உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது
உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது
முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?
பத்திரமாய் இருந்து கொண்டும் நான் தொலைத்ததென்ன..?
உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
தொடரட்டும்...
Bookmarks