Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கவிதையாய் ஒரு கதை..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Lightbulb கவிதையாய் ஒரு கதை..!!

    முன்குறிப்பு:

    மன்றத்தில் எழுத்துலகின் ஆன்றோர்களே.. சான்றோர்களே..!!

    ஒரு வித்தியாசமான முயற்சியில் பூ எடுத்து வைக்கும் முதல் சுவடு இக்க(வி)தை..!!

    இங்கே.. கவிதையைத் தேடினீர்களானாலும்.. கதையைத் தேடினீர்களானாலும் இரண்டில் பாதியேனும் கிடைக்குமென்ற நம்பிக்கையில்.. பதிக்கிறேன்..

    உங்களின் பொன்னான நேரத்தை இப்பதிவைப் படிக்கச் செலவிடப் போவதற்கு முன்கூட்டிய நன்றிகள்..!

    ---------------------------------------------------------------
    கவிதையாய் ஒரு கதை..!

    சொல்லாமல் என்றோ
    சென்றதை..
    மறக்காமல் தன்நாசி
    சிவக்க... காத்திருந்தது..
    வான வில்(லி)..

    எங்கோ பெய்யும்
    மழை தாண்டி
    ஏதோ ஈரம்
    அடிமனம் கசியவைத்தது..


    வெட்டுக் கிளி
    வெட்டாயிலைகள்..
    தன் அரையுடல்
    ஆடையுடன்..
    வேருக்கு விருந்தாக்கும்
    முனைப்பில்..


    கவனிப்பதை
    கவனிக்காதது போன்று
    கவனித்தன..
    தோள் சாய்ந்து சிரிக்கும்..
    மலர்மொட்டுகள்..

    கண்ணாமூச்சு ஆடும்
    கதம்ப பூக்களின் மேல்
    கவனம் போகவில்லை..


    இத்தனை வருட
    இல்லறத்தில்..

    இரும்புக்கரம் எழுந்து
    இதுவரை படிந்ததில்லை..
    படியுமளவு நான்
    பயணித்ததுமில்லை..

    எழில் என் வாழ்வில்
    வந்த பின்..
    பொழிலுக்குப்
    பஞ்சமில்லை..

    மூன்றாண்டுகால
    இணையோட்டத்தில்..
    ஓரெண்ணம்..
    ஓர் வாக்கென
    இருவர் ஒருவராக..


    இன்று மட்டும்
    ஏன் இப்படியெல்லாம்?

    மென் பொருளில்..
    மென்மையிழக்கும்..
    கலையின்
    கண்கள் இறுக்க
    மூடித்திறந்தன..

    உறுத்தும் வலி
    கண்ணிலா மனத்திலா??


    காலையில் வெடித்த
    கலவரம்..
    கண் முன் வந்துபோனது..


    ஆத்திரம் தாளாமல்
    அடி வைத்த கை..
    இன்னும் சிவந்தபடியே...

    ச்சே.. மனம் திட்டி
    மாண்டது...
    எத்தனை வலித்திருக்கும்..
    எழிலுக்கு...!!


    நன்கு புரிந்தபின்..
    நாலாமவர் போல்
    சிந்தை சிதற
    என்ன காரணம்??

    புரிதல் பிரச்சனையா..
    புரிவித்ததில் பிரச்சனையா..
    புரியாமலே கலை புலம்பியபடி..
    இரு நாட்களாக..
    இல்லம் வர தாமதமான
    இடைக்கால பணிப் பளு..


    அலுவலகத் தோழி..
    அவசரத்தில் உதவி கேட்க..
    அழைத்துச் செல்ல வேண்டிய
    கட்டாயச் சூழல்..


    தாமிருக்கும் இருக்கை..
    தனக்குமட்டுமென
    பாசப் பைந்தமிழ்
    எழிலின் குரல்..
    ஓரத்தில் ஒலித்தது..


    சூழலும் காரணமும்..
    சுத்தி வளைத்து
    இருதலைக் கொள்ளி
    எறும்பாக்கியது..


    காட்சிகள் மாறாமல்..
    துணையுடன் பகிர்ந்த பின்பும்..


    பாசத்தில் வார்த்தைகள்
    தடிக்கத் தவறவில்லை..

    தடித்த வார்த்தைகள்..
    தன் கோடு தாண்டுகையில்
    கையும் கொஞ்சம் நீண்டு
    தணிந்தது..

    பாச எல்லையும்
    சந்தேக எல்லையும்
    அருகருகோ??


    குழப்பத்தில் மனம்..
    குழந்தைகள் ஓட்டத்தை
    பார்த்து ஓடாதிருந்தது..

    ஏழு தாண்டி..
    அரை கூட்ட
    காத்திருந்தது காலம்..


    கலங்கும் நெஞ்சுடைந்து
    காயமுற்று நானிருக்கையில்..
    கயலவள் தோழியானாள்..


    எட்டு வைத்து
    ஏற்றம் காண..
    தட்டிக் கொடுக்கும்
    தங்க தோழமை..


    தங்கம் கூட
    உரசினால் தான்
    உண்மையென
    ஊர்ஜிதமாம்..

    மென் கட்டிட வல்லுநராக
    என் தரமுயர..
    அழைப்பின்றி விருந்தினராக..
    வந்து சேர்ந்தது..
    பணிப்பளுவும்..
    நேரப் பஞ்சமும்..


    நாளில் முக்காலை
    அலுவலகம் விழுங்க..
    கால் பங்கில்
    குடித்தனம் செய்ய..
    தூங்கவா..?
    தன்னிலை விளக்கம்
    தாக்கல் செய்யவா??


    எண்ணவோட்டம்
    எங்கோ போக
    கலைத்திருந்த..
    பூக்களோடு
    கலையும் சேர்ந்திருந்தார்..


    மெல்ல மாயும்
    இருள் தோண்டி..
    வெளிச்சம் வர துவங்கியது
    மனத்தில்..


    நேரவாளுமையும்
    திறந்த மனமும்..
    தெளிந்த சிந்தையும்
    துணையாக்கும் வழி
    கலை மனம் அடைந்தன..


    களைத்த முகம்..
    களையானது..


    அன்பின் அரிச்சுவடை
    அறியப்படுத்த..


    பூக்களோடு கைநிறைய..
    புன்னகையும்..
    சேர்த்து எழிலோடு
    தொடுக்க..
    எத்தனிக்க..

    துவங்கியது..
    கலைப்பயணம்..!!


    Last edited by பூமகள்; 22-06-2008 at 04:33 AM. Reason: எழுத்து பிழை நீக்க...!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முதல் வாழ்த்துகள் இந்த அண்ணனுடையதாக இருக்கட்டும் பாமகளே!


    நல்ல முயற்சி..மொழி ஆளுமையின் அடுத்த வளர்ச்சி..!

    நேர ஆளுமை - திறந்த மனப்பான்மை..
    இவையே பணி/இல்லப் பயணத்தின் இருசக்கரங்கள்..

    இனி கலைப்பயணம் சீராய் இருக்கும்!

    உன் வர்ணனைகளின் எழில் போல் எழிலின் வாழ்வும் இருக்கும்!

    -----------------

    இவ்வகைப் படைப்புகளை மன்றத்தில் பதிய
    புதுப்பகுதி தொடங்கலாமா என ஆலோசிக்கலாம் சொந்தங்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    முதல் வாழ்த்துகள் இந்த அண்ணனுடையதாக இருக்கட்டும் பாமகளே!
    நேர ஆளுமை - திறந்த மனப்பான்மை..
    இவையே பணி/இல்லப் பயணத்தின் இருசக்கரங்கள்..
    மனம் நெகிழ்ந்தேன் பெரியண்ணா..!!
    முதல் வாழ்த்துகளே.. முத்தானவரிடமிருந்து வந்தது கண்டு எம்பி ஒரு கணம் குதித்தே விட்டேன்..!!

    புத்துணர்ச்சி பொங்க.. மகிழ்கிறேன்..!

    இவ்வகைப் படைப்புகளை மன்றத்தில் பதிய
    புதுப்பகுதி தொடங்கலாமா என ஆலோசிக்கலாம் சொந்தங்களே!
    என் படைப்பு இப்படியொரு ஆலோசனையை உருவாக்க உதவியது குறித்து மகிழ்ச்சி வெள்ளமென பாய்கிறது பெரியண்ணா..!!

    முதல் பதிவிட்ட முத்து அண்ணலுக்கு தங்கையின் அன்பு மற்றும் நன்றிகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பூ(பா)மகளின் அடுத்த கட்ட பயணம் எழிலோடு தொடங்கியிருக்கிறது. கதை சொல்லும் கவிதை. நல்ல முயற்சி. வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன. உறுத்தாத வர்ணனைகள், நிறுத்தாத கற்பனைகள் எழிலுக்கு எழில் சேர்க்கிறது.

    கலைத்த முகம்..
    களையானது..
    இது கலைத்த முகமா? களைத்த முகமா?

    கடைசிவரி குழப்புகிறது. எழிலோடு கலைப்பயனமா...இல்லை கலையோடா?
    (கலை அலுவலகத் தோழிதானே)

    பூக்களோடு கைநிறைய..
    புன்னகையும்..
    சேர்த்துத் எழிலோடு
    தொடுக்க..
    எத்தனிக்க..

    (நீக்க வேண்டுமே)

    வாழ்த்துகள் பூ. நல்ல முயற்சிக்கு மன்றம் என்றும் உடனிருக்கும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ரொம்ப நன்றிகள் சிவா அண்ணா..!!
    எழுத்துப் பிழையை மாற்றிவிட்டேன்.

    கடைசிவரி குழப்புகிறது. எழிலோடு கலைப்பயனமா...இல்லை கலையோடா?
    (கலை அலுவலகத் தோழிதானே)

    அச்சச்சோ... கதையின் பாத்திரங்களின் பெயரில் குழப்பமா??!!

    அப்போ ஒரு போட்டியே வைக்கலாம் போல இருக்கே...!!

    சரி.. இந்த கேள்விகளுக்கு பதில் தெரியுதா பாருங்க...!!

    1. கதையில் எத்தனை கதாப்பாத்திரங்கள்?
    2. கதாப்பாத்திரங்களின் பெயர்கள் என்னென்ன?
    3. கதையின் பின்புலத்தில் சொல்லப்பட்ட சூழல் என்ன?

    இதுக்கு பதில் சரியா சொல்லீட்டிங்கன்னா... என் கதை பாஸ்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Feb 2008
    Posts
    44
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    1
    Uploads
    0
    கவிதையாய் ஒரு கதை..!

    ”பாச எல்லையும்
    சந்தேக எல்லையும்
    அருகருகோ??”

    ஆமாம் மகளே! மானுடவாழ்வெனும் பாலத்தின் இருகரையில் - ஒரு பக்கம் பாசம் - மறுபக்கம் அந்தபாசம் மாறிடுமோ என்ற சந்தேகம். இது தான் யதார்த்தம். வாழ்த்துக்கள் மகளே.
    மேலும் தங்கள் ஆக்கங்கள் பெருகிட,
    என்றென்றும் வாழ்த்துக்களுடன்,

    பாசம்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஹை ஹை..!!
    என்னோட பதிவின் ஆணி வேர் கண்டுபிடிச்சிட்டாங்க..!!

    ரொம்ப சரியா சொன்னீங்க பாசமப்பா...!!
    ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83

    Question

    தன்னிலை தடுமாறி..
    படர்க்கையாய் படர்கையில்
    முன்னிலை பின்னடைகிறதே.. :( ... !
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நன்றி சாம்பவி..!!
    கவனத்தில் கொள்கிறேன்..!!

    திருத்திக் கொள்கிறேன்.

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாழ்த்துக்கள் பூமகள்....

    வித்தியாசனமான முயற்சியில்
    புதிய கலைப்பயணம்.....
    சிறப்பாய் தொடரட்டும்...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    முதலில் புதுமையாய் எதையாவது செய்ய நினைக்கும் உன் எண்ணத்திற்க்கு எனது வாழ்த்தும் பாராட்டும் பூ..!!

    தலைப்பிற்க்கு ஏற்றார் போலவே பதிவும் இருப்பது மனதுக்கு நெகிழவை தருகிறது..!!

    அன்பு அதிகரிக்கும்போது அங்கே ஆளுமையும் அதிகரிப்பது அனைவரின் வாழ்விலும் நிகழும் நிகழ்வே..!! அதை கவிதை வடிவில் கதையாய் சொன்ன விதம் புதுமை..!!

    வாழ்த்துக்கள்..பூ..தொடரட்டும் உன் முயற்சிகள் மென்மேலும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    கலை- கணவன்

    எழில் -மனைவி

    கயல்- தோழி

    கதையில் மொத்தமாக மூன்று பாத்திரங்கள். ஆணும் பெண்ணும் இணைந்தே பணியாற்றும் அலுவலகச் சூழலில் ஆண்-பெண் நட்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அல்லது புரியுமாறு செய்தல் வேண்டும். சந்தேகக் கோடு சந்தோசக் கேடு என்பதை புரிந்தால் இல்லறம் நல்லறமாம்.

    என்ன தங்கையே நீ பாசாயிட்டியா? இல்லை நான் தான் இன்னமும் புரியாத கடைசிப் பெஞ்சு மக்குப் பயலா இருக்கேனா?

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •