வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வெந்தாமரையாக இருந்தவர், காதலன் (அமரன் ) சில்மிசத்தால் வெட்கி செந்தாமரையாக சிரித்துச் சிவக்க
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
வண்டுகள் மொய்க்கின்ற(வண்டார்) தேன் சுவை தமிழை பொழியும் காதலியின் இதழ்கள் பொழிய
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
பருகிய அமரர் தேன் சுவையற்றதென கருதி தேனை உண்ண மாட்டார்
கண்டாரா திச்செந் தமிழ்....
பழமையும் செழுமையும் மிகுந்த அந்த செந்தமிழ் ருசி கண்டவர்.
அதாவது நாணத்தில் சிவந்த காதலியின் உதடுகளில் கசியும் செந்தமிழ் ருசி கண்ட அமரர், தேனை ஒரு போதும் உண்ண மாட்டார்.
ஓவியா, (), அமரனை இவ்வளவு பொருத்தமாய் பதித்த உனக்கு, மன்றத்தில் இன்னும் இருவரை பொருத்தலாம் என்றும் தெரியுமே!
அதுசரி, இப்படி ஒரு கவிதையில் பல்வேறு விதமான விஷயங்கள் வரும்பொழுது எப்படி உண்மை உட்கருத்தை கண்டறிவது?
இதற்குத்தான் திணை பயன்படுகிறது? இது அகத்திணையா? புறத்திணையா? எழுதியது காதலியின் தேன்சொட்டும் மொழிகளைப் பற்றியா? இல்லை தமிழின் இனிமை பற்றியா?
அகத்திணையில் இது குறிஞ்சித் திணையின் பாற்படும் - கூடலும் கூடல் நிமித்தமும் அல்லவா?
புறத்திணையில் இது பொதுவியல் திணையாம்..
அதான் அல்லி இலக்கணப் புத்தகச் சுட்டியை, ஒப்புமை கவிதை திரியில் குடுத்து இருக்காங்க இல்லையா? மின்னிதழில் ஜேபிஎல் அகத்திணை பற்றியும் எழுதி இருக்காங்க இல்லையா? ஒரு முறை படியுங்கள்..
இது குறிஞ்சித் திணை, ஆமாம், தேனிருக்கு, வண்டிருக்கு, காதலி இருக்கிறாள், தேனுண்ட மயக்கம் இருக்கு, ஆனால் நெருடுவது
காலம் - யாமம், தாமரை மலர்வதோ காலை, இது மருதத் திணை காலம்
மலர் - தாமரை இதுவும் மருதத்தின் மலர், குறிஞ்சி, காந்தள் போன்ற குறிஞ்சித் திணை மலர்கள் இல்லை
ஆனால் மருதத்தின் கருப்பொருளோ - ஊடலும் ஊடல் நிமித்தமும்..
கவிதையில் ஊடல் பொருளும் உண்டோ???
இருக்கிறதே!!! கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்
க்ளூ தரட்டுமா? இதுவரை ஒரு ஆண் சொல்வதாக இருந்த இந்தக் கவிதையை, ஒரு பெண் சொல்வதாக எண்ணிப் பாருங்கள்.
Bookmarks