Results 1 to 11 of 11

Thread: ஆலமரம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    ஆலமரம்

    ஊரெங்கும் உலவியக் காற்று
    நிரப்பிச் செல்கிறது
    இந்த ஆலமரத்தில்
    தன் இசையை..

    வெறுமையூடிய கிளைகள்
    இலையுதடுகளால் முணுமுணுத்தன
    பிரிந்தப் பறவைகளின் பாடல்களை..

    அந்தப் பாடல்களில்
    தனிமையின் தவிப்புகள்
    பறவைகளின் ஸ்பரிசங்கள்
    சிறகுகளின் சடசடப்புகள்
    இறகுகளின் உதிர்வுகள் என
    எல்லாம் நிறைந்திருந்தன..

    ஏக்கமும்
    வேதனையும் வடியும்
    என் நெஞ்சை
    மேலும் கீறிய
    அப்பாடல்களுக்கு தெரியாது
    சதையோடு பேர்ந்த நகம் போன்ற
    வலிகளாலான சில நினைவுகளை..
    அன்புடன் ஆதி



  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    வார்த்தைகளில் வலி அழகான கோர்வையில் எழுதி, அருமையான கவிதை ஆதி...

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஷ்'s Avatar
    Join Date
    21 Feb 2008
    Location
    CHENNAI
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    26,157
    Downloads
    42
    Uploads
    1
    ஆதி ஜீ! வரிகள் மிகவும் அருமை, இதையே நாம், முதியோர் இல்லத்தில் இருக்கும் நாகரிக தியாகிகளுக்கு ஒப்பிடலாம்
    அன்புடன்
    இராஜேஷ்
    எரிபொருள் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் நம் பூமியை காக்கும், செய்வோமா!!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் சுஜா's Avatar
    Join Date
    14 May 2008
    Posts
    165
    Post Thanks / Like
    iCash Credits
    18,505
    Downloads
    146
    Uploads
    0

    Smile

    //ஊரெங்கும் உலவியக் காற்று
    நிரப்பிச் செல்கிறது
    இந்த ஆலமரத்தில்
    தன் இசையை..

    வெறுமையூடிய கிளைகள்
    இலையுதடுகளால் முணுமுணுத்தன
    பிரிந்தப் பறவைகளின் பாடல்களை..//

    தனிமை ஒருவனை என்னென்ன பாடுபடுத்தும்
    என்பதை நான் அனுபவித்திருக்கிறேன் .
    இந்த வரிகள் என் வலிகளின் மேல் எதையோ நீவிச்செல்கிறது.
    அருமையான வரிகள்;வாழ்த்துகள் .

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    நல்லது ஆதி

    நல்லது ஆதி...நல்லதொரு கவிதை...வாழ்த்துக்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by நம்பிகோபாலன் View Post
    வார்த்தைகளில் வலி அழகான கோர்வையில் எழுதி, அருமையான கவிதை ஆதி...
    Quote Originally Posted by இராஜேஷ் View Post
    ஆதி ஜீ! வரிகள் மிகவும் அருமை, இதையே நாம், முதியோர் இல்லத்தில் இருக்கும் நாகரிக தியாகிகளுக்கு ஒப்பிடலாம்
    Quote Originally Posted by shibly591 View Post
    நல்லது ஆதி...நல்லதொரு கவிதை...வாழ்த்துக்கள்
    பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..
    அன்புடன் ஆதி



  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சுஜா View Post

    தனிமை ஒருவனை என்னென்ன பாடுபடுத்தும்
    என்பதை நான் அனுபவித்திருக்கிறேன் .
    இந்த வரிகள் என் வலிகளின் மேல் எதையோ நீவிச்செல்கிறது.
    அருமையான வரிகள்;வாழ்த்துகள் .
    உங்கள் இந்தப் பின்னூட்டமும் என் கவிதை மேல் படிந்திருந்த வலிகளை சுகமாக தடவிச் செல்கிறது

    பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல சுஜா..
    அன்புடன் ஆதி



  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Dec 2007
    Posts
    117
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    ஏக்கமும்
    வேதனையும் வடியும்
    என் நெஞ்சை
    மேலும் கீறிய
    அப்பாடல்களுக்கு தெரியாது
    சதையோடு பேர்ந்த நகம் போன்ற
    வலிகளாலான சில நினைவுகளை..
    வலியின் உயிரால் உடலாலான
    வரிகள்

    உங்கள் கவிதைகள் வேறு பாதை நோக்கி பயணிப்பதாய் உணர்கிறேன், நவீனவ இலக்கியம் வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
    செந்தமிழரசி

    பெரிதினும் பெரிதுகேள்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அருமை ஆதி..
    தொடர்க
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    அந்தப் பாடல்களில்
    தனிமையின் தவிப்புகள்
    பறவைகளின் ஸ்பரிசங்கள்
    சிறகுகளின் சடசடப்புகள்
    இறகுகளின் உதிர்வுகள் என
    எல்லாம் நிறைந்திருந்தன....
    இவ்வரிகள் அனைத்தும் மனித வாழ்வை சித்தரிப்பதாய் என் சிந்தைக்கு தோன்றுகிறது நண்பரே..!! ஆனால் அதையடுத்து வரும் பத்தியில் கடைசி இருவரிகளில் எதையோ மறைமுகமாக சொல்ல முயன்றிருக்கிறீர்கள்..!! அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றுதான் எனக்கு புலப்படவில்லை..!!

    உங்கள் கவிமரம் மேலும் பலபல விழுதுகள்விட எனது வாழ்த்துக்கள் நண்பரே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒவ்வொருவருக்கும் ஒருவித வலி இருக்கும் ஆதி.

    அவ்வலிகள் நினைவுகளைக் கிளறும் போது ஏற்படும் வலிகள் குருதியில்லா காயம் போன்றது. அதன் ரணத்தை ரசிக்க முடியாது..

    திரு.இராஜேஷ் சொல்வதைப் போல பிரிகளின் நினைவுகளோடு வாழும் முதியவர்கள் பற்றியதாக இக்கவிதை கனக்கச்சிதமாக பொருந்தும்... அவரவர் பார்வைக்குப் பாத்திர நீர் கவிதை..

    வாழ்த்துகள் ஆதி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •