Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: பொதுவழி

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0

    பொதுவழி

    படிக்காதவனோடு
    படித்தவனும் கூட்டு
    சேர்ந்தான்
    பொறியியல் கல்லூரியில்
    பணத்தை பொதுவழியாக்கி....

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்ல.. "பொதுவழி" என்ற குறுக்குவழி..
    இப்போது எங்கெங்கு காணினும்...!!

    வேதனையான செயல்...

    மதிப்பெண்கள் முன்னிலையில்லை.... பொருளில்லாருக்கும் முன்னிலையில்லை...

    பொறுத்தார் பொறும... பொருள் தரார் நோக.. பொருளுடையார்க்கு இடம் போவதே இக்கால இயல்பாகிவிட்டது..!

    பொருளாதார அடிப்படை சேர்க்கை தொடங்கினால் ஒழிய.. இவ்வகை அவலம் நீடிக்கவே செய்யும்..!!

    ஊசி போன்ற ஒரு கருத்துள்ள கவிதை.. நிச்சயம்.. பலரைத் தைக்குமென நம்புகிறேன்..
    வாழ்த்துகள் நம்பிகோபாலன் அண்ணா..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    நன்றி பூமகள்.
    எனக்குள் நீண்டநாட்களாக எரிந்து கொண்டிருக்கும்
    நெருப்பு துகள் இது...
    சமுதாயத்தில் இதற்கான மாற்றங்கள் வரவேண்டும் என எண்ணுகிறேன்...

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    Quote Originally Posted by நம்பிகோபாலன் View Post
    படிக்காதவனோடு
    படித்தவனும் கூட்டு
    சேர்ந்தான்
    பொறியியல் கல்லூரியில்
    பணத்தை பொதுவழியாக்கி....
    அன்புள்ள மன்றத்தோழர் நம்பிகோபாலன் அவர்களுக்கு,

    உங்களின் கவிதையின் கருவும் எண்ணமும் மிகவும் சரியே, ஆனால் வார்த்தைகளின் பிரயோகத்தில் எனக்கு ஒரு சிறு சந்தேகம். நீங்கள் சொல்வது போல் படிக்காதவனோடு படித்தவன் பனத்தைக் கொடுத்து கல்லூரியில் சேர வேண்டியதில்லையே? படித்தவனோடுதான் படிக்காதவன் காசு கொடுத்து சேருவான், ஆகவே படிக்காதவனோடு படித்தவன் என்று இடுவதற்கு பதிலாக

    படித்தவனோடு
    படிக்காதவனும்
    கூட்டு சேர்ந்தான்
    பொரியியல் கல்லூரியில்
    பணத்தை பொதுவழியாக்கி.....

    என்று இடலாமே. இது என் தாழ்மையான கருத்து, நன்றி.

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    அன்புள்ள நண்பருக்கு.
    இன்று பொறியியல் நடத்துபவர்கள் அனைவரும் படித்தவர்களாக தெரியவில்லை...
    என் கண்ணோட்டத்தில் படித்தவர்களே பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்கிறார்கள் என்ற கருத்தில் எழுதினேன்.
    பிழை இருப்பின் மன்னிக்க....

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கல்வி பெறுமதியானது...
    பெறுமதி கொடுத்தவர்களும்,
    கொடுக்க இயலாதவரும்
    சொல்கையில்தான் புரிந்தது அர்த்தம்...

    கல்விக்கு விலை தவிர்க்கமுடியாதது.
    ஆனால், கல்வியே விலையானால்...

    திறன்களைப் பின் தள்ளி நிற்கத்தான் வேண்டும் பணம்.
    ஆனால், பின்னே தள்ளியல்ல... பின்னிருந்து தள்ளி...

    இன்று விழிக்கத் தவறினால், தகுதியில்லாதோரால், நாளை விழிமூடப் போவது சமுதாயம்...

    பாராட்டுக்கள் நம்பிகோபாலன் அவர்களே...

    உபரித் தகவலாக...
    ஈழத்துத் தமிழ் மாணவர்கள் கல்வியில் சிறந்து, பெரும்பான்மை இன மாணவர்களை விடவும் பெருவாரியான வீதத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தோற்றுவதைப் பொறுக்க முடியாத, பெரும்பான்மை சமூகம், 1972 இல் தோற்றுவித்த கல்வித்தரப்படுத்தல் என்கின்ற சட்டமும் ஈழத்தில் நீடிக்கும் இன்றுவரையான யுத்தத்திற்கான ஓர் முக்கிய காரணியாகும்.
    இந்தச் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட பல்கலைக்கழக அனுமதிகள் வரையறுக்கப்பட்டன. இதனால், தமிழர் பிரதேசங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி உயர்வடைந்ததனால், அதிகூடிய புள்ளிகள் எடுத்த மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லமுடியாத நிலை ஏற்பட, குறைவான புள்ளிகள் எடுத்த ஏனைய மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையே இன்றுவரை தொடர்கின்றது.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நம்பி உங்கள் கவிதையும் அது தாங்கும் கருவும் அருமை..

    சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நீயா, நானா நிகழ்ச்சியில் படித்தவர்கள் படிக்காதவர்கள் இருவரும் வாதிட்டார்கள்.. அந்த மேடைக்கு வந்த படிக்காதவர்கள் அனைவரும் படித்தவர்களை விட அதிகப் பணம் சம்பாதித்தவர்களாகவே இருந்தார்கள்.. படித்தவர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒருக் கருத்து "படிக்காதவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கிற பயம் படித்தவர்களுக்கு இருப்பதில்லை, படித்தவர்களை விட படிக்காதவர்களே எப்படியும் வாழ்க்கையை வெல்ல வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறார்கள், அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள், வெல்கிறார்கள், படித்தவர்களுக்கு அது இல்லை, படித்தப் படிப்புக்கு ஏற்ற வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்கிற மெத்தனப் போக்கு இருக்கிறது, அதனால்தான் பலர் அப்படியே இருக்கிறார்கள்"

    உண்மைதானே, கலைகல்வி பட்டமோ, தொழிற்கல்வி பட்டமோ பெற்று அதற்கு ஏற்ற வேலையைத் தேடுகிறோம், ஏன் வேலைக்கு போகல, வேலைக் கிடைக்கல, கிடைத்த வேலையில் போய் என்னக் கற்றுக் கொள்கிறோம், பெரியதாக ஒன்னுமில்லை, என்ன முன்னேறி இருக்கோம், அதிக பட்சமா, டீம் லீட், இல்லை மேனேஜர், இப்படி ஓட்டியிருப்போம், நாம் வேலைப் பார்க்கும் துறையைப் பற்றி அதிகம் அறிந்து, மற்ற நிறுவணங்களுக்கு கன்சல்டண்டாக அகவோ, அல்லது நாமே ஒரு நிறுவணம் துவங்கவோ எத்தனைப் பேர் நினைக்கிறோம்.. கற்றதன் பயன் கைநிறைய ஊதியம் கிடைக்கிற வேலை என்றே கருதி கிடைத்ததில் திருப்தி அடைந்து கொள்கிறோம்..

    உங்கள் கவிதையின் கரு தாங்கும் கருத்தை இன்றைய சூழலில் ஏற்க முடியாது, ஏகப்பட்ட எஞ்னியரிங் சீட்டுகள் சேர ஆளில்லாமல் காலியாகதான் கிடக்கிறது, சென்ற அதிமுக அரசு, 60% இருந்து 55% மதிப்பெண் எடுத்தால் போதும் என்று மாற்றியதே இதற்கு தெளிவான சாட்சி..
    Last edited by ஆதி; 12-05-2008 at 04:18 PM.
    அன்புடன் ஆதி



  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    படிக்காதவனும்
    கல்வியால் சம்பாதித்தான்..
    நர்சரி பள்ளி தொடங்கி!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by கண்மணி View Post
    படிக்காதவனும்
    கல்வியால் சம்பாதித்தான்..
    நர்சரி பள்ளி தொடங்கி!!
    கண்மணி அக்கா..
    சின்ன திருத்தம்..!!


    படிக்காதவனும்
    கல்வி விற்கிறான்..
    பொறியியல் கல்லூரி துவங்கி...!!


    (அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கிறேன்..!! )
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    உங்கள் அனைவரும் பின்னூட்டத்திற்கு நன்றி.
    அக்னி உபரி தகவல் என்னை வியப்படைய செய்கிரது.
    ஆதி நீங்கள் கூறியதுபோல படித்தவர்கள் தாமே ஒரு தொழில் துவங்க தயக்கம் காட்டதான் செய்கிறர்கள்...சிந்திக்க வேண்டிய விஷயம்.

    கண்மனி,பூமகள் கலக்கிடீங்க...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஷ்'s Avatar
    Join Date
    21 Feb 2008
    Location
    CHENNAI
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    26,157
    Downloads
    42
    Uploads
    1
    படித்தவரோ படிக்காதவரோ, பணம் சம்பதிக்க வேண்டுமென்றல் அவர்களுடைய சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். நம்முரில் உள்ள மார்வடிகளை மற்றும் சில சமுகத்தினரை எடுத்து கொள்ளுங்கள், அவர்கள் சிந்தனைய்யே வேறு. நாம் அணைவரும் MBA - Master of business Administration கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது, MBB - Marwadi By Birth, நாம் படித்தது MBA வாக இருந்தாலும் நம்முடைய சிந்தனையில் MBB தேவை.
    அன்புடன்
    இராஜேஷ்
    எரிபொருள் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் நம் பூமியை காக்கும், செய்வோமா!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஆதங்கத்தை நாலு வரியில் கொட்டி மன்றத்து மக்களை ஆவேசமாக பின்னுட்டம் இட வைத்த நம்பிகோபலனுக்கு வாழ்த்துகள்....

    படித்தவன் <=> படிக்காதவன்

    படிப்பது எதற்க்கு???
    பணம் எதற்க்கு ???

    சின்ன குழப்பம் .. யாராவது உதவுங்களேன்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •