Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 28 of 28

Thread: கருவறை உறவிது!

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    என்ன மிஞ்சிப்போனா இன்னும் ஒரு எட்டுக்கிலோமீட்டர் இருக்குமா கவிஞரே..??

    எல்லா வாத்தியாரும் இன்னமும் அப்படியேத்தான் இருக்காங்க போலிருக்கு..
    ஆதவா - மன்றத்தில் இப்போது அவுட் ஆப் ஆர்டர்..!!
    கவிதா - அக்கா அப்பப்ப ஆப்சண்ட்..!!
    தாமரை - கத்துத்து தராரோ இல்லியோ கடிச்சி எடுத்துடுவாரு..!!

    அதனால கவிஞரே.. நீங்களே சொல்லிக் கொடுத்துங்களும்..
    கவலைப்படாதீங்க சுபீ... சீக்கிரமே வந்துடுவேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமை.. அருமை......... மிக அருமை.

    இறுதி வரி என் கண்களுக்குள் சென்று கவிதை வழிவதைக் காணமுடிகிறது.

    மனித வாழ்நாளில் இறுதியாக வரிக்கப்பட்ட ஆயுட்காலம் அறுபதாக இருந்தாலும் பலநூறு ஆயிரம் வருடங்கள் உள்ளடக்கிய வாழ்வை உண்ட செரிமானத்தில் சிலர் இறந்து போகிறார்கள். உடன் பிறந்தார் என்பது தம் பெற்றவர்கள் புகுத்தும் இன்பமாக இருப்பினும் எல்லோருடைய வாழ்விலும் இவ்வகைத் திணிப்பு இருப்பதாக இல்லை. கருவறையில் படுத்துருளும் இரு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கவிதைகள் கிடைப்பதும் அபூர்வமாகவே இருக்கிறது.. உண்மைதான். ஒரு அறையில் இருவர் என்பது அத்துணை சாதாரண விசயமா என்ன? ஒன்றன்பின் ஒன்று என்பது (அதாவது இப்படத்திற்குத் தக்க) வழமையில் நடக்கும் சங்கதி.

    சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
    பூத்த உறவல்ல இது!
    இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
    பூத்த உறவிது!


    உறவுகள் எப்படி சத்தம் சூழ்ந்த உலகில் பிறக்கும்? ஆம்.. பிறக்கத்தான் செய்கிறது. இவ்வுறவுகளுக்கு நிறம் தேவையில்லை, வடிவம் தேவையில்லை, எண்ணம் ஒன்றே போதுமானது. (இம்மன்றத்து உறவுகள் எல்லாருமே சத்தம் சூழ்ந்த உலகில் பிறந்த உறவுகள் தானே!) இன்னும் கவனிக்க.. உறவுகள் பிறக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர உறவெனும் உயிர் என்று சொல்லப்படவில்லை. அவ்வகை உறவுகளுக்கு உயிர் தேவையில்லை என்று சொல்லவருவதே கவிஞரின் கணிப்பு என்பது என் கருத்து. கருவறையில் இரத்தம் இருக்குமா என்ற மருத்துவ ஆய்வுகளைத் தவிர்த்துவிட்டு, தன்னோடு இணையாக, துணையாகப் பிறக்கும் ஒரு உறவினை சந்த அழகியல் சேர்த்துத் தந்த கவிதை.. இனிப்பு உப்புமா.

    நானிருந்த கருவறையில்
    எனக்குப்பின் வந்தவள் நீ!


    நானிருந்த என்றால் இப்போது சத்த உலகில் (கவிஞர் பாணியில்) இருப்பதாக அர்த்தம். இரட்டைக் குழந்தைகள் அல்ல என்பதை இவ்வரிகளே தெளிவுபடுத்திவிடுவதால் மேற்கொண்டு இடவெளி விட்டுப் பிறந்த சகோதர/சகோதரியின் கவிதையாக எடுத்துக் கொள்ளலாம். இதில் கவிதை வாசிப்பது அக்கா.. தங்கை பிறப்பதால் தனக்கு ஒரு பதவி கிடைப்பதாக எண்ணுகிறாள். தங்கை எனும் பதவியும் தன் தங்கைக்குக் கிடைப்பதால் அடுத்து பிறப்பவளே பதவியினை உறுதி செய்பவளாகவும் இருக்கிறாள்.

    பின்,

    இரு சகோதரிகளின் மோதல் எவ்வாறு இருந்தது?

    காற்றில் இரு பூக்கள்
    உரசிக்கொள்ளும் கவிதைதான்
    உனக்கும் எனக்குமான
    மோதல்கள்!!


    இந்த இடத்தில் எனக்குத் தோன்றியது.... தவறாக எண்ணவேண்டாம். இக்கவிதை வரிகளை கவனிக்கும்போது கணவன் மனைவியின் ஆரத்தழுவலுக்கிடையே தோன்றும் மெல்லிய இடைவெளியை நினைவுறுத்துகிறது.. பிணைப்பின் எதிரி மெல்ல ஊடுறுவும் போது இம்மாதிரி தோன்றுவதுண்டு. நிற்க.
    சகோதரிகளின் பாசம், வம்புகள் கலந்து இருக்கிறதையும் அவ்வம்பு எத்தனை மெல்லியது என்பதையும் சொல்வதற்கு இதைவிட சிறந்த வரிகள் இருப்பதாக இதுவரை நான் அறியவில்லை.

    அக்காள் மெல்ல விட்டுக் கொடுக்கிறாள். தன் வயதிற்கான பக்குவத்தை அடைந்துவிட்டாள். தங்கையின் துடுக்குத் தனத்தைப் பார்த்து மனமகிழ்பவளாகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள்.. மோதல்கள் திட்டமிடுகின்றன. வெற்றி பெறுவது தங்கை.

    நம் ஆயுதங்கள்,
    அதிகபட்சம் தலையணைகள்!


    இந்த வரிகளை தங்கை வெற்றிகொள்ளும் வரிகளுக்கு முந்தி அமைத்திருக்கலாம் என்பது என் கருத்து. என்றாலும் கரு சிதைந்துவிடவில்லை. தலையணைகள் சண்டையிட்டால் மனதுக்குள் மகிழ்ச்சி பெருகலாம். எனக்கும் அவ்வகை அனுபவங்கள் நேர்ந்திருக்கின்றன. காகிதக் கவிதைகள் நெருக்கி வைக்கப்பட்டிருக்கும் தலையணையைத் தூக்கி அடிக்கும் போது மனம் வலிக்காது.. மாறாக சந்தோசம் ஆறாக பொங்கும். தலையணைகள் பொறுத்தவரை பலவகையான உணர்வுகளைக் கொடுக்கவல்லது. அதை உணர்ந்தால் உணர்ந்தவர்களுக்குப் புரியும்.

    பிந்தைய மாற்றங்கள். நவீன யுகத்தில் சுருங்கிப் போன காலம், வெகுகாலம் நீளும் கால அளவுகளைக் குறுக்கியதன் விளைவு, வினாடிகள் தறிகெட்டு ஓடுகின்றன தன்னையும் மறந்து.. பருவங்கள் மாறுகின்றன. இயற்கையிலும் வாழ்க்கையிலும்..... பிரபஞ்சத்தில் எப்பொருளும் நிலையானதல்ல. பருவ அல்லது விளைவு மாறுபாடுகளைச் சந்தித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. மனித காலங்கள் மனித உறவுகள் அதற்கு விதிவிலக்கல்ல.

    ஒன்றாக பிறந்ததும், ஒன்றாக வளர்ந்ததும், ஒன்றாக அழுததும்.. ஒன்று இரண்டாவதன் முன்னர் ஒன்று, ஒன்றாகவேதான் இருக்கும். சமுதாய மேம்பாடு என்று சொல்லவேண்டாம், சீர்கேடு என்று சொன்னாலும் தகும், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து இன்று தந்தை ஒருபக்கம் தனயன் ஒருபக்கம், தாய் ஒருபக்கம் என்று பிரிந்து வாழும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். சகோதரிகள் பிரிவது எதிர்பாராததல்ல.

    சில கண்ணீர்காலங்களை
    அவை நமக்கு தரலாம்!


    அருகருகே இருந்தும் ஒரு கண்ணின் நீரை இன்னொரு கண் பார்க்க இயலாது. இப்படிப்பட்ட ஒருமைகளும் சமுதாயத்தில் உண்டு. சகோதரத்துவம் திருமணத்திற்கு அப்பால் பிய்த்து எறியப்பட்டு இரத்த உறவுகள் இரத்தம் பார்க்கும் நிலையும் நடக்கிறது........... அதுவும் ஒரு கண்ணீர் காலம் தான். சமுதாயத்திற்கு.

    இவையெல்லாவற்றின் நினைவுகளும் அசைபோடும்பொழுது நம்மை அறியாமல் மனம் அழுக எத்தனிக்கிறது... நம்மை அறியவைக்க கண்ணீர் பொத்திட்டு வருகிறது. இன்றைய மொபைல் உலகில் கண்ணீர் கண்களை எட்டும் முன்னர் நம் எண்கள் அங்கே எட்டி, எலக்ட்ரான்கள் கண்ணீர் விடுகின்றன. என்றேனும், கணவனால் தன் குடும்பமோ அல்லது தன் கணவன் குடும்பத்தால் தன் குடும்பமோ பிரிந்து எலக்ட்ரான்கள் வழியே கண்ணீரைப் பீய்ச்சி அடிக்க இயலாத தருணத்தில் புடவைக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குடும்பப் புகைப்படம் திரவ மழையில் நனைந்துகொண்டிருக்கலாம்.

    ஆக மொத்தம் கருவறைக்குள் சென்று கவிதை படிக்கவேண்டியதாகிவிட்டது இக்கவிதையினைப் படிக்கும்போது. எதுகைகள் அழகு.. அதனை நன்கு பொறுத்தி எழுதியமையும் அழகு. சில உருவகங்கள் இன்னும் அழகு. (நினைவுகள் கண்ணீர் ஆவது.) எனக்கும் ஒரு தங்கை இருப்பதாக உணரும் போது கவிதையின் வீரியத்தை நன்கு உணரமுடிகிறது.. அதனுள் ஆழ சென்று கண்ணீர் உகுப்பது எளிதாகிறது........

    நல்ல கவிதை......

    எனக்கு எனக்கு என்று
    பிடுங்கிய பொம்மைகள்
    நீயும் எனது தான்
    என்றுணர்ந்தபோது - எறிந்து
    என் மடியில் நீ
    விளையாட்டுப்பொம்மை ஆனாயடி.
    நல்ல கவிதை கவிதா.. புரிதலின் தொடக்கத்தில் தனக்கேயான மாற்றத்தை நன்கு உணரமுடியும், தனக்கு, தாந்தான் என்று எல்லாமே எண்ணுவதைக் காட்டிலும் தனக்குப் பிடித்தமானவரைத் தனக்கு என்று எண்ணுவதன் நோக்கமே பாசமழையில் முழுமையாக நம்மைக் கொடுக்கும் நம்பிக்கை.

    மிக நல்ல இரு கவிதைகள்....................

    ஆதவன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி சூரியன்! நன்றி இதயம்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவா! மறுபடியும் மிக அழகிய விமர்சனம்.. ஒரு படைப்பாளிக்கு இதைவிட சிறந்த சன்மானம் ஒன்று இராது என்றே கருதுகிறேன்..

    நன்றி ஆதவா!
    Last edited by ஷீ-நிசி; 18-06-2008 at 01:30 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •