பாம்பூறும் வலி தாங்காமல் முனகும் சருகுகள். இறந்த இலைகளுக்கும் இதயத்துடிப்பைக் கொடுத்த கவிதைநயத்தைப் பாராட்டுவதா?
மருதண்ணனின் மனசைப் போலவே வளர்ந்த சனற்பயிர் வெள்ளத்தனைய மலர்நீட்டம் எனச் சொன்ன குறள் விளக்கத்தைப் பாராட்டவா?
சனற்பயிர் என்றால் என்ன அமரன்? சணல் கயிறுக்கான பயிரா அல்லது சனப்பை எனச் சொல்லப் படும் தழையுரச் செடியா?
தொழிலாளிக்கும் முதலாளியின் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பு வெளிப்படுத்தும் செங்கொடி சித்தாந்தத்தை வியப்பதா?
அனைவற்றையும் வியந்தபடி வித்யாசமாக விருந்து படைத்த அமரனுக்கு என் பாராட்டுக்கள்.
Bookmarks