பச்சைக் கிளியொன்று
மிச்ச சிறகுகளோடு
வெளியில் வந்து..
அடுக்கிவைத்த
கட்டுகளைச் சுற்றி உலாவி,
கலைத்துபோட்ட
சீட்டுகளுக்குள்ளே துலாவி,
ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.
சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,
மீண்டும் திரும்பியது
கூண்டுக்குள்ளேயே!!
போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...
மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????
ஷீ-நிசி
Bookmarks