Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: ரேஷன் அரிசி

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ரேஷன் அரிசி

    த்......தேரி....ஸ்ஸூ....டே சுரேசு...அந்த மாட்ட முடுக்குடா...எழவெடுத்தது....பிஞ்சையெல்லாம் எப்படி கடிச்சி வெச்சிருக்குப் பாரு....

    அவிழ்ந்து விழுந்த வேட்டியை ஒரு குத்துமதிப்பாக தூக்கிக் கட்டிக்கொண்டு தரையில் விழுந்த, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்த அந்த துண்டைத் தூக்கி கொடியை ஆட்டுவதைப்போல வேகமாக அசைத்துக்கொண்டே வெங்கட்ராமனும் அந்த "சுரேசு' வோடு சேர்ந்து மாட்டைத் துரத்தினார். மாடு மிரண்டு ஓடி வரப்பில் தடுமாறி விழுந்து எழுந்து மறுபடியும் ஓடியது.

    மாட்டை விரட்டி விட்டுத் திரும்பி தன் தோட்டத்தைப் பார்த்தார். வெண்டைச் செடிகள் அப்போதுதான் பிஞ்சு விடும் பருவத்தில் இருந்தன. அரைகுறையாய் மாடு கடித்து விட்ட இலைகளையும், பிஞ்சுகளையும் துண்டித்து தூர எறிந்துவிட்டு, பக்கத்தில் இருந்த வயலைப் பார்த்தார். விளைந்து நின்ற நெற்பயிர்கள் பாரம்தாங்காமல், முதல் முறை பெண்பார்க்க வருபவர்கள் முன் தலை குனிந்து நிற்கும் பெண்ணைப்போல தரை நோக்கியிருந்தன.

    போன போகமே விதைக்க முடியவில்லை. மூத்தமகள் முதல் பிரசவத்துக்கு வந்தவள், உடல் நலம் குறைந்து ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. இருக்கும் ஒரு ஏக்கர் கழனியில் இரண்டு போகம் விளைந்து கொண்டிருந்தார். வானம் பார்த்த பூமிதான். அதனால் கடனை உடனை வாங்கி ஒரு கிணறு வெட்டினார். அதற்கு இதுவரை மின்சார இணைப்பு கிடைக்கவில்லை. டீஸல் வாங்கி இயந்திரத்தை இயக்கி தண்ணீர் இறைத்து வந்தார். அவரது வயலுக்குப் போக பக்கத்து நிலங்களுக்கும் இறைத்ததில் டீஸல் செலவுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தது.

    இந்த முறை விதைப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டார். விவசாய கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. வந்தாலும் டவுன் ஆட்களைப் போல குறிப்பிட்ட நேரம்தான் வேலை செய்வோம், சாப்பாடு போடவேண்டும், இவ்வளவு கூலி வேண்டுமென்று கறாராகப் பேசிக்கொண்டுதான் வருகிறார்கள். முன்பெல்லாம் அவர்களே வந்து கேட்பார்கள். வேலை முடிய எவ்வளவு நேரமானாலும் முகம் சுளிக்க மாட்டார்கள். அரசாங்கம் இலவசங்களும், இரண்டு ரூபாய் அரிசியும் கொடுக்க தொடங்கியதிலிருந்து வாரத்துக்கு இரண்டு நாட்கள்தான் வேலைக்கே போகிறார்கள். கேட்டால்,

    "கிலோ ரெண்டு ரூபாய்க்கு அரிசி கிடைக்குது மாசமானா எங்க வூட்டுக்கு 40 கிலோ போதும். எங்க கூப்பனுக்கு(ரேஷன் அட்டை) 20 கிலோ கெடைக்குது. பேட்டையில(டவுனில்) இருக்கிற மவராசங்க வூட்டு கூப்பன் எதானா ஒண்ணு கெடைச்ச அதுல 20 கிலோ கிடைக்குது. 80 ரூபாயில சாப்பாட்டுப் பிரச்சனை தீந்துச்சி...மேல் செலவுக்கு வாரத்துக்கு ரெண்டு நாள் வேலை செஞ்சாலே போதும்"

    என்று சொல்கிறார்கள்.

    வெங்கட்ராமனின் மனைவி கூட சொல்லிப் பார்த்தாள்.

    'இந்த ஒரு ஏக்கர்ல நெல்லு விதைக்கறதுகுள்ள தாவு தீந்துடுது. எதுக்கு இத்த கட்டிக்கினு மாரடிக்கிறே பேசாம கூப்பன் அரிசி வாங்கி திங்கலாமில்ல. இதுல பூவாச்சும் போட்டா வண்டிக்காரன் வந்து வாங்கிட்டுப் போவான்"

    என்று எவ்வளவோ சொல்லியும்,

    'கழனி இருக்கும்போது கூப்பன் அரிசி சாப்பிடனுன்னு எதானா தலையெழுத்தா கம்முனு இருடி.இன்னொரு வாட்டி கூப்பன் அரிசியப் பத்திப் பேசுன....தலைமுறை தலைமுறையா சொந்த நெலத்துல வெளைஞ்சி சாப்பிட்டவங்கடி நாங்க "

    என்று இவர் தன் மனைவியை சும்மா இருக்கச் சொல்லிவிட்டு அந்த ரேஷன் அரிசியையும் இப்படி கூலி வேலைக்கு வருபவர்களிடம் கொடுத்துவிடுவார்.

    நெற்பயிரையே பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு பெரு மூச்சுடன் " அறுப்புக்கு ஆள் தேட இன்னும் எவ்ளோ கஷ்டப்படனுமோ அந்த பச்சம்மா சாமிக்குத்தான் வெளிச்சம்" என்று நினைத்துக்கொண்டு பம்ப்செட் தொட்டியிலிருந்த நீரை எடுத்து கை கால்களைக் கழுவிக்கொண்டு அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்தார். ஏரி ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நாணல் புற்களால் வேய்ந்த கூரை. அதை அந்தப் பகுதி மக்கள் போதப்புல் என்று சொல்வார்கள். மண் சுவர். சாணம் மெழுகிய தரை. உள்ளே சென்று முட்டுக்காக கொடுக்கப்பட்டிருந்த தென்னை மரத்தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

    வெங்கட்டம்மா கையில் பித்தளை குவளையில் தண்ணீரோடு அவரை அணுகி, அதை அவர் கையில் கொடுத்துவிட்டு,

    'எப்ப அறுக்கலானு கீற?'

    "ரெண்டு நாள் போட்டும், தாசப்பனும் அவன் வூட்டுக்காரியும் வரன்னு சொல்லியிருக்காங்க...அப்படியே இன்னும் ரெண்டு பேரைப் பாத்து கூட்டியாரனும். எவனும் வரலன்னா நீயும் நானுந்தான் அறுக்கனும்" என்றதும்,

    " அதுக்குத்தான் நான் தலப்பாடா அடிச்சுக்கறேன்..." என்று ஆரம்பித்தவளைப் பார்த்து,

    "நிறுத்துடி! இவளுக்கு இதே ரோதனையாப் போச்சி. அதான் அந்த தாசப்பன் வரன்னு சொல்லியிருக்கனில்ல...வுடு"

    சொல்லிக்கொண்டிருந்தவர் வாசலில் நிழலாடுவதைக் கவனித்துவிட்டு பார்வையைத் திருப்பினார். மூத்தமகள் கைக்குழந்தையுடன் வந்து கொண்டிருந்தாள். மகளையும் பேத்தியையும் பார்த்ததும் முகமெல்லாம் மலர்ச்சியுடன்,

    வாடி சாந்தி, உங்க வூட்டுக்காரன் வர்ல? கேட்டுக்கொண்டே கைக்குழந்தையை வாங்கி புகையிலை மணக்கும் வாயால் பேத்தியை முத்தமிட்டாள்.

    கேட்டவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் கொண்டு வந்த துணிப்பையையை கீழே வைத்துவிட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்.

    அந்த செயலைப் பார்த்ததுமே வெங்கட்ராமனுக்கு திக்கென்றாகிவிட்டது. இந்த முறை எதை எதிர்பார்த்து வந்திருக்கிறாளோ மகள் என்ற அச்சம் தோன்றிவிட்டது. எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்த அப்பனைப் பார்த்து முகத்தில் சுரு சுருவென்று ஏறிய கோபத்தோடு,

    "என்னான்னு ஒண்ணும் கேக்க மாட்டியா? ஒரலாட்டம் ஒக்காந்துனுக்குறதப் பாரு. உங்களுக்கென்னா...மவளக் கட்டிக்குடுத்துட்டா..வுட்டுதுடா ஏழ்றநாட்டு சனின்னு கம்முன்னு இருப்பீங்க. எங்க வூட்டுக்காரன்கிட்டயும், மாமியாக்காரிக்கிட்டயும் தெனம் பேச்சு வாங்கறது யாரு. பொட்டப்புள்ளையை பெத்து எடுத்துக்கினு வந்திருக்க, எங்கடி உங்கப்பன் போடறாதா சொன்ன ஒரு பவுனு சங்கிலின்னு இந்த ஆறு மாசமா என்ன நோவடிச்சிக்கினே இருக்காங்க. இன்னைக்கு அந்த ஆளு எந்த எழவையோ குடிச்சிட்டு காலங்காத்தால வந்து எட்டி ஒதைக்குறான். அதான் புள்ளைய தூக்கிகிட்டு வந்துட்டேன். ஒரு பவுனு போட்டாத்தான் நான் திரும்பி அந்த வூட்டுக்குப் போவேன் ஆமா..." உறுதியாய் சொல்லிவிட்டு அதற்குள் சிணுங்க ஆரம்பித்த மகளை தாயிடமிருந்து வாங்கி மடிமீது போட்டுக்கொண்டு சுவர் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

    "ம் கதுரு வெளைஞ்சிருக்கே குருவி வரலியேன்னு பாத்தேன். வந்துட்டா நான் பெத்த மகராசி. சரி அறுப்பு முடிஞ்சதும் அந்த ஒரு பவுனைப் போட்டுத் தொலைச்சிடலாம்" என்று நினைத்துக்கொண்டே மனைவியைப் பார்த்து சோறாக்கிட்டியா? என்றார்.

    " ம்...சாறு மட்டும்தான் காச்சனும். நீ போய் கிருஷ்ணன் கடையில ஒரு பாக்கெட் போட்டி(குழல்போல இருக்கும் திண்பண்டம்) வாங்கிக்கினு வந்துடு. உன் மவளுக்கு இல்லன்னா சோறு எறங்காது."

    அடுத்த நாள் தாசப்பனைத் தேடி அவன் வீட்டுக்குப் போனார். உள்ளே தரையில் பாயைப் போட்டு தலையணையை தலைக்கு முட்டுக் கொடுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். டே தாசா என்னாடா டிவிபொட்டியெல்லாம் வாங்கிட்டியா? கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்துகொண்டே வா மாமா. ஒக்காரு. நான் எங்க மாமா வாங்கறது. கவுர்மெண்ட்டு குடுத்தது. ஏன் மாமா உனக்கு குடுக்கலையா?

    இல்லியேடா...


    நீ அப்ப இந்த கட்சியில்லியா?

    நான் எந்த கட்சியும் இல்லியேடா...

    அது சரி. நான் கூடத்தான் இல்ல. வந்து கேட்டானுங்க இந்தக் கட்சியான்னு...ஆமான்னேன்...முன்சீப் ஆபீசாண்ட வந்து கை நாட்டு வெச்சுட்டு டிவி பொட்டி வாங்கிட்டு போடான்னானுங்க. போய் வாங்கியாந்துட்டேன்.

    சரி வுட்றா எனக்கு என்னாத்துக்கு இந்த கருமம். நாளானன்னைக்கு நீயும் உங்க பொண்டாட்டியும் வந்துடுங்கடா. காத்தால ஆரம்பிச்சாத்தான் வெயில் ஏற்றதுக்குள்ள அறுப்பு முடியும்.

    மாமா...வந்து.... அவன் இழுப்பதைப் பார்த்ததும் இவருக்கு பகீரென்றது. வரமாட்டானோ...?

    என்னடா இலுக்கிற....

    அதில்ல மாமா...வூட்டுக்காரி அவங்கம்மா வூட்டுக்கு போகனுன்னு சொன்னா? கொழுந்தியாளுக்கு நிச்சயம் பண்றாங்க அதுக்கு கண்டிசனா போகனுன்னு சொல்லிட்டா...அதான்....நீ வேற யாரையாவது பாத்துக்கறியா?

    அடப்பாவி...இப்ப வேற எவனைப் போய் தேடச் சொல்றடா? எவனும் வர மாட்டேங்கறானுங்களே....சிறிது யோசனைக்குப் பிறகு,

    சரி நான் போய் அந்த நாகனைப் பாக்குறேன்....என்று சொல்லி விட்டு...கொஞ்சம் தொலைவில் இருந்த நாகன் வீட்டுக்குப் புறப்பட்டார்.

    அவர் தலை மறைந்ததும்,

    "நல்ல வேல பண்ணய்யா...நாளான்னைக்கு காத்தால ஏலு மணியிலருந்து செறப்பு நிகழ்ச்சிங்கன்னு டிவியில சொன்னாங்க. புது படம் பதினோரு மணிக்கே போடறாங்களாம். அத்தப் பாக்குறத வுட்டுட்டு அறுப்புக்கு வா கறுப்புக்கு வான்னா...?

    நாகனும் வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட, தனக்குத் தெரிந்த அத்தனைப் பேரிடமும் போய்க் கேட்டும் எந்த பிரயோசனமும் இல்லாமல் தளர்ந்துபோய் திரும்பி வந்தார். வீட்டில் மகளைப் பார்த்ததும் அந்த ஒரு பவுனின் நினைவு வர என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

    அடுத்த நாள் மனைவியைத் துணைக்கு வைத்துக்கொண்டு அறுப்பு வேலையை மேற்கொள்ளலாம் என்று இருவரும் வயலில் இறங்கினார்கள். ஒரு ஏக்கர்தான் நாளைக்கு முடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு வேகமாக அருவாளை வீசினார்கள். சர சரவென்று முன்னேறிப் போய்க்கொண்டிருந்தபோதுதான் மகளின் அலறல் கேட்டது. தூக்கி வாரிப்போட இரண்டு பேரும் வீட்டை நோக்கி ஓடினார்கள். அறுபட்ட பயிரின் முனைகள் வெறுங்காலை பதம் பார்த்தது. அதையும் சட்டை செய்யாமல் விழுந்தடித்து ஓடினார்கள். குழந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது.

    "நைனா...புள்ளைய தேள் கடிச்சிடிச்சி. பெரிய தேளு...கஞ்சி காச்சிக்கினு இருந்தேன் புள்ள அழற சத்தம் கேட்டு ஓடியாந்தேன்..இதா இந்த சனியன் புடிச்ச தேளு பக்கத்துல இருந்திச்சி." என்று நசுக்கிய தேளைக் காட்டிக்கொண்டே கதறினாள். உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலைக்கு வந்தவர்கள் அந்தப்பக்கமாய் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வேண்டிக் கேட்டுக்கொண்டு மகளையும் குழந்தையையும் அவருடன் பெரியாஸ்பத்திரி என்ற அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வேகமாக நடந்து முக்கிய சாலைக்குப் போய் நகரப் பேருந்தில் ஏறி மருத்துவமனையை அடைந்தார்கள்.

    நல்லவேளையாக சரியான சமயத்தில் கொண்டு வந்தததால் குழந்தையின் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று சொல்லிவிட்டார்கள். மருத்துவமனையில் இருக்கும்போதே வெளியே மழை கொட்டும் சத்தம் கேட்டு ஓடி வந்த வெங்கட்ராமன்...பொத்துக்கொண்டு ஊற்றும் மழையைப் பார்த்ததுமே "அய்யோ கடவுளே என் பயிருக்கு என்னா ஆச்சோ' என்று கதறினார். வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் இந்த மழை கன மழையாகத் தொடரும் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து அமர்ந்துவிட்டார்.

    குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் அங்கிருந்து பேய் மழையால் நிரம்பிய நீரில் தாழ்ந்துபோயிருந்த பயிரைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். கண்ணிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

    இரண்டு நாட்கள் விடாமல் பெய்த மழையால் அவரால் பயிரைக் காப்பாற்றமுடியவில்லை. அழுதுகொண்டே போன மகளை ஆறுதல்படுத்தவும் முடியாதவராக வாசலில் அமர்ந்துவிட்டார். வீட்டில் அரிசி தீர்ந்துவிட்டிருந்தது. வெங்கட்டம்மாள் ஒரு மூலையில் அமர்ந்துவிட்டாள். பள்ளி விடுமுறையால் வீட்டிலிருந்த சின்னவள் களைப்போடு அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள். மனைவியையும், சின்ன மகளையும் பார்த்துக்கொண்டே இருந்தவர்..திடீரென்று எழுந்து வெளியே போனார்.

    சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் வெங்கட்டம்மா அந்த கூப்பனை எட்றி. போய் அரிசி வாங்கிகினு வரேன். கிருஸ்ணன்கிட்ட 50 ரூபா கடன் வாங்கினேன். ஒரு 20 கிலோ அரிசி வாங்குனா இந்த மாசத்துக்கு சரியாப் போய்டும்.

    சொன்னவரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே அந்த குடும்ப அட்டையை எடுத்துக்கொடுத்தாள். கடைக்குப் போகும்போது நின்று அந்த வயலைப் பார்த்தவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

    பூச்செடி வெச்சிட வேண்டியதுதான்..............
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நல்ல கதை அண்ணா. சிலர் இப்படித்தான்... தனியாகத் தொழில் செய்வார்கள் கொஞ்சம் கையைக் கடித்ததும் வேலைக்குப் போவார்கள். தனியே தொழில் செய்பவனுக்கே உண்டான மிடுக்கு பொருளாதாரப் புயலில் காணாமல் போய்விடும்.

    அங்கங்கே அடிபட்ட வெங்கட்ராமனை இயற்கையும் சேர்த்தே பழிவாங்கிவிட்டது....

    ///////விளைந்து நின்ற நெற்பயிர்கள் பாரம்தாங்காமல், முதல் முறை பெண்பார்க்க வருபவர்கள் முன் தலை குனிந்து நிற்கும் பெண்ணைப்போல தரை நோக்கியிருந்தன./////////

    ஒரு கவிஞருக்கே உண்டான அழகான வரிகள்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இரண்டு நாட்கள் விடாமல் பெய்த மழையால் அவரால் பயிரைக் காப்பாற்றமுடியவில்லை. அழுதுகொண்டே போன மகளை ஆறுதல்படுத்தவும் முடியாதவராக வாசலில் அமர்ந்துவிட்டார். வீட்டில் அரிசி தீர்ந்துவிட்டிருந்தது. வெங்கட்டம்மாள் ஒரு மூலையில் அமர்ந்துவிட்டாள். பள்ளி விடுமுறையால் வீட்டிலிருந்த சின்னவள் களைப்போடு அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள். மனைவியையும், சின்ன மகளையும் பார்த்துக்கொண்டே இருந்தவர்..திடீரென்று எழுந்து வெளியே போனார்.

    சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் வெங்கட்டம்மா அந்த கூப்பனை எட்றி. போய் அரிசி வாங்கிகினு வரேன். கிருஸ்ணன்கிட்ட 50 ரூபா கடன் வாங்கினேன். ஒரு 20 கிலோ அரிசி வாங்குனா இந்த மாசத்துக்கு சரியாப் போய்டும்.

    சொன்னவரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே அந்த குடும்ப அட்டையை எடுத்துக்கொடுத்தாள். கடைக்குப் போகும்போது நின்று அந்த வயலைப் பார்த்தவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

    பூச்செடி வெச்சிட வேண்டியதுதான்..............
    ஒரு விவசாயின் நிலையை தெளிவா எடுத்துரைக்கும் கதை...
    இந்நிலை மாறி... விவசாயின் சிரித்த முகத்தை காண ஆசை...
    அருமை சிவா....

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அண்ணா... கையை குடுங்க..
    நல்ல கதை... கதையை கொண்டு சென்ற விதமும் வழக்காடல்களும் அருமை... சிறந்த ஒரு கதாசிரியர் ஆகிட்டீங்க.. உங்க மேல் எங்க எதிர்பார்ப்புகளும் கூடுது.

    கதையில் ஒரு ஏழைவிவசாயின் நிலையைத் துல்லியமாக படம் பிடித்துள்ளீர். அன்றாடம் மக்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும் இறுதியில் சில வைராக்கியங்கள் நம் சுற்றத்தாரின் நலனுக்காக விடுதலும் நல்லது தான்.

    பாராட்டுக்கள்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    நல்ல கதை அண்ணா. சிலர் இப்படித்தான்... தனியாகத் தொழில் செய்வார்கள் கொஞ்சம் கையைக் கடித்ததும் வேலைக்குப் போவார்கள். தனியே தொழில் செய்பவனுக்கே உண்டான மிடுக்கு பொருளாதாரப் புயலில் காணாமல் போய்விடும்.

    ..
    ஆனா தலைமுறை தலைமுறையா வயல்ல விளைஞ்சி சாப்பிட்ட விவசாயி ரேஷன் அரிசி சாப்பிடற நிலை கொடுமைதான் ஆதவா. நிறைய நடக்கிறது இதுபோல இப்போது.

    பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    ஒரு விவசாயின் நிலையை தெளிவா எடுத்துரைக்கும் கதை...
    இந்நிலை மாறி... விவசாயின் சிரித்த முகத்தை காண ஆசை...
    அருமை சிவா....
    நிச்சயம் அந்த நாள் வரவேண்டும். விவசாயி சிரித்தால் அனைவரும் சிரிக்கலாம். நன்றி அறிஞர்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    கதையில் ஒரு ஏழைவிவசாயின் நிலையைத் துல்லியமாக படம் பிடித்துள்ளீர். அன்றாடம் மக்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும் இறுதியில் சில வைராக்கியங்கள் நம் சுற்றத்தாரின் நலனுக்காக விடுதலும் நல்லது தான்.

    பாராட்டுக்கள்.
    ஆமாம் மதி. சில வைராக்கியங்கள் வலுவிழந்துவிடுவது சுற்றத்தாலும், சூழ்நிலைகளாலும்தான். பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    தலைப்பைப் பாத்ததுமே இத ஆற அமர வாசிச்சு உடனே பின்னூட்டம் போடணுங்கிறதாலதான் உடனே வாசிக்கல....
    இது மாதிரி பல கதைகள் ஊரிலுள்ள சிறு சிறு விவசாயிகள்கிட்ட கேக்கலாம் அண்ணா.

    நெல்லு போட்டுருப்பாங்க மழையே பெய்யாம காஞ்சு பொகும்...
    என்னடா வம்பா போச்சுணு வாழை போடுவாங்க... நல்லா செழிப்பா வளந்து அடுத்த வாரத்தில வெட்டிடலாம்னு இருப்பாங்க...
    புயல் வந்து ஒட்டு மொத்தமா ... அழிச்சுடும்..

    வெதைக்கிறதுக்கு முன்னால உழுது மரமடிச்சு தழைஉரம் போடுறதிலருந்து அறுத்து வீடு கொண்டு சேக்கிறது வர தினம் தினம் குழந்தைய பாத்து பாத்து வளக்குற மாதிரி தான் வளக்கணும்.

    பிரச்சனை இப்படி கூட வரும் பக்கத்து வயல்காரன் தென்னை வச்சிருப்பான் அதனால கூட சரியான ஒளி இல்லாம பாதி வயல் போய்டும்.
    ம்....... இப்படி எத்தனையோ....இன்னும் ஒரு பசுமைப்புரட்சி தேவைப்படுற நாள் தூரத்தில இல்ல..
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒரு சிறு விவசாயி எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறான் என்ற உங்கள் பட்டியல் வேதனையளிக்கிறது செல்வா. எத்தனை மாணியங்கள், சலுகைகள் கிடைத்தும் எல்லாமே விழலுக்கிறைத்த நீராகி விடுகிறதே. ஏக்கர் கணக்கில் நிலமுள்ள பெரிய பண்ணைக்காரர்கள் எப்போதும் நஷ்டமடைவதில்லை. ஒன்றில் போனால் மற்றொன்றில் கிடைத்துவிடும். ஆனால் இந்த சிறு விவசாயிகளின் நிலை வேதனைக்குரியது. அதோடு இப்போதெல்லாம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

    நன்றி செல்வா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    'ரேஷன் அரிசி" ஒரு கதையாகவே தெரியல. நிஜத்தில் நடந்த உண்மையான சம்பவம்போலவே இருக்கிறது அண்ணா. கதை கொண்டு சென்ற விதமும், கிராமத்து நடையும் மிக இயல்பாக இருக்கிறது. இது போன்ற கதைகள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு சராசரி மக்களும் வாசிக்கப்படவேண்டியவை.

    அதோடு இப்போதெல்லாம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது.
    டிவி சீரியல் சமைக்கறத மட்டுமல்ல, சமைக்க விளைக்கிற அரிசியையும் பதம் பார்க்குதுங்கறத கேட்கும்போது மக்களின் அறிவீனத்தை நினைத்து வருத்தமாக இருக்குதுண்ணா.

    காலத்திற்கும், இருப்பிடத்திற்கும் ஏற்றபடி பயிர் செய்து நன்றாக உழைத்து சம்பாதிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வள்ளுவரின் குறளில் வரும் கொக்கு போன்றவர்கள். பெரும்பான்மையானோர் தங்கள் சோம்பலினாலும், எந்த பருவத்தில் எந்த பயிரிடவேண்டும் என்று அறியாமலும், பக்கத்து வயலின் ஒத்துழைப்பு இன்றியும் தோல்வியுறுவது கண்கூடாகக் காண்பது தான்.

    பிரச்சனை இப்படி கூட வரும் பக்கத்து வயல்காரன் தென்னை வச்சிருப்பான் அதனால கூட சரியான ஒளி இல்லாம பாதி வயல் போய்டும்.
    இதனால் எங்கள் ஊரில் எல்லோரும் பேசி வைத்துக்கொண்டு பயிரிடுவார்கள். விற்பதிலும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்வார்கள்.

    ம்....... இப்படி எத்தனையோ....இன்னும் ஒரு பசுமைப்புரட்சி தேவைப்படுற நாள் தூரத்தில இல்ல..
    சரியாச் சொன்னீங்க செல்வா.

    முதல்வரியை வேறு மங்கல(?) வாக்கியமாக்கி பத்திரிகைக்கு அனுப்பலாமே சிவா அண்ணா?
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அழகான ஆழமான விமர்சனம். நீங்கள் சொல்வதைப்போல சில விவசாயிகள் பழமையிலிருந்து வெளிவர மிகவும் தயங்குகிறார்கள். ஆனால் அதே சமயம், நெல் விளைந்த நிலமெல்லாம் மாற்றுப்பயிர்களை விளைவிக்கத்தொடங்கினால் நாளைய சமுதாயத்துக்கு அரிசி கிடைக்காமல் போய்விடுமே?

    இப்போது எங்கள் பகுதியில் நடந்து வருவதுதான் இது. என் கிராமத்தில் நெல் விளைந்த வயல்களில் தற்சமயம் 90 சதவீதம் முல்லைப்பூவும், ரோஜாப்பூவும்தான் பயிரிடுகிறார்கள். நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் நெல் விளைச்சல் குறைந்து விட்டதே. காலங்காலமாக சொந்த நிலத்தில் விளைந்த அரிசியை சாப்பிட்டு வந்தவர்கள் இன்று கடையில் வாங்கி உண்ணும் நிலை. அந்த மீதியுள்ள பத்து சதவீதத்தினரில் ஒருவர்தான் இந்த வெங்கட்ராமன். ஆனால் அவரும் ரேஷன் அரிசி சாப்பிடும் நிலை வந்துவிட்டது. இதற்கான முக்கிய காரணம் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததுதான்.

    உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிம்மா. ஆனாலும் எனக்கு இது போதும். பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்புவதில்லை. எனக்கு இந்த மன்றமும், மன்ற உறவுகளே போதும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    இளையவர் பண்பட்டவர் SivaS's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    66
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    32
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நெல் விளைந்த நிலமெல்லாம் மாற்றுப்பயிர்களை விளைவிக்கத்தொடங்கினால் நாளைய சமுதாயத்துக்கு அரிசி கிடைக்காமல் போய்விடுமே?.
    உண்மைதான் சிவா.ஜி
    அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
    உலகெங்கும் பசுமை புரட்சி வர வேண்டும்
    பசுமை நிலையில் மட்டும் நாம் 100 வருடங்கள் பின்னோக்கி போகலாம் தப்பில்லை

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிம்மா. ஆனாலும் எனக்கு இது போதும். பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்புவதில்லை. எனக்கு இந்த மன்றமும், மன்ற உறவுகளே போதும்.
    இதயத்தை தொட்டு விட்டேர்களே மாம்ஸ் (தப்பென்றால் மன்னிக்கவும்)

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •