Last edited by தாமரை; 20-04-2008 at 02:11 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பிழை 1 : தமிழே என வெண்பா முடியக் கூடாது.
நாள், மலர், காசு, பிறப்பு போன்ற நான்கில் ஒன்றே இறுதிச் சொல்லாய் வருதல் வேண்டும். காசு, பிறப்பு என ஈரசை சொல்லாய் வரும் பொழுது குற்றியலுகரம் போன்ற மாத்திரை அளவு குறைந்த சொல் வருதல் நன்று.. அதனால் தமிழே என்பது தமிழ் எனப் மாற்றப்படல் மலர் என்ற அசைக்கு மாற்றப்படுகிறது.
நான்கு அடிகளைக் கொண்டு தனிச் சொல் இன்றி ஒரு அடிகளனைத்தும் ஒரே எதுகையக் கொண்ட இன்னிசை வெண்பா..
வெண்பாவில்
இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரலாம்
வெண்டா - வெண்+டா =நேர்+நேர் = தேமா
மரைவெட்கிச் - மரை+வெட்+கிச் = நிரை+நேர்+நேர் = புளிமாங்காய்
செந்தா - செந்+தா = நேர்+நேர் = தேமா
மரைமலர - மரை+மல+ர = நிரை+நிரை+நேர் = கருவிளங்காய்
வண்டா - வண்+டா = நேர்+நேர் = தேமா
ரருந்தமிழ் - ரருந்+தமிழ் = நிரை+நிரை = கருவிளம்
தேனிதழ் - தே+னிதழ் = நேர்+நிரை = கூவிளம்
உண்டா = உண்+டா = நேர்+நேர் = தேமா
ரமரர்தேன் = ரம+ரர்+தேன் = நிரை+நேர்+நேர் = புளிமாங்காய்
உண்ணா - உண்+ணா = நேர்+நேர் = தேமா
ரமரரே = ரம+ரரே = நிரை+நிரை = கருவிளம்
கண்டாரா = கண்+டா+ரா = நேர்+நேர்+நேர் = தேமாங்காய்
திச்செந் - திச்+செந் = நேர்+நேர் = தேமா
தமிழ் - மலர் = நிரை
ஆக மா முன் -நிரை, காய் முன் நேர் என வெண்சீர் வெண்டளையும்,
விளம் முன் நேர் என இயற்சீர் வெண்டளையும் பொருந்தி வருகிறது.
ஆக இலக்கண விதிகள் படி இதை வெண்பா ஆக்கினால்
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.
இது இன்னிசை வெண்பா என்னும் பாவகையை சேர்ந்தது.
இனி அடுத்துப் பார்க்க வேண்டியது பதவுரை - கருத்து
வெள்ளைத் தாமரை வெட்கத்தில் சிவந்து செந்தாமரையாய் மொட்டவிழ்ந்து
வண்டுகளை மொய்க்க வைக்கும் இனிக்கும் தேன் போன்ற தமிழை தன் இதழில் கசியவிட
அந்த பழமையான செந்தமிழ்த் தேனைக் கண்டோரில் உண்டோர் அமரத்துவம் பெறுகின்றனர்,
உண்ணாதோர் இருப்புக் கொள்ளாமல் அமரமுடியாமல் தவிக்கின்றனர். உண்ணுதல் வேண்டி அலைகின்றனர்.
இன்னும் கருத்துக்கள் பின்னர் தருகிறேன். இது நேரிடையான கருத்து..
கருத்தினுள்ளே இருக்க வேண்டியது உட்கருத்தாயிற்றே.. அந்த உட்கருத்தை அறிய பொழிப்புரை அதாவது கவிஞன் எந்நிகழ்ச்சியை சொல்லுகிறான் என அறியவேண்டும்..
பொழிப்புரை:
வெண்ணிறமுகம், வெட்கத்தில் சிவந்து செந்நிறமாக, மலர்ந்து, அந்த முகத்திலிருக்கும் இதழ்களில் இருந்து தேன் போன்ற தமிழ் கசிகிறது.
இப்படி செந்தமிழ் எனத் தமிழுக்கு சிவப்பு நிறம் ஏற ஆதி - அதாவது மூலம், காரணம் கண்டோரில், கேட்டோர் சோமபானம் உண்ட தேவர்கள் போல மயங்கிக் கிடக்கின்றனர். கேட்காதவர் எப்போது கேட்போமோ எனத் துடிக்கின்றனர்.
பதவுரைக்கும் பொழிப்புரைக்கும் வித்தியாசம் பாருங்கள்,
பதவுரையில் நேரடியான அர்த்தம் மட்டுமே கண்டோம். ஆனால் சில வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் அந்தப் பிணைப்பு, கவிஞன் கண்ட அந்தக் காட்சியை நாம் காணுதலால் மட்டுமே முடிகிறது. அதாவது
ஒரு பெண் நாணி முகம் சிவந்து, தேன் குரலில் பாடுகிறாள். அதைக் கண்டோர், இருவகை,
1, அருகில் உள்ளோர், அவர்களால் பார்க்கவும் முடிகிறது இசையைக் கேட்கவும் முடிகிறது. கேட்டோர் மயங்கிக் நிற்கின்றனர்.
2. தொலைவில் உள்ளோர் அவர்களால் அவளைப் பார்க்க முடிகிறது. மற்றவர்கள் கானத்தில் மயங்கி சிலாகிப்பதைக் கேட்க முடிகிறது. கேட்கத் துடிக்கிறார்கள்..
உட்கருத்து:
இதில் என்ன உட்கருத்து.. கவிஞர் என்ன சொல்கிறார்?
Last edited by தாமரை; 17-04-2008 at 12:55 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அண்ணா உங்ககூடக் கா...
இவ்வளவு சீக்கிரம் நீங்களே பிழையை சொன்னதுக்கு.
அடுத்து நன்றி..
தமிழாசான் அவதாரம் கொண்டமைக்கு.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உட்கருத்துக்கு போறதுக்கு முன்னால
இதே கவிதையைக் கொஞ்சம் திரும்பப் பார்ப்போமா!!!
ஏன்னா, நாம படிச்ச பாடத்தின் படி, அது என்ன பாவகை, அதன்,கருத்து, பொழிப்புரை, உட்கருத்து எழுதிட்டு, அப்புறம் சொல்நயம், சந்த நயம், எதுகை மோனைச் சிறப்புகள், அணி நயம் என உள்ள புகுந்திடுவோம்..
ஒரு கவிதையில இருக்கிற நயத்தை சொல்ல அந்தக் கவிதையை திருப்பி திருப்பிபடிக்கணும். லிட்டரலா திருப்பி கூட படிக்கலாம்.. எப்படின்னா
கண்டார் ஆதிச் செந்தமிழ்
அதாவது செந்தமிழ் என்பது முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ்
அதைக்கண்டவர்களில்
உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே
உண்டார் அதை அனுபவிப்பர்கள் அதின் அமிழ்தான சுவையை உண்பதால் அமரர்களாகி விடுகின்றனர். தேன் உண்ணார், அப்படி அதன் சுவையை பருக இயலாதவர்கள், அமரார், தம்மொழி இப்படி இல்லையே என இருக்க முடியாமல் பரிதவிப்பர்.
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
அப்படி வண்டுகள் மொய்க்கும்படி இனிய தேனை தமிழ் வார்த்திட
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வெண்தாமரைகள் தம்மில் அச்சுவைமிகு தேனில்லையே என வெட்கமடைந்து முகம் சிவந்து செந்தாமரையாகி மலரும்.
இவ்வளவுதானா அர்த்தம்??
இன்னும் இரூக்கா?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தேன் போன்ற சுவையை உடைய மொழியான தமிழ் மொழியை.. கேட்டு புரிந்து கொண்டவர்கள் அமரத்துவம் எய்தும் பேறு பெற்று சிறப்புற, அத்தகைய தேன் மொழியை கேட்டு புரிய இயலாதவரும் அமரத்துவம் அடையும் பெரும் பேறு பெற்ற சிறந்த மொழி நம் தமிழ் மொழி என்று கூட ஒரு பொருள் வருகிறதே தாமரை அண்ணா??!!உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே
மூன்றாவது கோணத்தில் சரியாக பிரிச்சிருக்கேனா பாருங்க..!
சரியாகப் பிடித்தாய் பூ!
கண்டார் ஆதிச் செந்தமிழ்
அதாவது செந்தமிழ் என்பது முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ், அதைக்கண்டவர்களில்
உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே
உண்டாரும், உணர்ந்து அனுபவித்தவர்களும் அமிர்தம் உண்ட மாதிரி தேவர்களாகின்றனர். உண்ணாமல், அதாவது புரிந்து அனுபவிக்காமல் வெறுமனே கேட்டவர்களும், அதன் இனிமையில் அமரத்துவம் அடைகின்றனர். அமிர்தம் உண்டால் மட்டுமே அமரத்துவம் தரக்கூடியது. தமிழோ, புரிந்தாலும் சுவைதான் புரியா விட்டாலும் சுவைதான்.
இதுமட்டுமா வேறுபட்ட அர்த்தம்.... இன்னும் இருக்கிறதே!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்....
என்னவோ தெரியலை தாமரை அண்ணா, இதனைப் பார்க்கையில் எனக்கு ஏனோ கொஞ்சம் வில்லங்கமாக விளங்குகிறது...!!
நம்ம அமரன் இருக்காரில்லையோ அமரன் (), அவர் தன் காதலியை வெட்கப்படுத்தி செந்தாமரையாக மலர வைத்து, அவர் தம் காதலி அதர சுவையிலும் தேன் சுவையற்றதாக கருதி தேனினை உண்ணாமல் இருக்கிறார், அப்படி காதல் மயக்கத்தில் தேன் உண்ணாதிருக்கும் அமரனைப் பார்த்து ஆதிச் செந்தமிழின் சுவை பருகினாரா என வினவப்பட்டுளது.
(அப்பாடா நம்ம வேலை முடிஞ்சிட்டுது )
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வெந்தாமரையாக இருந்தவர் காதலன் (அமரன் ) சில்மிசத்தால் வெட்கி செந்தாமரையாக சிவக்க, சிவக்க...
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
வண்டருந்தும் தேன் சுவை தமிழை பொழியும் காதலியின் வார்த்தைகளை(வார்த்தைகளுடன் அதரத்தையும் தான்..!! )
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
பருகியதாலும் காதல் மயக்கத்தாலும் அதனிலும் தேன் சுவையற்றதென தேன் உண்ணாத அமரன்
கண்டாரா திச்செந் தமிழ்....
இந்த செந்தமிழைக் கண்டாரா...???
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அருமையான விளக்கமளிக்கும் நண்பர் தாமரை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
பள்ளியில் படிக்கும் போது நடைபெற்ற சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருமுறை எங்கள் பள்ளி மாணவர் சாலையில் கிடந்த மனிப்பர்சை அதிலுள்ள முகவரியை பார்த்து அவர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்து விட்டு வந்தனர். அதில் பணமும் இருந்தது.
மறுநாள் காலை அதன் உரிமையாளர் எங்கள் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரை அணுகி விசயத்தை சொல்லி அந்த மாணவர்களுக்கு பேனா பரிசளித்தார்.
எங்கள் தமிழாசிரியரிடம் சொன்னார்
"சார் உங்க பையன்ங்க தங்கமானவங்க"
அதற்கு தமிழய்யா சொன்னார் "ஆமாம் தங்க மாணவர்கள்"
அதற்கு அந்த நபர் சொன்னார் "ஆமாம், தங்கம் ஆனவர்கள்" .
சில சமயம் மேகத்தை உற்று பார்க்கும் போது நம் கற்பனைக்கேற்ற உருவமாய் பலவிதமாய் தெரியும். தமிழும் அப்படித்தானோ? படிப்பவர் மனநிலைக்கேற்ப பொருள் மாறுமோ..?
கீழை நாடான்
மிக சிறப்பான கருத்து கீழை நாடான் அவர்களே!
தங்கமானவங்க என்ற வார்த்தையில் எத்தனை விதமாய் பிரிந்து மாறியிருக்கிறது. மேகம் போல தமிழும் அவரவர் கற்பனையை பொருத்தது என்று கூறலும் உண்மைதான்.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks