அவளிடம் பாலருந்துவிட்டு
முகம் துடைப்பதற்குள் எழுந்தோடி
பொருள் கலைப்பதற்கும்
எதிர்வீட்டு அன்னையிடம்
அருமைகளை அளந்து கட்டி
பின்னாளில் புகார் பெறவும்
ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும்
என்றோ மறந்துவிட்ட மொழியை
நாமே கேட்டு மகிழவும்
மயிலிறகைத் தலையில் சூடிய
கண்ணன் ஒருவன்
என் இல்லத்தில் இல்லை.
ஆதலின்
நான் நந்தரில்லை
அவளும் யசோதையில்லை
Bookmarks