Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கவிதை...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    கவிதை...

    கவிதை...

    நின்று போன பேருந்திற்கு
    சதா நிற்கமட்டுமே தெரிந்த
    நிழல்குடைக்கு
    கடந்து போன காலத்திற்கு
    முடிந்து போன வசந்ததிற்கு
    விழியோரம் எட்டிப்பார்த்த
    கண்ணீருக்கு
    அந்தக் கண்ணீர் வரக்
    காரணமாயிருந்தவளுக்கு
    சதா குடைந்து கொண்டிருக்கும்
    மனசாட்சிக்கு
    விழி விரித்து
    மிரட்டிப்பார்க்கும் தனிமைக்கு
    சிலிர்ப்பை ஏற்படுத்தும்
    மழைத்துளிக்கு
    என் தேச அவலத்திற்கு
    குப்பை பொறுக்கும்
    சிறுவனுக்கு
    குப்பைத் தொட்டிக்கு
    ஆறாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு
    மூணாங்கிளாஸ் டீச்சருக்கு
    அம்மாவுக்கு அப்பாவுக்கு
    எனக்கு என் நண்பனுக்கு
    அதீதமாய்
    நிலா நட்சத்திரங்கள்
    பிரபஞ்சம்..
    எல்லாக் கவிதைகளும்
    எழுதி முடித்த பிறகு....
    என்னை விடுத்து
    என்ன எழுதிக் கிழித்து விட்டாய்?
    என்று
    ஈனஸ்வரத்தில் கவிதை கேட்டது...
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:38 PM.

  2. #2
    இனியவர் anbu's Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    UAE
    Posts
    637
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதையின் அறியாத்தன்மை
    இன்னமும் தன்னைத் தானே
    புரிந்துகொள்ள முடியாத
    இயழாமை கவிதைக்கும் உண்டு
    என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு
    சிறப்பான தொகுப்பு.

    பாராட்டுக்கள் ராம்பால் அவர்களே.
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:39 PM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ராம்.. செதுக்கிய உன் படைப்புகள் சொல்லும் பல..

    பாராட்டுக்கள் பலப்பல...
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:42 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #4
    இளம் புயல்
    Join Date
    18 Jun 2003
    Location
    Manama, Bahrain
    Posts
    399
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதையே சொல்லவா உன் அழகை நான் இன்று
    கவிதை என்று தலைப்பிட்டு ஒரு காவியமல்லவா படைக்க முயன்றிருக்கின்றீர்கள். நன்றி இன்னும் படையுங்கள்
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:43 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    கவிதைக்குத் தான் எத்தனை கரு?
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:44 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கவிதை.
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:45 PM.

  7. #7
    இனியவர்
    Join Date
    21 Jun 2003
    Location
    துபாய்/மானுடக்க&
    Posts
    885
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை கவிதைதான்
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:46 PM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சிக்கென ஒரு சின்ன நிழற்படம்!
    பாராட்டுகள் ராம்!
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:47 PM.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    ''என்னை விடுத்து
    என்ன எழுதிக் கிழித்து விட்டாய்?''

    ராம்பால் நண்பரே! இந்த வரிகள் என்ன சொல்ல வருகின்றன?
    எனக்கு புரியவில்லை.-அன்புடன் அண்ணா.
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:47 PM.

  10. #10
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    அதாவது எல்லாவற்றைப் பற்றியும் கவிதை
    எழுதியாகிவிட்டது கவிதையைத் தவிர..
    கவிதையைப்பற்றி கவிதை எழுதவில்லை என்பதே அதன் கேள்வி..
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:48 PM.

  11. #11
    இளையவர்
    Join Date
    04 Jul 2003
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை கேட்ட கேள்வி தப்போ....
    ஆனால் உன்னை விடுத்தது என் என்றால் உனக்கு
    என வரிகள் ஏது...
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:48 PM.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    ராம்பால் நண்பரே! கவிதை சரியானதுதான் என எனக்கு புரிந்தாலும்
    அந்த வரிகள் மீண்டும் மீண்டும் படித்தபோதும் பிடி கிடைக்கவில்லை.
    சந்தேகத்தை மனதில் வைப்பதைவிட உங்களைக் கேட்டு விடுவதே
    நல்லது என நினைத்தேன். உங்கள் கவிதையில் ஒரு குறையும் இல்லை.
    இப்பொழுது புரிந்ததும் கூட. நன்றி நண்பரே.-அன்புடன் அண்ணா.
    Last edited by விகடன்; 02-05-2008 at 08:49 PM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •