Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 63

Thread: ஜீவியும் காதலும்.... பகுதி 7 (இறுதிப்பாகம்)

                  
   
   
  1. #1
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    ஜீவியும் காதலும்.... பகுதி 7 (இறுதிப்பாகம்)

    (இந்த கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)

    பகுதி 1

    ஜீவீந்திரன் எனும் ஜிவியும் காதலும். தலைப்பே ஒரு கரையால் இடிக்கிறது. காரணம் காதல் என்பதை வார்த்தையாலும் திரைப்படத்தாலும் மட்டுமே பார்த்து அறிந்தவன். இந்த லட்சணத்தில் ஜிவியும் என் காதலும் என்ற தலைப்பு பொருந்தவே பொருதாது. ஆனாலும் இந்த காதல் அவனையும் வாட்டியிருக்கிறது. நம்புகிறீர்களா.... இதோ நிரூபிக்கிறேன். x=y=z ஆகவே x=z என்கிறீர்களல்லவா.... அவனது நண்பன் காதலால் அவன் அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். அவனால் ஜிவி அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். ஆகவே ஜிவியும் காதலால் அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். (எப்படி என் கணித முளை.... அட ச்சீ... தூ........ மூன்றாம் தரப்பாக ஜிவி இருந்திருக்கிறான். அதனால் வந்த அவஸ்த்தைக்கு தான் இத்தனை விளாவாரி... சரி இனி அந்த ஜிவி எனும் ஜீவீந்திரனின் சுயசரிதையை பார்ப்போம்.


    கல்லூரிக்காலங்களில் காதல் வரும் என திரைப்படம் பார்த்து அறிந்தவன் நான். அதை கண்கூடும் கண்டிருக்கிறேன். நம் ஊரில் ஒரே வகுப்பறையில் இருந்தாலும், மாணவிகளின் பெயரை கூட ஆசிரியர் வரவுகளை பதியும் தருணத்தில், அவரவர் பெயரை அழைக்கும் போது பிரசன்ட் சேர் என்ற வார்த்தைகள் வருவதை வைத்து தான் பெண்களின் பெயர்களை அறிவோம். அத்துடன் சரி. பேச்சு வார்த்தைகளுக்கு இடமே இல்லை... அப்புறம் உயர் தரம் வந்ததும் சற்றே நெருக்கம் ஏற்படும் வழமை. ஆனால் நமக்கு பழக்கதோசமோ என்னமோ விரிசல் அதிகமாகவே இருக்கும். நமக்கு வாய்க்கும் நண்பர்களும் அப்படிப்பட்டவர்கள். (நாம் ஆறுபேர் இருக்கிறோம்.) இற்றை வரைக்கும். ஆனால் ஒருவனை தவிர.. அந்த ஒருவனும் எப்படி மாறினானோ தெரியாது....

    அவனிடம் இருக்கும் கலைநயம் தான் அந்த காதலுக்கும் காரணமாகியிருக்கும் என்பது தற்போதய எனது கணிப்பீடு... முதலில் அவனும் நம்மைப்போலத்தான். போக்கிரியி்ல் விஜய் கூறியது போல் இந்த காதலென்றாலே எரிச்சல் எரிச்சலா கிடக்கு.... என்பது தான்... டேய் அவளப்பற்றி இப்பிடி போசாதடா என்று நான் சொன்னாலும் விடமாட்டான். என்னிலும் மோசமாக திட்டுவான்.... அவளுடன் சேர்ந்து பாட வேலை ஒன்று செய்யும் காலத்தில் என்னையும் அவனையும் இணைத்து அவனே பேசுவான். தன்னுடன் மற்ற வாலுகளையும் சேர்த்துவிடுவான்.... மாலைகளில் அந்த நண்பர்கள் ஒன்றாக ஓரிடத்தில் சந்திப்பது வழமை. ஒன்றாக வந்ததும் ஒருவனை வைத்து மற்றயவர்கள் அனைவரும் கிண்டல் கணைகளை செலுத்துவார்கள். அந்த ஒருவனாக ஒருதடவை நான் இருந்த போது அவளை வைத்து தான் பேசினார்கள். வந்த கணைகளில் பெரும்பாலான கணைகளில் அவனிடம் இருந்துதான்.

    இப்படி இருந்தவனிடம் பின் ஒரு போக்கு மாறியதை அவதானிக்க முடிந்தது. திடீர் என்று செக் ரீ-ஷேர்ட் கள் முழுக்கை ஷேர்ட்களாக மாறின... டெனிம் முழுநீள காற்சட்டை அலுவலகத்திற்கு அணியும் ஹொட்டன் முழுநீள கால்ச்சட்டைகளாக மாறின.... இவ்வாறு பலவிடையங்கள் அவதானிக்க முடிந்தது. விரிவுரை குறிப்புகளின் மூலைகளில் காதல் கவிதைகள் தோன்றின. அத்துடன் ஒரு பெண்ணின் கண்களும் இருக்கும்.... நம்முடன் சேர்ந்துதான் இருப்பான். ஆனால் முன்பு போல் கலகலப்பு இல்லை. மிகவும் அமைதியாக மாறினான்... காரணம் காதல் என்றும் அந்த-பெண் யார் என்றும் புரிந்தது. ஆனால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இப்படியே சில மாதங்கள் கடந்தன... நண்பர்கள் அனைவரும் தற்காலிகமாக சில பயிற்சி வேலைத்திட்டம் காரணமாக சற்று தூரப்பிரதேசங்களுக்கு செல்வவேண்டிய கட்டாயம். சந்திப்பது கடினமானது. அலைபேசிகள் மட்டும் தான் உதவின... வார இறுதிகளில் சந்திப்போம். அவ்வளவு தான்.

    மீண்டும் சில காலங்களுக்குப்பின்னர் அந்த ஆறுபேர் தவிர்ந்த இன்னொரு கல்லூரி நண்பன் ஏதோ ஒரு பேச்சு வரும் போது சொன்னான். டேய் அவன் அவளை லவ் பண்றானாம்டா.... என்றான். உனக்கு எப்பிடி தெரியும் என்றேன். அவன்தான் சொன்னவன் என்றான். எனக்கு தூக்கிவாரி போட்டது.... அட நாமும் ஏதோ பெரிய நட்பிற்கு இலக்கணமாக இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் இதுவரைக்கும் இருந்தேன். அப்படியே உடைந்தது. அட அவனுக்கும் காதல் வந்துவிட்டது என்ற உண்மை அந்தக்கணத்தில் உறைத்தது. ஏன்டா ஒன்டா திரியிறியள். இதுகூட தெரியாதா என்றான். அவன் கேள்வியில் நியாயம் தெரிந்தது. அமைதி தான் என்னிடம் இருந்த பதில். புன்முறுகலுடன் கதையை மாற்றினேன்.

    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று முழுவதும் ஏதோ ஒருமாதிரி இருந்தது. அட உனக்கேன் போர்த்தேங்காய் என்று உள்மனம் சொன்னது. இருந்தாலும் ... முடியல... மாலை அந்த அறுவரில் ஒரே கம்பனியில் பயிற்றி வேலைத்திட்டம் செய்யும் மற்ற நண்பன் வந்ததும் என்ன பெரிய கப்பல் கவிந்திட்டுதோ என்றான். பதில் சொல்லவில்லை. பின் குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். அப்போது மீண்டும் கேட்டான். உனக்கு இப்ப என்னடா பிரச்சனை என்றான். விளாவாரியாக சொன்னேன். பின்னர் அமைதி காத்தான். நீண்டநேரத்திற்கு பின் சரி இப்ப என்ன செய்யலாம் என்றான். நானும் தெரியாது என்றவாறு முகத்தால் சைகை காட்டினேன்....

    திடீரென மற்றொரு நண்பன் தூரைப்பிரதேசத்திலிருந்து வந்து சந்தித்தான். அது ஒரு மாலை நேரம்.

    (தொடரும்...)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதலில் வாழ்த்துக்கள் ரசிகா!!

    துவக்கம் ரொம்ப நல்லா இருக்கு, எஸ்.ஜே.சூர்யாவின் படம்போல.

    கதை நகர்வு, என் பால்யத்திலிருந்து ஒவ்வொரு பருவமாகத் தூவுகிறது. கதை மாந்தர்களுடன் நிஜமாந்தராக நானும், இன்னும் சிலரும்..

    ஜீ.சீ.ஈ சாதாரண தரம் வரை எதிரும் புதிருமாக இருந்துவிட்டு, நளமகராசன் இராச்சியம்போன்ற உயர்தரத்தில் புகும் தருணம்... அப்போது ஏற்படும் மாற்றம்.. இன்றுவரை புரியாத புதிர்..

    யாரென திட்டமிடாமலே, ஒருவரை ஏகமனதாக தெரிவுசெய்து ஒற்றுமையாக சுவைக்கும் அறுசுவை விருந்துக்கு ஈடாக இதுவரை எதையும் கண்டதில்லை.

    உனக்கு ஏன் போர்த்தேங்காய் என்ற வரிகளை தொட்டபோது வேரைக் கேட்காமல் பூக்கிறது பூ.

    தொடக்கத்திலிருந்து கட்டிவைக்க வெகுசிலரால் மட்டும் முடிகிறது. அவர்களில் ஒருவராக உங்களை காண்கிறேன். திறமைசாலிகளை உலகம் லேட்டாக கண்டுக்குமாம்.. நீங்களும் இவ்வுலகில்தானே..

    எதிர்பார்ப்புடன்,

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அடடா...
    உங்களுக்கே மறைத்து காதலித்திருக்கிறானே...
    ஏன் ரசிகா. உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் போட்டிக்கு காதிலித்துவிடுவீர்களோ? என்று நினைத்துவிட்டானோ???

    பல எதிர்பார்ப்புக்களை ஒருங்கே குவித்து கதையை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்.
    விரைவில் மிகுதியையும் தொடருங்கள்.

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அமரன் View Post
    முதலில் வாழ்த்துக்கள் ரசிகா!!

    துவக்கம் ரொம்ப நல்லா இருக்கு, எஸ்.ஜே.சூர்யாவின் படம்போல.

    கதை நகர்வு, என் பால்யத்திலிருந்து ஒவ்வொரு பருவமாகத் தூவுகிறது. கதை மாந்தர்களுடன் நிஜமாந்தராக நானும், இன்னும் சிலரும்..

    ஜீ.சீ.ஈ சாதாரண தரம் வரை எதிரும் புதிருமாக இருந்துவிட்டு, நளமகராசன் இராச்சியம்போன்ற உயர்தரத்தில் புகும் தருணம்... அப்போது ஏற்படும் மாற்றம்.. இன்றுவரை புரியாத புதிர்..

    யாரென திட்டமிடாமலே, ஒருவரை ஏகமனதாக தெரிவுசெய்து ஒற்றுமையாக சுவைக்கும் அறுசுவை விருந்துக்கு ஈடாக இதுவரை எதையும் கண்டதில்லை.

    உனக்கு ஏன் போர்த்தேங்காய் என்ற வரிகளை தொட்டபோது வேரைக் கேட்காமல் பூக்கிறது பூ.

    தொடக்கத்திலிருந்து கட்டிவைக்க வெகுசிலரால் மட்டும் முடிகிறது. அவர்களில் ஒருவராக உங்களை காண்கிறேன். திறமைசாலிகளை உலகம் லேட்டாக கண்டுக்குமாம்.. நீங்களும் இவ்வுலகில்தானே..

    எதிர்பார்ப்புடன்
    ,
    சிறுவயதுபிராயம் கண்முன் வரும் போது அதில் உள்ள ஒரு இனம் புரியாத உணர்வு... வேறெந்த வயதுபிராயத்திலும் வராது.... சிறுபிள்ளைத்தனமாக நாம் செய்யும் செயல்கள்... இப்போது நினைத்தால் இன்னொரு கொமடி டைம் நிகழ்ச்சி செய்யலாம்...

    ஓவரா பில்டப் கொடுக்காதீங்க... வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by விராடன் View Post
    அடடா...
    உங்களுக்கே மறைத்து காதலித்திருக்கிறானே...
    ஏன் ரசிகா. உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் போட்டிக்கு காதிலித்துவிடுவீர்களோ? என்று நினைத்துவிட்டானோ???

    பல எதிர்பார்ப்புக்களை ஒருங்கே குவித்து கதையை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்.
    விரைவில் மிகுதியையும் தொடருங்கள்.

    அடோ... இது ஒன்றும் உண்மை கதை இல்ல.... ஆள விடுங்கடா சாமி....

    தொடருவது தான் எனக்கு எப்போதும் இருக்கும் பிரச்சனை... முன்பு ஒன்றை ஆரம்பித்துவிட்டு நான் பட்ட கஷ்டம். அதனால் தான்... ஓரளவு நேரம் கிடைத்திருக்கிறது. தொடர முயல்கிறேன்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    தன்னிலை முன்னிலை படர்க்கை என்று எல்லாம் வந்ததால் உண்மையாக இருக்குமோ!!! என நினைத்துக்கொண்டேன்.
    அதோடு மட்டுமின்றி பின்னூட்டத்தின்போது கதையோடும் நன்றாக ஒன்றியிருந்ததால் அப்படி எழுதிவிட்டேன்.

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ரசிகரே...
    ஆரம்பம் அட்டகாசம்..
    சீக்கிரமே தொடருங்க.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நல்லாவே துவங்கியிருக்கீங்க.... நேத்திக்கி வாசிக்கும் போது இருந்தத விட இப்போ பிழைதிருத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக இருக்கிறது...
    வாழ்த்துக்கள்.... இரசிகரே... தொடருங்கள் தொடர்கிறோம்...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அட்டகாசமான கதை நகர்வு... முதல் முயற்சியா அன்பு அண்ணா??!!

    அசத்தறீங்க...!! நிஜமா வாழ்த்துகள்..!!

    அப்புறம்.. மீதிக் கதையை எப்போ போடுவீங்க.. படிக்காம விடமாட்டோமில்ல..அத்தனை இண்ட்ரஸ்டா இருக்கு.. பின்னே..அடுத்த வீட்டு கதை கேட்கத்தான் நமக்கு ரொம்ப பிடிக்குமே..(சும்மா சும்மா..!! நான் அப்படியில்லீங்கோ..! )

    கதை நகர்வு.. சுவாரஸ்யமாகவும்.. பால்ய பருவத்தில்.. நடந்த சில நிகழ்வுகளையும் நினைவு கூர்கிறது... அசத்தல் அன்பு அண்ணா... தொடருங்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    பால்ய பருவத்தில்.. நடந்த
    என்னது?
    பால்யப் பருவமா???
    கேட்டாயா அன்பு இந்தக் கொடுமையை[/COLOR]

  11. #11
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...

    குறைகள் கண்டால் தயங்காது சுட்டிக்காட்டுங்கள்.

    Quote Originally Posted by விராடன் View Post


    என்னது?
    பால்யப் பருவமா???
    கேட்டாயா அன்பு இந்தக் கொடுமையை
    நான் கண்டுக்கிட்டேனா விடு விடு ... கண்டுக்கப்படாது...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    பகுதி 2

    திடீரென மற்றொரு நண்பன் தூரைப்பிரதேசத்திலிருந்து வந்து சந்தித்தான். அது ஒரு மாலை நேரம். வேலையை முடித்துவிட்டு வந்திருக்கிறான். மீண்டும் அடுத்தநாள் அதிகாலை அவன் புறப்படவிருக்கிறான். அவனது வருகைக்கும் புறப்பாடுக்கும் இடையில் 5 மணிநேரம் தான் இருக்கும். ஏன் இப்படி உடம்பை கெடுக்கிறாய் என்று கேட்டதற்கு உன்னை பார்க்க வரக்கூடாதா என்று கேட்டான். புல்லரித்துவிட்டது.... இரவு என் அறையிலேயே தங்கினான். படுத்திருக்கும் போது கேட்டான். நீ யாரையும் காதலிக்கிறாயா என்று.... எனக்கு ஒருபுறம் சிரிப்பு... இன்னொருபுறம் ஒருவகை எரிச்சலும் கூட... டேய் அப்பிடி என்றால் நான் உனக்கு சொல்லியிருக்க மாட்டேனாடா என்றேன்... இல்லடா நீயும் அவளுடன் பழகுறாய். அதுதான் என்றான். யாருடன் என்றதும் அவன் அவளை சொல்லவே எனக்கு ஒரு சந்தேகம்; ஏன்டா கேட்கிறாய் என்றேன். இல்லடா அவனுக்கும் அவள் மேல ஒரு ஐடியா இருக்குடா என்றான். நல்லவிடயம் தானேடா... ஆனால் அந்த அவனுக்கும் என்றதில் அந்த கும் தான் இடிக்கிறது.... காரணம் அவனுக்கு ஐடியா இருப்பது தவறில்லடா. அப்போ நீ என்மேல சந்தேகப்படுறியா என்றேன். இல்லடா... நண்பர்களுக்குள் சண்டை எப்போதும் வரக்கூடாது என்பதால் தான் வெளிப்படையாக கேட்டனான் என்றான் அவன்.... இப்போதுதான் எனக்கு புரிந்தது. அவதியாக ஏனிந்த மாலைநேரத்தில் வந்தான் என்று.... அப்போது எனக்கு ஓரளவு ஊர்ஜிதமானது. ஆனாலும் இன்னும் அவன் வாயால் தன் காதல் பற்றி என்னிடம் சொல்லவில்லை. அதனால் நானும் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ளவில்லை. பார்ப்போம். பட்டம் எவ்வளவு தூரம் தான் பறக்கப்பாகிறது என்று பார்ப்போமே...

    அந்த வார விடுமுறைக்கு மீண்டும் அந்த ஆறுபேரும் ஒன்றுசேர்ந்தோம். எனக்கு உள்ளே இருந்த மனக்கவலையை வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு கதை வருகையில் என்னை மீறி வார்த்தைகள் வரவே பொதுவாக கூறினேன். டேய்... க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் என்டா ஒரு வித்தியாசம் இருக்கணும். சும்மா க்ளாஸ் மேட்ஸ்க்கும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸூக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு.... நம்ம ஒருத்தனைப்பற்றி நமக்கு தெரிவதிலும் இன்னொருத்தனுக்கு அதிகமாக தெரிந்தது பரவாயில்ல. ஆனா அத நம்மள்ள ஒருத்தனே அத சொல்லி அவனுக்கு தெரிந்தால் அப்புறமா நாம் ஏன் க்ளோஸ் பிரண்ட்ஸ் என்று சொல்லித்திரியவேணும். என்றேன். நிச்சயம் அவனுக்கு உறைத்திருக்கும். அவன் மனதை சங்கடப்படுத்திய குற்ற உணர்வு என்னிடம். நிமிர்ந்து பார்க்க என்னால் இயலவில்லை. அலைபேசியில் உள்ள பாம்பு விளையாட்டு தான் உதவியது. சற்று நேரம் அமைதி நிலவி பின்னர் அந்த கூற்றை அனைவரும் ஆமோதித்தார்கள்.

    அப்படியே சில நாட்க்கள் கழியவே நண்பனிடம் இருந்து அலைபேசி... இன்று இரவு மீன் வாங்கிவருகிறேன். சமைப்போமா என்றான். உனக்கு நாளைக்கு வேலையில்லையோ என்றேன். இல்ல வேலை இருக்கு சும்மா உன்னோட கொஞ்சம் கதைக்கவேணும் அதுதான் என்றான். உள்மனது புரிந்து கொண்டது. சரி வா என்றுவிட்டு எனது வேலையை தொடர்ந்தேன்.

    (தொடரும்.)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •