இனிமையான ஒரு பொன்மாலை பொழுதில்தான்
உன்னை முதன்முதலில் பார்த்தேன்
உன்னைக் கண்டவுடனே வேறு யாரிடமும் நீ அகப்படும்முன்
உன்னை என்வசம் ஆக்கிவிட்டேன்
உறங்கும்நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் நீ என்வசமே இருந்தாய்
நீ என்னிடம் வந்தவுடன்தான் எனக்கு அதிர்ஷ்டயோகம்
உன்னைவைத்து பல காரியங்களைச் சாதித்தேன்
பேருந்திலும், ரயில்பயணங்களீலும் கூட
உன்னை எவ்வளவு பத்திரமாக பாதுகாத்தேன்
ஆனால் நீயோ இன்று என்னைவிட்டு
இன்னொருவனின் கைகளில் தஞ்சமடைந்துவிட்டாய்
எங்கே இருக்கிறாய்?
காணாமல் போன என் மணிபர்ஸே!
(நான் எழுதி எங்கள் கல்லூரி மலரில் வெளியான ஒரு கவிதை)
-தமிழ்குமார்
Bookmarks