Results 1 to 5 of 5

Thread: நினைவாகவே வாழ்கிறோம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0

    நினைவாகவே வாழ்கிறோம்

    மகனே
    நீ நலமாய்
    இருப்பாய் என்கிற
    நினைவில் எழுதும்
    என் எழுத்துக்கள்

    உன்னை பற்றிய
    எண்ணங்களே
    எங்கள் இருவரின்
    வாழ்க்கையாகி போனதால்
    இன்று நீ
    விட்டு பிரிந்து
    சென்ற பின்னும்
    உன் முகம் எங்கள்
    நெஞ்சை வருடி போகிறது

    மேல்நாடு போனதாலா
    மேற்கத்திய கலாசாரத்தில்
    மாறியதாலா
    எங்களுடன் வாழ
    இஷ்டமில்லை என்று
    சொன்னாய்
    அப்பொழுதே
    நாங்கள் இருவரும்
    நிஜமாய் இறந்தோம்
    நிழலாய் வாழுகிறோம்

    சின்ன வயது
    முதலே உனக்காக
    பார்த்து பார்த்து
    செய்தோமோ
    அவையெல்லாம்
    எங்களை பரிகாசம்
    செய்கிறது
    உன் பாசத்தால்...

    இன்று
    இருவரும் பெரிய
    வீட்டில் தனிமையில்
    ஆறுதல் கொண்டாலும்
    உன் நினைவாகவே
    வாழ்கிறோம் வாழ்க்கையை.........
    Last edited by நம்பிகோபாலன்; 18-06-2008 at 08:24 AM.

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    வலியை ஏற்படுத்திவிட்டது கவிதை.
    பெற்றோர்களையும் கூட வைத்துக்கொள்ளலாம் என்பது சில நாடுகளில் உள்ளதே.

    எங்களுடன் வாழ
    இஷ்டமில்லை என்று
    சொன்னாய்
    அவர்களுடன் வாழவாவது இவர்கள் இஷ்டம் தெரிவித்திருக்கலாமே.
    உறவுகளின் அன்பை உணராதவர்கள் பணம் தேடும் எந்திரங்கள்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பெற்று ஆளாக்கி
    பாலூட்டி சோறூட்டி
    மகன் இலட்சியமே
    தன் இலக்கென வாழ்ந்து
    ஏணியாக இருந்து
    ஏற்றி விட்டவர்களை
    மேலிருந்து காலால்
    உதைத்து வீழ்த்திய
    கயமையை சாடும் கவிதை...

    பாராட்டுக்கள் நம்பி...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    நன்றி கவி, பணம் தேடும் எந்திரங்கள் உண்மையான வார்த்தை.

    நன்றி ஓவியன்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒரு பெற்றவர்களின் கண்ணீர் கடிதம்.

    திரவியம் சேர்க்க மேலை நாடுகளுக்குச் சென்றவர்களைச் சாடி... அதிலும் பெற்றவர்களை மதிக்காமல்..

    நன்று நம்பி.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •