92.
ஊனாகி உயிருக்கு விருந்தாகி நீயும்
தேனாகி உடலுக்கு மருந்தாகி நின்றாய்
நானாகத் தேடியுன் பதமடைந் தேனே
கோனாகி எந்தன் குறைதீர்ப்பாய் கண்ணா...!
92.
ஊனாகி உயிருக்கு விருந்தாகி நீயும்
தேனாகி உடலுக்கு மருந்தாகி நின்றாய்
நானாகத் தேடியுன் பதமடைந் தேனே
கோனாகி எந்தன் குறைதீர்ப்பாய் கண்ணா...!
93.
உன்கற்றைக் குழலென் மனம்கட்டிப் போடும்
முன்கற்ற யாவுமே மறந்தொழிந்து போகும்
பின்பற்ற குருவிலா மாணாக்கன் போலே
உன்பற்று தேடியே உருகினேன் கண்ணா..!
94.
ஓதுவார் வேதத்தின் உட்பொரு ளானாய்
சூதுவா தறிந்துநீ பாரதம் வென்றாய்
மாதுக்கள் சூழவே வலம்வந்து சென்றாய்
தீதின்றி நானும்உனைச் சேர்வேனோ கண்ணா...
95.
வெண்ணெயுண் டேநீயுன் வாய்துடைத்த போதும்
கண்ணிலே காதலைக் காட்டி நின்றபோதும்
மண்ணை யள்ளிநீ மகிழ்ந்துண்ட போதும்
பெண்ணிவள் காதலை அறிந்தாயோ கண்ணா..!
இதனை மனமொன்றி படிப்பதற்க்கான சூழல் இன்று தான் அமைந்தது என்றே நினைக்கிறேன்...ஒவ்வொரு வரிகளையும் ஆழ்ந்து அதன் சுவைதனை அறிந்து படிக்கையில் தித்திக்கிறது மீராவின் கண்ணன்...வாழ்த்துகள் கலை’வேந்தே’...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
மீராவின் பார்வையிலே, கண்ணன் ஒருவன் தான் நாயகன்... மற்ற ஜீவராசிகள் அனைத்துமே அவனது நாயகிகள்தான்...மிக உயர்ந்த தத்துவம் இது....அதனை வெளிக்கொணர்கிறது உங்கள் கவிதை வரிகள்.
நன்றி.
ஐம்புலனும் கண்ணனின் சிந்தையிலேயே லயித்திருக்க அவன் மேல் கொண்ட அதீத காதல் என்னும் பக்தி அல்லது பக்தி என்னும் காதலின் விளைவாய் விழுந்தனவோ மீராவின் கண்ணன் கவிப்பூக்கள். அனைத்து பூக்களுமே மாலையாய் கோர்த்து மீரா கண்ணனுக்கு தன் அன்பால் இடுகிறாள்.
அழகுதமிழ் சொட்ட சொட்ட வடித்துள்ள கவிதைகளுக்கு நன்றி கலைவேந்தரே.
இந்த கவிதைக்குள் ஒரு அழகான விடயம் ஒளிந்திருக்கிறது
இது வெறும் காதல் பாடலாக மட்டுமே வெளிப்படவில்லை
மீரா கண்ணனின் ஒவ்வொரு பிராயத்திலும் அவனுடன் வாழ்ந்து வளர்ந்து வருதலையும் இது குறிக்கிறது
கண்ணன் வெண்ணை உண்டதும் மண்ணை தின்றது சிறு பிராயத்தில் அந்த தருணத்திலும் என் காதலை அறிந்தாயா கண்ணா என்பது அவனுடம் அவள் அந்த வாழ்வை வாழ்கிறாள் என்பதையும் குறிக்கிறது அல்லது கண்ணன் தண்ணுடன் வாழ்கிறான் என்பதௌ குறிக்கிறது
மிகவும் லயிக்க வைத்த பாடல் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா
Last edited by ஆதி; 17-09-2012 at 06:54 AM.
அன்புடன் ஆதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks