கனவே கலைந்து விடு..
போலி சுகங்கொடுத்து
மனதை கற்பழிக்கும்
வஸ்து நீ..
இல்லாத பிரபஞ்சக் கூரைக்கு
வண்ணம் அடிக்க வைக்கும்
பித்தலாட்டக்காரன் நீ..
நட்சத்திரங்கள் குத்தி
நிதர்சன உலகில் ரணமெனும்
ஆபரணம் சூட்டும் கொடியவன் நீ..
இல்லாததை இருப்பதாய்...
இருப்பதை இல்லாததாய்..
கொடிய சிந்தனைக்காரன் நீ..
நிலா பிடிக்கப் போய்
வாழ்க்கை எனும்
பள்ளத்தாக்கில் வீழ்த்தாட்டியவன் நீ..
கனவு எனும் பெயர் சூட்டி
என்னை அணு அணுவாய்
கற்பழித்தது போதும்....
என் கண் கனா காணா
தூரத்திற்கு ஓடிப் போய் விடு...
நான் வாழ வேண்டிய வாழ்க்கை
வழியெங்கும் முட்களொடு
எனக்காக தவங்கிடந்து
காத்துக் கொண்டிருக்கிறது..
ஆதலினால் எனை விட்டுப் போ...
Bookmarks