Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அம்மா...

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0

    அம்மா...

    அகராதியில்
    அன்புக்கு மறுபெயர்
    நீ

    அம்மா
    உன்னை பற்றி எழுத
    தோன்றியபொழுதெல்லாம்
    எழுத வார்தைகள்
    இல்லாமல் தோற்றுபோன
    நாட்கள் பல

    இருப்பின்
    உன் அன்பைபோல
    இன்று என் எழுத்துக்கள்
    உன்னை பற்றி எழுத
    ஆனந்த தாண்டவம்
    ஆடுகின்றன

    உன்னை பற்றி
    எழுதிகொண்டே
    போகலாம்
    முடிவு என்பது
    உன் அன்பை போல
    அளவு கிடையாது

    உனக்கு நான் மகனாக
    இருந்த நாட்களை விட
    அதிகமாக
    எனக்கு தோழியாகவே
    நீ இருந்திருக்கிறாய்

    அவற்றில்
    நான் ரசித்தவை

    என்மேல் கோபம் கொண்டு
    மெளனமாய் இருந்து
    என்னை திருத்துவதும்
    என் சந்தோஷத்திற்காக
    எதை வேண்டுமானாலும்
    விட்டு கொடுப்பதும்
    நீயின்றி யாரால்
    முடியும்

    கண்ணீரில் நான்
    உன் மடியில் புதைந்து
    அழுத நாட்களும்
    அப்படியே தூங்கிய
    நாட்களும்
    இன்று நினைத்தாலும்
    சுகமான நினைவுகளாய்
    மனதில் தாலாட்டுகிறது..

    இன்று
    உன் பேர குழந்தைகளை
    கொஞ்சும் அழகை பார்த்து
    மீண்டும் நான் குழந்தையாக
    மாட்டேனா என்றே
    ஏங்க வைக்கிறாய்…

    உன்னை பற்றி
    எழுதிகொண்டே
    போகலம் முடிவு
    என்பது உன் அன்பை போல
    அளவு கிடையாது

    முடிவாய்
    மீண்டும் எனக்கு
    ஜனனம் இருந்தால்
    உன் மடியில் குழந்தையாக
    வேண்டும் அம்மா...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    என் அன்பும் வாழ்த்தும் நம்பிகோபாலனுக்கு!

    மௌனம் மட்டுமே போதும்.
    மகன்/மகள் மனம் உருக!

    அப்படி ஒரு மகாசக்தி - அம்மா!
    --------------------------------
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அம்மா, அம்மாவாகப் பலருக்கு அன்பு செலுத்தலாம். ஆனால் தோழியாக வாழ்பவர்கள் குறைவுதான். அம்மாவின் அன்பு என்பது நீங்கள் சொன்னதைப்போல அளவிடமுடியாததுதான் நம்பி. வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    இன்றைய காலகட்டத்தில் பல காரணங்களை சொல்லி அம்மாவை வெறுக்கிறார்கள், விரட்டுகிறார்கள்..! ஆனால், அம்மா என்ற அன்பின் வடிவத்தை காலம் முழுதும் கண்ணுக்குள்ளும், இதயத்திற்குள்ளும் வைத்து காக்க 10 மாதம் சுமந்து பெற்ற தியாகம் போதும் என்பது என் கருத்து..! கண் பனிக்க செய்யும் கவி உங்களுடையது..! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நம்பி.!
    அன்புடன்,
    இதயம்

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    இன்று
    உன் பேர குழந்தைகளை
    கொஞ்சும் அழகை பார்த்து
    மீண்டும் நான் குழந்தையாக
    மாட்டேனா என்றே
    ஏங்க வைக்கிறாய்…
    திகட்டாத அன்பு அன்னையுடையது.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    அனைவரின் தாயுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    இதயம் சொல்வது போல் அன்பு என்ற வடிவத்தை அவர்கள் நம்மை கஷ்டப்பட்டு பெற்றேடுத்தது முலம் உணரலாம்.எளிமையான கவிதை.வாழ்த்துகள் நம்பி அவர்களே

  8. #8
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    62,598
    Downloads
    12
    Uploads
    0
    மெளனத்தின் அழகெல்லாம் தாய் தான் .....

    செய்த பிழைகளையும் செய்யும் பிழைகளையும் திருத்துபவள்.......

    தன்னிலை மறக்க செய்யும் தாயின் மடியும் கரங்களும் போதும் வாழ்க்கைக்கு......

    உங்கள் அன்னை தமிழும் உங்கள் அன்னை கவிதையும் என்னை தன்னிலை மறக்க செய்கிறது நண்பரே........

    என்றும் அன்புடன்...
    உங்கள் நண்பன்.......

  9. #9
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    தாய் பாசம் என்பது இயற்கை. மகன்(ள்) பாசம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ளது.
    இந்த பாசத்தை கவிதையாக்கிய நம்பிக்கு இந்த தும்பியின் வாழ்த்துகள்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by நம்பிகோபாலன் View Post
    முடிவாய்
    மீண்டும் எனக்கு
    ஜனனம் இருந்தால்
    உன் மடியில் குழந்தையாக
    வேண்டும் அம்மா...
    பலரின் ஏக்கம் இது தான்..
    அம்மாவுக்கு இணையேது இவ்வுலகில்..

    வாழ்த்துக்கள் நம்பிகோபாலன்.

  11. #11
    புதியவர் பண்பட்டவர் மலர்விழி's Avatar
    Join Date
    25 Jun 2008
    Location
    மலேசியா
    Posts
    40
    Post Thanks / Like
    iCash Credits
    8,967
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் அழுத்தமான, அழகான, ஆழமான, இதமான, ஈரமான, உறவாடும், மனதை ஊஞ்சலாட செய்த கவிதை...

    இப்பொழுதுதான் அம்மாவின் மடியில் தவழ்ந்தது போன்ற நினைப்பைத் தந்து விட்டது

    "கண்ணீரில் நான்
    உன் மடியில் புதைந்து
    அழுத நாட்களும்
    அப்படியே தூங்கிய
    நாட்களும்
    இன்று நினைத்தாலும்
    சுகமான நினைவுகளாய்
    மனதில் தாலாட்டுகிறது.."
    என்னையும் தாலாட்டிவிட்டது இவ்வரி

    நன்றி நம்பி அண்ணா
    நேற்று என்பது சரித்திரம், நாளை என்பது விசித்திரம், இன்று அது ஒரு வரம்...

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அன்னையின் அன்பு மட்டும் குறைவதே இல்லை. வரிகள் அருமை. பாராட்டுக்கள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •