Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: கருவறை உறவிது!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    கருவறை உறவிது!



    சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
    பூத்த உறவல்ல இது!
    இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
    பூத்த உறவிது!

    நானிருந்த கருவறையில்
    எனக்குப்பின் வந்தவள் நீ!
    நான் தமக்கை என்ற பதவியை
    எனக்குத் தந்தவள் நீ!

    காற்றில் இரு பூக்கள்
    உரசிக்கொள்ளும் கவிதைதான்
    உனக்கும் எனக்குமான
    மோதல்கள்!!

    இப்பொழுதெல்லாம்
    மோதல்களில் நீயே
    வெற்றிக்கொள்கிறாய்..

    நம் ஆயுதங்கள்,
    அதிகபட்சம் தலையணைகள்!

    காலங்கள்
    வினாடிகளை விடவும்
    வேகமாய் ஓடுகின்றன!

    பால்ய காலங்களை கடந்து -இன்று
    பருவ காலத்திலே நாம்!

    ஒரே அறையில்
    ஒன்றாக பயில்கிறோம் -பின்
    நன்றாக துயில்கிறோம்!
    எப்போதும் மகிழ்கிறோம்!!

    இருவரும் பிரியும் தருணங்கள்
    எதிர்காலங்களில் வரலாம்!
    சில கண்ணீர்காலங்களை
    அவை நமக்கு தரலாம்!

    அந்த கணங்களில் எல்லாம்
    என் கண்களின் வழியே வழியும்
    உனக்கும் எனக்குமான
    செல்ல மோதல்களின் நினைவுகள்!!!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சகோதரிக்குள்ளான பாச உணர்வுகளை மிக அழகான கவிதையாய் வடித்திருக்கிறீர்கள் ஷீ.


    காற்றில் இரு பூக்கள்
    உரசிக்கொள்ளும் கவிதைதான்
    உனக்கும் எனக்குமான
    மோதல்கள்!!

    அவர்களுக்குள்ளான செல்ல மோதல்களை சொல்ல நீங்கள் கையாண்ட அந்த உதாரணம் அசத்தல். கவித்துவம் வழிந்து நிற்கிறது.

    வாழ்த்துகள் ஷீ-நிசி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இருவரும் பிரியும் தருணங்கள்
    எதிர்காலங்களில் வரலாம்!
    சில கண்ணீர்காலங்களை
    அவை நமக்கு தரலாம்!

    அந்த கணங்களில் எல்லாம்
    என் கண்களின் வழியே வழியும்
    உனக்கும் எனக்குமான
    செல்ல மோதல்களின் நினைவுகள்!!!
    பாசமலர்களுக்கு ஏற்படும்
    அனுபவங்கள் அழகான வரிகளில்.,....

    அடித்துக்கொண்டாலும்...
    அதில் ஒரு இன்பம்...
    அதை பிரிதொரு நாள்
    நினைக்கும்பொழுது....
    வாயில் புன்னகை.....

    வாழ்த்துக்கள் ஷீ-நிசி..

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி சிவா.ஜி! நன்றி அறிஞரே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாங்க ஷீ.. நலமா?


    அழகுணர்வுக்கு மறுபெயர் நீங்கள்..

    இங்கே உறவுகளில் ஒரு அழகான உறவை
    இதமான வரிகளால் பரிமாறிய பாங்கு - அடடா!

    நான் சந்தித்த சில நல்ல சகோதரி-கள் நினைவுக்கு வந்தனர்..

    அழகுகள் வளரட்டும் இன்னும்..

    வாழ்த்துகள் ஷீ!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    உறவுகளை கவிதையாக கொடுக்கும் போது அதில் ஒன்றாய் மாறிபடிக்கும்
    அந்த கணங்களில் எல்லாம்
    என் கண்களின் வழியே வழியும்
    உனக்கும் எனக்குமான
    செல்ல மோதல்களின் நினைவுகள்!!!
    அருமையான கவிதை ஷீ...

    இந்த உறவை போலவே
    வரிகளும் மென்மையாய்...
    வாசிக்கும் போது மனதில்
    மெல்லியதாய் ஒரு அன்பு கீறல்...

    அத்தனை வரிகளையும் தனி தனியே பிரித்து ரசிக்கலாம்

    இருந்தாலும் சிவா எடுத்த கொடுத்தா இந்த வரிகளுக்காக
    காற்றில் இரு பூக்கள்
    உரசிக்கொள்ளும் கவிதைதான்
    உனக்கும் எனக்குமான
    மோதல்கள்!!
    உங்களுக்கு 1000 இ-பணம் பரிசு,,,,,
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அருமை கவிஞரே.. மெல்லிய உணர்வுகளை மென்மையாய் கவிதை வரிகளில் படரவிட்ட உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்..!!

    வெண்பா வகை கவிதை எழுதுவதில் இங்கே உங்களை வெல்ல முடியாது என்றே தெரிகிறது..கவிஞரே..!!
    எனக்கு எழுத எத்தனிக்கும் எத்தனையோ கருக்கள் வார்த்தை கிடைக்காமல் உருக்குலைந்து போயிருக்கின்றன..!!
    ஆகையால் உங்களை குருவாய் எண்ணி உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. இதுபோல அழகியலுடன் கவிதைகள் எழுதும் வித்தையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிதாருங்களேன்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அன்பின் ஷீ...!!

    எல்லோருடைய மனதின் ஆழத்தினை மென்மையாகத் தட்டி எழுப்பி அவர்களையும் படைப்பின் கதாநாயகர்களாக உணரவைக்கும் யுக்தி உங்களுடையது, சேரனின் ஆட்டோகிராப் போல...

    சரியான கோணத்தில் சரியான் இடத்தில் வார்த்தைகள் வாய்த்திருப்பதால் இங்கும் உங்களுக்கு வெற்றியே..!!

    நான் சகோதரிகளுடன் பிறந்ததில்லை, ஆனால் உங்கள் கவிதை வரிகள் அப்படியே என் சகோதரனுடனும் இசைந்து நிற்பது ஒரு கவிஞனாக உங்களின் வெற்றியே....

    பாராட்டுக்கள் ஷீ..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    நானிருந்த கருவறையில்
    எனக்குப்பின் வந்தவள் நீ!
    நான் தமக்கை என்ற பதவியை
    எனக்குத் தந்தவள் நீ!
    எனக்கிந்த பாக்கியமும் உண்டு.
    செல்ல சண்டைகளும் நடந்தது, நடப்பது, நடக்கப்போவதுமுண்டு. "எனக்கு எனக்கு" என்ற நிலை மாறி கண்ணீர் மல்கி புக்காத்து போய் பிறகு "எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ" னு கொடுத்த பொழுதுகளும் உண்டு. "அவ தான் உனக்கு செல்லப்பிள்ளைனு" வம்பிழுத்து அம்மா கிட்ட இன்னும் ரெண்டு கூடுதல் முத்தங்கள் பெற்றதும் உண்டு.

    எனக்கு எனக்கு என்று
    பிடுங்கிய பொம்மைகள்
    நீயும் எனது தான்
    என்றுணர்ந்தபோது - எறிந்து
    என் மடியில் நீ
    விளையாட்டுப்பொம்மை ஆனாயடி.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தாயின் வயிற்றின் மேட்டில்
    எதிர்பார்ப்போடு முத்தமிடும் தருணம்..,
    பாசத்தின் பாகப்பிரிவை மறக்கடிக்கும் பந்தத்தின் தோற்றம்...
    இந்தப் பந்தம் ஏற்படாதுபோனால்..,
    சகோதர பாசம் விரோதமாய்த்தான் போகும்...
    சகோதரம் பிரிவினையல்ல,
    பிரியாத இணை என்று
    புரியவைத்தல் பெற்றோரின் கடமை...
    இந்தப் புரிதலைத் தவிர்த்தால்
    சகோதர மனங்களில் விரோதமை
    தடம் பதித்(ந்)துவிடும்...

    பிறக்கப் போகின்ற, பிறந்த குழந்தைகள் மேல் காட்டும் அதீத கவனிப்பு,
    தன் மேலான பாசத்தைக் குறைத்துவிட்டது என்ற எண்ணத்தை,
    மூத்த குழந்தைகளிடம் ஏற்படாது தவிர்ப்பதில் பெற்றோரின் அக்கறை அவசியமானதாயிருக்கவேண்டும்...

    கருவறை உறவிது...
    நான் வாழ்ந்த கருவறை உனது இன்று...
    வெளியே வா காத்திருக்கின்றேன்,
    உன் பிஞ்சு விரலின் பிடியில்,
    என் ஒரு விரலைப் பிணைக்க
    எதிர் பார்த்திருக்கின்றேன்...

    அழகிய கவிதை... மனதில் பாச அழுத்தத்தைத் தரும் கவிதை...
    மிகுந்த பாராட்டுக்கள் ஷீ-நிசி...
    கவிதைக்கு எனது சிறு கௌரவிப்பாக 500 iCash.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    அருமையான கவிதை.
    எனக்கு தங்கைகள் கிடையாது என்பதால் என் தோழிகளை தங்கையாக பாவித்து உரிமையோடு என்னை கன்டிக்கும் பொழுதும் கிடைக்கும் ஆனந்தம் உங்கள் கவிதையை படிக்கும் பொழுது கிடைக்கிறது.
    மனமார்ந்த பாராட்டுக்கள்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    ஷீ.. ஒரு நிமிடம் என்னையே
    மறந்து ரசித்தேன்...

    எத்தனை அழகான வரிகள்....
    பாராட்ட வார்த்தையே சிக்கவில்லை...

    இருந்தாலும்...
    தொடர்ந்து எழுத பாராட்டுக்கள் ஷீ...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •