அவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்
அவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு
அவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு
அவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று
அசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்
அவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்
அவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு
அவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு
அவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று
அசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
கண்கள் பனித்தேன் மதுரை வீரன்..
அன்னையின் அசையாக் கைகளுக்காக
''கைகள்'' என்று முன்னர் மன்றத்தில் கவிதை எழுதியிருக்கிறேன்..
அதே உணர்வலைகளை இங்கே கண்டு இளகினேன்..
வாழ்த்துகள்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ஊருக்குப் புறப்படும் முன்பு கவலைப்படாதீர்கள் ஒன்றுமில்லை என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தேன்...
ஆனால் ஊருலிருந்து திரும்பும் போது ஈடுசெய்ய இயலாத இழப்போடு திரும்பினீர்கள்....
என்ன செய்வது ஐயா... உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான விதி இது...
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை -அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை...
உங்கள் கவிக்கு வாழ்த்துக் கூற இயலா நிலை....
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
மனம் கனக்கிறது...
பிராத்தனைகள் மட்டும்..
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
இருக்கும் போது
ஓயாமல் அசைந்தவைகள்
ஓயாமல் உழைத்தவைகள்
இனியாவது ஓய்வெடுக்கட்டும்
என் பிரார்த்தனைகளும்.....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அன்னையைப் பற்றி எத்தனை கவிதைகள் எழுதினாலும் சலிக்கவே சலிக்காது மதுரைவீரன். ஆனால்....
அன்னை இல்லாத குறை?
எனது அன்னைக்கும் எனக்கும் ஒரே சண்டையாக இருக்கும்... ஆனால் ஒருநாள் ஊருக்குப் போய் வந்தால்... எனக்கு மனம் கனத்துவிடும்... அந்தப் பிரிவு, நம்மையும் அறியாமல் எழும் வலி....
தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்... ஒரு தாயின் நிரந்தரப் பிரிவு..... ???
மிக வலியுள்ள வரிகள் உம்முடைய கவிதைகள் கொண்டிருப்பது..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks