உண்மையான அன்பும், உண்மைக் காதலும்
    என்றும் வீண் போவதில்லை....!!

    கண்ணனின் காதலியாய்
    கவிதை வடிக்கும் கலைவேந்தனுக்கு
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.........!!!

    உங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் சிரமேற்கொள்கிறேன் ஓவியன்! நன்றி!


    Quote Originally Posted by crisho View Post
    தொடர் வரிகள் காண அவலுடன் காத்திருக்கிறேன்....

    தொடருங்கள் உங்கள் படைப்பை....
    நன்றி கிஷோர்! உங்க பாராட்டை ஏற்கிறேன்!

    Quote Originally Posted by ஆதவா View Post
    இங்கே தமிழோடு விளையாடிக்கொண்டிருக்கிறீர்களே!!

    ஒவ்வொன்றும் தமிழ்கொஞ்சும் அமுதம். இருமுறை படித்தேன்.

    தொடருங்கள்.. உடன் வருகிறோம்.. இப்பாவினை ஏதேனும் மரபு இலக்கணங்கள் வைத்து எழுதியிருப்பின் இன்னும் சுவை கூடும் என்பது என் தாழ்மையான கருத்து.,.

    அன்புடன்
    ஆதவன்
    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதவா!

    இலக்கணங்கள் பார்த்தால் நம் உணர்வுகள் தடைபடாமல் வருமா என்று தெரியவில்லை!

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி!

  10. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதவா!

    இலக்கணங்கள் பார்த்தால் நம் உணர்வுகள் தடைபடாமல் வருமா என்று தெரியவில்லை!

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி!
    [/QUOTE]

    கவிதை அருமை கலைவேந்தரே, ஆதவனின் கருத்தே என் கருத்தும்..

    இலக்கணத்தல் உள உணர்வு தடைபடாது வேந்தரே முயற்சியுங்கள்..

    தொடருங்கள் பின் தொடர்கிறோம்..

    வாழ்த்துக்கள்..
    அன்புடன் ஆதி



  11. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    தொடருங்கள் வேந்தரே!!!
    மிக அருமை...
    இன்னும் தர என் வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி நண்பர்களே! இன்று இரவுக்குள் அடுத்த பகுதியை வழங்குகிறேன்!

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மீராவின் கண்ணன் தொடர்ச்சி........!


    6.
    பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய்
    சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய்
    ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
    வேதத்தின் மூலனே வெல்எனை கண்ணா!



    7.
    பார்த்தனின் மயக்கம் தெளிவித் தவனே
    தேர்தனை வலித்து தேர்வித் தவனே
    ஓர்முறையேனும் என்னருகில் வந்தென்
    மார்பகம் புதைந்துன் மனம்மகிழ் கண்ணா!



    8.பூவிதழ் உந்தன் பூமணம் காண
    தாவியுன் செவ்விதழ் சுவைத்திட ஏங்கும்
    பாவியென் பாவம் தொலைத்தெனை ஏந்தியே
    ஓவிய மாயுறைந் திடவா கண்ணா!



    9.
    உந்தன் ஓர்முத்தம் பெறவேண்டி நானும்
    எந்தன் ஓர்ஜென்மம் இழப்பேனே கண்ணா!
    சிந்தும் ஓர்முத்து இதழமுதம் என்றும்
    எந்தன் ஓராயுள் காத்திருக்கும் கண்ணா!



    10.
    கண்ணாடி முன்நின்று பார்த்தே உன்னைப்
    பெண்ணாக நான் மாற்றினேனே! நானும்
    நீயாக மாறித்தான் போனேன் என்றும்
    சேயாக என்னோடு வாழாயோ கண்ணா!



    தொடர்வாள் மீரா.....!

  14. Likes மதி liked this post
Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •