ஒரு ஆய்வாளர் ஒரு ஆய்வுக்காக ஒரு ஆட்டு மந்தை வைத்திருப்பவரை சந்திக்க சென்றார் அப்பொழுது அங்குள்ள ஆட்டு மேய்ப்பர் ஒரு வரை சந்தித்து
ஆய்வர்: உங்களுக்கு எத்தனை ஆடுகள் உள்ளது
மேய்ப்பர்: வெள்ளாடு ஒரு 50 கருப்பாடு ஒரு 50
ஆய்வர்: சரி வெள்ளாடு ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறது
கருப்பு ஆடு ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறது
மேய்ப்பர்: வெள்ளாடு ஒரு நாளைக்கு 10 கிலோ இலைதளைகள் சாப்பிடும்
கருப்பு ஆடு ஒரு நாளைக்கு 10 கிலோ இலைதளைகள் சாப்பிடும்
ஆய்வர்: வெள்ளாடு எவ்வளவு குட்டி ஈனும்
கருப்பாடு எவ்வளவு குட்டி ஈனும்
மேய்ப்பர்: வெள்ளாடு வருடம் எல்லாம் சேர்த்து 10 குட்டி
கருப்பாடு வருடம் எல்லாம் சேர்த்து 10 குட்டி
ஆய்வர்: (சற்று கடுப்புடன்) வெள்ளாட்டுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்
கருப்பாட்டுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்
மேய்ப்பர்: வெள்ளாட்டுக்கு வருடம் முழுவதும் 10000ரூபாய்
கருப்பாட்டுக்கு வருடம் முழுவதும் 10000 ரூபாய்
ஆய்வர்: (சற்று கோபத்துடன்) வெள்ளாட்டிலிருந்து எத்தனை கம்பளிகள்
கருப்பாட்டிலிருந்து எத்தனை கம்பளிகள்
மேய்ப்பர்: (பெருமையுடன்) வெள்ளாட்டிலிருந்து வருடம் 15 கம்பளிகள்
கருப்பாட்டிலிருந்து வருடம் 15 கம்பளிகள்
ஆய்வர்: (உச்சகட்ட கோபத்தில்)
என்ன*தான் வித்தியாசம் வெள்ளாட்டுக்கும் கருப்பாட்டுக்கும்
மேய்ப்பர்: வெள்ளாடும் என்னுடையது
கருப்பாடும் என்னுடையது
ஆய்வர்:
கருத்து: உலகத்தில் அனைத்து மக்களும் இறைவன் முன் ஒருவரே வித்தியாசம் இல்லை
4000 மாவது பதிவு
Bookmarks