Page 10 of 10 FirstFirst ... 6 7 8 9 10
Results 109 to 117 of 117

Thread: கலைவேந்தனின் மீராவின் கண்ணன்...!

                  
   
   
  1. #109
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0


    92.
    ஊனாகி உயிருக்கு விருந்தாகி நீயும்
    தேனாகி உடலுக்கு மருந்தாகி நின்றாய்
    நானாகத் தேடியுன் பதமடைந் தேனே
    கோனாகி எந்தன் குறைதீர்ப்பாய் கண்ணா...!

  2. #110
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0


    93.
    உன்கற்றைக் குழலென் மனம்கட்டிப் போடும்
    முன்கற்ற யாவுமே மறந்தொழிந்து போகும்
    பின்பற்ற குருவிலா மாணாக்கன் போலே
    உன்பற்று தேடியே உருகினேன் கண்ணா..!

  3. #111
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0


    94.
    ஓதுவார் வேதத்தின் உட்பொரு ளானாய்
    சூதுவா தறிந்துநீ பாரதம் வென்றாய்
    மாதுக்கள் சூழவே வலம்வந்து சென்றாய்
    தீதின்றி நானும்உனைச் சேர்வேனோ கண்ணா...

  4. #112
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0


    95.
    வெண்ணெயுண் டேநீயுன் வாய்துடைத்த போதும்
    கண்ணிலே காதலைக் காட்டி நின்றபோதும்
    மண்ணை யள்ளிநீ மகிழ்ந்துண்ட போதும்
    பெண்ணிவள் காதலை அறிந்தாயோ கண்ணா..!

  5. Likes ஆதி, மதி liked this post
  6. #113
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இதனை மனமொன்றி படிப்பதற்க்கான சூழல் இன்று தான் அமைந்தது என்றே நினைக்கிறேன்...ஒவ்வொரு வரிகளையும் ஆழ்ந்து அதன் சுவைதனை அறிந்து படிக்கையில் தித்திக்கிறது மீராவின் கண்ணன்...வாழ்த்துகள் கலை’வேந்தே’...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #114
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post

    93.
    உன்கற்றைக் குழலென் மனம்கட்டிப் போடும்
    முன்கற்ற யாவுமே மறந்தொழிந்து போகும்
    பின்பற்ற குருவிலா மாணாக்கன் போலே
    உன்பற்று தேடியே உருகினேன் கண்ணா..!
    உங்கள் கவித்திறனால் எங்கள் மனம்கட்டிப்போட்டு விட்டீர். மீராவின் வசம் கண்ணன் சொக்குகிறாரோ இல்லையோ, தங்கள் கவிதைத் தமிழின் வசம் நாங்கள் சொக்கிவிட்டோம். பாராட்டுகள் கலைவேந்தன். தொடர்ந்து படையுங்கள் இனிய காதற்கானங்களை.

  8. #115
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    மீராவின் பார்வையிலே, கண்ணன் ஒருவன் தான் நாயகன்... மற்ற ஜீவராசிகள் அனைத்துமே அவனது நாயகிகள்தான்...மிக உயர்ந்த தத்துவம் இது....அதனை வெளிக்கொணர்கிறது உங்கள் கவிதை வரிகள்.
    நன்றி.

  9. #116
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஐம்புலனும் கண்ணனின் சிந்தையிலேயே லயித்திருக்க அவன் மேல் கொண்ட அதீத காதல் என்னும் பக்தி அல்லது பக்தி என்னும் காதலின் விளைவாய் விழுந்தனவோ மீராவின் கண்ணன் கவிப்பூக்கள். அனைத்து பூக்களுமே மாலையாய் கோர்த்து மீரா கண்ணனுக்கு தன் அன்பால் இடுகிறாள்.

    அழகுதமிழ் சொட்ட சொட்ட வடித்துள்ள கவிதைகளுக்கு நன்றி கலைவேந்தரே.

  10. #117
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post


    95.
    வெண்ணெயுண் டேநீயுன் வாய்துடைத்த போதும்
    கண்ணிலே காதலைக் காட்டி நின்றபோதும்
    மண்ணை யள்ளிநீ மகிழ்ந்துண்ட போதும்
    பெண்ணிவள் காதலை அறிந்தாயோ கண்ணா..!
    இந்த கவிதைக்குள் ஒரு அழகான விடயம் ஒளிந்திருக்கிறது

    இது வெறும் காதல் பாடலாக மட்டுமே வெளிப்படவில்லை

    மீரா கண்ணனின் ஒவ்வொரு பிராயத்திலும் அவனுடன் வாழ்ந்து வளர்ந்து வருதலையும் இது குறிக்கிறது

    கண்ணன் வெண்ணை உண்டதும் மண்ணை தின்றது சிறு பிராயத்தில் அந்த தருணத்திலும் என் காதலை அறிந்தாயா கண்ணா என்பது அவனுடம் அவள் அந்த வாழ்வை வாழ்கிறாள் என்பதையும் குறிக்கிறது அல்லது கண்ணன் தண்ணுடன் வாழ்கிறான் என்பதௌ குறிக்கிறது

    மிகவும் லயிக்க வைத்த பாடல் ஐயா

    வாழ்த்துக்கள் ஐயா
    Last edited by ஆதி; 17-09-2012 at 06:54 AM.
    அன்புடன் ஆதி



Page 10 of 10 FirstFirst ... 6 7 8 9 10

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •