வில்லொடித்து
மணக்கவில்லை
என்பதால் விலகிதான்
போனாயோ
மாதவி வீட்டுக்கு
வழியனுப்ப
கண்ணகியாக நானிருப்பேன்
நினைத்தாயோ
எப்பொழுது உனக்கு
என்னை பிடிக்காமல்
வேறொருத்தி பிடித்ததோ
மரணிக்க முயர்ச்சித்தேன்
தோற்றுவிட்டேன்
ஆதலால் மறக்க
துணிந்துவிட்டேன்…
உன்னிடம் ஒரே
ஒரு கேள்வி
இன்று வரை என்னை
கொல்லும் கேள்வி
என்னை எங்கே உனக்கு
பிடிக்காமல் போனது?
இங்கே
தவறாக யாரேனும்
நினைக்கலாம்
அவர்களுக்கு
ஒரே வார்த்தை
என் வாழ்க்கை விரயமாகி
காயப்பட்டு போயிருக்கிறேன்
என் மனதை கொய்தவன்
முன்
வாழ விரும்புகிறேன்
வாழவிடுங்கள்…..
Bookmarks