வரம் வேண்டி...
எனக்கான உலகமும்
எனக்கான வேண்டுதல்களும்
சிறியது..
முரட்டு எஜமானனின்
அடிமைச்சங்கிலியில்
அடக்கமாய் வாழ..
சுவற்றில் எரிந்த பந்தாய்
இல்லாது
சமூகவியல் மிருகமாக..
இட்ட கட்டளையை
செவ்வனே செய்து முடிக்கும்
இயந்திரமாய்..
இவைகளுக்கு..
உணர்ச்சிகளை மரத்துப் போக வைக்க..
அதீதமாய் சிந்திக்கும் மூளையை அடக்கிவைக்க..
இரும்பாலான ஒரு மனதை முடிந்தால் கொடு..
இல்லையெனில்,
வாழ்க்கை முழுதும் போராளியாய்
வாழ்க்கை தேடி ஓடிக்கொண்டிருப்பேன்..
Bookmarks