Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: கடவுளும் கந்தசாமியும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    கடவுளும் கந்தசாமியும்

    கந்தசாமி ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி. மாலை வேளைகளில் அவர் ஒரு நடையாகச் சென்று பக்கத்து பார்க் பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசம் செயவார். அன்றும் அவ்வாறே அவர் அமர்ந்திருந்தார் அன்று அவர் மனம் சஞ்சலமுற்றிருந்தது

    " அப்பனே முருகா தினமும் நான் மனமுருக உன்னை துதிக்கின்றேன் என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்" என்று புலம்பினார் என்ன ஆச்சரியம்? முருகப் பெருமான் அவரின் புலம்பலைக் கேட்டு அவருக்கு அருள் புரிய அசரிரீயாக வந்து

    " கந்தசாமி உன் பக்தியை நாம் அறிவோம் உனது குறை தான் என்ன?" என்று வினவினார்

    கந்தசாமிக்கு மெய் சிலிர்த்தது பக்கத்தில் இருப்பவர்கள் தன்னை தப்பாக நினைக்கக் கூடாது எனறு தனது மெல்லிய குரலில்

    " அதை ஏன் கேட்கிறாய் முருகா ஓய்வு பெற்று வீட்டில் கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று இருக்க முடியவில்லை"

    அசரிரீ முருகன் குறுக்கிட்டு " கந்தசாமி உனது பரந்த மனப்பான்மையை நான் பாராட்டுகிறேன் சைவராகிய நீங்கள் ஓய்வு பெற்று வீட்டில் சிவா கணேசா முருகா என்று இல்லாமல் கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று இருப்பது அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்பதை பறைசாற்றுகிறது" என்றார்

    கந்தசாமி தொடர்ந்து " அதை ஏன் கேட்கிறாய் முருகா வீட்டில் இருப்பதோ ஒரே டிவி அதன் ரிமோட் கண்ட்ரோலைக் கைப்பற்ற எனது மகன் குமாருக்கும் மகள் லட்சுமிக்கும் துவந்த யுத்தம் நடக்கிறது குமாருக்கு IPL மாட்சுகள் பார்க்க வேண்டும் அதே நேரத்தில் லட்சுமிக்கு சன் டிவி சீரியல்கள் பார்க்க வேண்டும். இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார்கள் அவர்களது செமஸ்டர் பரீடசைகள் வேறு நடந்து கொண்டிருக்கின்றன. எனது மனைவி வேறு என்னை கையாலாகாதவன் குழந்தைகளை கட்டுப் படுத்த தெரியாதவன் என்று பழிக்கின்றாள்" இவ்வாறு சொல்லி அங்கலாய்த்தார் கந்தசாமி.

    முருகன் சிரித்துக்கொண்டே " இது எல்லா வீடுகளிலும் நடக்கிறது. இருந்தாலும் நீ என் சிறந்த பகதன் ஆதலால் நான் இதை சரி செய்கிறேன். நீ கவலையில்லாமல் வீட்டுக்குப் போ" எனறார்.

    வீட்டை அடைந்த கந்தசாமிக்கு ஒரே ஆச்சரியம். வீடு அமைதியில் மூழ்கி இருந்தது. இரவு மணி 8.30 IPL மாட்சு ஆரம்பித்திருக்குமே சன் டிவி சீரியல்கள் வேறு நடந்து கொண்டிருக்குமே குமாரும் லட்சுமியும் என்ன பண்ணுகிறார்கள் என்று அவர்களது அறைகளை எட்டிப் பார்த்தால் இருவரும் பாட புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.

    கந்தசாமி பூஜை அறைக்குள் சென்று மனதுக்குள் முருகனை தியானம் செய்து
    "முருகா எப்படி இந்த அற்புதம் நிகழ்ந்தது?" என்று வினவினார்.

    அசரீரி முருகன் சிரித்துக் கொண்டே " உன் மகனுக்கு அவனது அத்தை பெண் மீது காதல். நான் அவளை அவனுக்கு ஒரு போன் செய்து நீ படிக்காமல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனக்கு கணவராக வருபவர் நன்றாக படித்து அமெரிக்கா செல்ல வேண்டும் எனறு விரும்புகிறேன். நீ தொடரந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தால் பாஜி சிரிசந்தை அடித்தது போல் நான் உன்னை அடிப்பேன்" என்று சொல்ல பெட்டிப் பாம்பாய் படிக்க ஆரம்பித்தான்".

    "அதே மாதிரி உன் பெண் அவளது மாமன் மகனை விரும்புவதால் அவனையும் ஒரு போன் செய்து நீ இப்படி சன் டிவி சீரியல்களில் ஈடுபாடு இலலாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் எனது இல்லத்து அரசி யாக வந்து கோலங்கள் பல போட முடியும்" என்று சொல்ல அவளும் படிக்க ஆரம்பித்தாள்" என்றார்.

    கந்தசாமி மெய் சிலிர்த்துப் போய் " முருகா நீ கலியுகத்தில் கண் கண்ட தெய்வம்" என்றார்

  2. #2
    இளையவர் பண்பட்டவர் SivaS's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    66
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    32
    Uploads
    0
    பாவம் முருகனும் பிள்ளயாரோட ரிமோடுக்காக சன்டை பிடித்து தான் கந்தசாமியிட வந்தரோ தெரியேல்ல

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கடவுள்கூட மனிதனிற்கு வரமளிக்கும் போது என்ன வேண்டும் என்றுதானே கேட்டு அளிக்கிறார்.. ஓரு மனிதனிற்கு என்ன தேவை என்று அவன் மனதில் சிந்தித்துவைத்திருக்கிறான் என்று அறியுமாற்றல் அவனிற்குமில்லைத்தானே ...... (இருக்கோ இல்லையோ.... உங்கள் கதையிலிருந்து அப்படித்தானே பிரதிபலிக்கின்றது. இல்லையா?)

    காதலை வைத்தே கடவுளும் விளையாடுகிறார் என்று சொல்வதா? அல்லது காதலால் எந்தப் பெரிய வேலையும் சாதிக்கலாம் என்று சொல்வதா???

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by SivaS View Post
    பாவம் முருகனும் பிள்ளயாரோட ரிமோடுக்காக சன்டை பிடித்து தான் கந்தசாமியிட வந்தரோ தெரியேல்ல

    நன்றி சிவா அவர்களே. தங்களின் பதிலில் நல்ல நகைச்சுவை உள்ளது.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    கடவுள்கூட மனிதனிற்கு வரமளிக்கும் போது என்ன வேண்டும் என்றுதானே கேட்டு அளிக்கிறார்.. ஓரு மனிதனிற்கு என்ன தேவை என்று அவன் மனதில் சிந்தித்துவைத்திருக்கிறான் என்று அறியுமாற்றல் அவனிற்குமில்லைத்தானே ...... (இருக்கோ இல்லையோ.... உங்கள் கதையிலிருந்து அப்படித்தானே பிரதிபலிக்கின்றது. இல்லையா?)

    காதலை வைத்தே கடவுளும் விளையாடுகிறார் என்று சொல்வதா? அல்லது காதலால் எந்தப் பெரிய வேலையும் சாதிக்கலாம் என்று சொல்வதா???
    கடவுளுக்கு மனிதன் மனதில் உள்ள எண்ணங்கள் தெரிந்தாலும் சில சமயங்களில் தெரியாத மாதிரி திருவிளையாடல்கள் பண்ணுகிறார் பக்தர்களுக்கு அருள் புரிய. தங்களின் எண்ணங்களுக்கு நன்றி.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post

    காதலை வைத்தே கடவுளும் விளையாடுகிறார் என்று சொல்வதா? அல்லது காதலால் எந்தப் பெரிய வேலையும் சாதிக்கலாம் என்று சொல்வதா???
    அட என்னவிராடன் இப்படிச் சொல்லிட்டீங்க....

    கன்னியர் தன் கடைக்கண்ணைக் காட்டிவிட்டால்
    மண்ணிலே காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்..

    நான் சொல்லலீங்க பாரதிதாசன் சொல்லிருக்காராம்.

    மிகுந்த மகிழ்ச்சி ஐயா வந்ததுமே தங்கள் படைப்புக்களை வாசிக்கப் பெற்றேன்.

    இன்னும் மன்றமெங்கும் உலாவுங்கள் உங்கள் ஆர்வத்திற்கு நிறைய தீனி உள்ளது.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு என் பாராட்டுகள் மதுரைவீரன்..

    நாட்டு நடப்புகளை அழகாய்க் கோர்த்த கற்பனைக்கு சபாஷ்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்லா விழுந்து விழுந்து சிரித்தேன் கலியுகத்தில் கடவுளா என்று, சிக்கனமான கரு. முற்றிலும் உண்மை.

    ஆனாலும் கதையின் முடிவு உங்கள் திறமையை விளக்கியது. பாராட்டுக்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    அட என்னவிராடன் இப்படிச் சொல்லிட்டீங்க....

    கன்னியர் தன் கடைக்கண்ணைக் காட்டிவிட்டால்
    மண்ணிலே காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்..

    நான் சொல்லலீங்க பாரதிதாசன் சொல்லிருக்காராம்.

    மிகுந்த மகிழ்ச்சி ஐயா வந்ததுமே தங்கள் படைப்புக்களை வாசிக்கப் பெற்றேன்.

    இன்னும் மன்றமெங்கும் உலாவுங்கள் உங்கள் ஆர்வத்திற்கு நிறைய தீனி உள்ளது.
    நண்பர் செல்வா

    சற்று தாமதமாக பதலளிக்கிறேன். பொருத்தருளவும். பாரதி தாசன் அவர்களை மேற்கோள் காட்டி பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    உங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு என் பாராட்டுகள் மதுரைவீரன்..

    நாட்டு நடப்புகளை அழகாய்க் கோர்த்த கற்பனைக்கு சபாஷ்!


    நண்பர் இளசு அவர்களே

    உங்களின் பாராட்டுக்கள் எனக்கு தெம்பூட்டும் டானிக் மாதிரி. மிக்க நன்றி;

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    நல்லா விழுந்து விழுந்து சிரித்தேன் கலியுகத்தில் கடவுளா என்று, சிக்கனமான கரு. முற்றிலும் உண்மை.

    ஆனாலும் கதையின் முடிவு உங்கள் திறமையை விளக்கியது. பாராட்டுக்கள்.
    நண்பர் ஓவியா

    உங்களது பாராட்டுக்கள் என் செவிக்கு இனபத் தேனாய் வந்து விழுகின்றன. மிக்க நன்றி

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    காதலி சொன்னதற்காக கிரிக்கெட் மறந்த ஆண்
    காதலன் சொன்னதற்காக சீரியல்களை மறந்த பெண்..

    ஆனா ஆனா ஒண்ணு மட்டும் இடிக்குதே!!!!

    நான் நினைக்கிறேன் இப்ப அண்ணனும் தங்கையும் சன் டிவி மட்டுமே பார்ப்பாங்கன்னு


Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •