Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 58

Thread: கவிதையை பிரித்து - முற்றிடுமா??!!!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
    வெந்தாமரையாக இருந்தவர், காதலன் (அமரன் ) சில்மிசத்தால் வெட்கி செந்தாமரையாக சிரித்துச் சிவக்க

    வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
    வண்டுகள் மொய்க்கின்ற(வண்டார்) தேன் சுவை தமிழை பொழியும் காதலியின் இதழ்கள் பொழிய


    உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
    பருகிய அமரர் தேன் சுவையற்றதென கருதி தேனை உண்ண மாட்டார்

    கண்டாரா திச்செந் தமிழ்....

    பழமையும் செழுமையும் மிகுந்த அந்த செந்தமிழ் ருசி கண்டவர்.


    அதாவது நாணத்தில் சிவந்த காதலியின் உதடுகளில் கசியும் செந்தமிழ் ருசி கண்ட அமரர், தேனை ஒரு போதும் உண்ண மாட்டார்.

    ஓவியா, (), அமரனை இவ்வளவு பொருத்தமாய் பதித்த உனக்கு, மன்றத்தில் இன்னும் இருவரை பொருத்தலாம் என்றும் தெரியுமே!

    அதுசரி, இப்படி ஒரு கவிதையில் பல்வேறு விதமான விஷயங்கள் வரும்பொழுது எப்படி உண்மை உட்கருத்தை கண்டறிவது?

    இதற்குத்தான் திணை பயன்படுகிறது? இது அகத்திணையா? புறத்திணையா? எழுதியது காதலியின் தேன்சொட்டும் மொழிகளைப் பற்றியா? இல்லை தமிழின் இனிமை பற்றியா?

    அகத்திணையில் இது குறிஞ்சித் திணையின் பாற்படும் - கூடலும் கூடல் நிமித்தமும் அல்லவா?

    புறத்திணையில் இது பொதுவியல் திணையாம்..

    அதான் அல்லி இலக்கணப் புத்தகச் சுட்டியை, ஒப்புமை கவிதை திரியில் குடுத்து இருக்காங்க இல்லையா? மின்னிதழில் ஜேபிஎல் அகத்திணை பற்றியும் எழுதி இருக்காங்க இல்லையா? ஒரு முறை படியுங்கள்..



    இது குறிஞ்சித் திணை, ஆமாம், தேனிருக்கு, வண்டிருக்கு, காதலி இருக்கிறாள், தேனுண்ட மயக்கம் இருக்கு, ஆனால் நெருடுவது

    காலம் - யாமம், தாமரை மலர்வதோ காலை, இது மருதத் திணை காலம்
    மலர் - தாமரை இதுவும் மருதத்தின் மலர், குறிஞ்சி, காந்தள் போன்ற குறிஞ்சித் திணை மலர்கள் இல்லை

    ஆனால் மருதத்தின் கருப்பொருளோ - ஊடலும் ஊடல் நிமித்தமும்..

    கவிதையில் ஊடல் பொருளும் உண்டோ???

    இருக்கிறதே!!! கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

    க்ளூ தரட்டுமா? இதுவரை ஒரு ஆண் சொல்வதாக இருந்த இந்தக் கவிதையை, ஒரு பெண் சொல்வதாக எண்ணிப் பாருங்கள்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    வித்தியாசமான அர்த்தங்களை கண்டு பிடித்து பங்குகொண்ட

    பூவுக்கு - 500 இ பணம்
    ஓவியனுக்கு - 500 இ பணம்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஆகா... ஆகா... அருமை

    (ஏன்னா எனக்கு எதுவும் புரியலை..... இன்னும் நாலு தடவை பழைய தமிழ் புத்தகத்தை படித்துவிட்டு வாறேன்....)
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    ஆகா... ஆகா... அருமை

    (ஏன்னா எனக்கு எதுவும் புரியலை..... இன்னும் நாலு தடவை பழைய தமிழ் புத்தகத்தை படித்துவிட்டு வாறேன்....)
    இப்படி வெட்ட வெளிச்சமா இன்னொரு க்ளூ தர்ரீங்களே பென்ஸ்.. இது தான் போட்டு வாங்கறதா?

    ஆக, சொல்வது பெண், ஆதிச் செந்தமிழ், பழைய தமிழ் புத்தகம், இரண்டு க்ளூ இருக்கே, மக்கள் கண்டு பிடிக்க மாட்டாங்களா என்ன???
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கல்யாணம் ஆகியும் மன்றம் வர்ரவங்களைப் பற்றி,


    கல்யாணமாகி நாளாச்சு, நம்ம தலைவனுக்கு மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் முடிஞ்சு, தமிழ் மன்றத்தில வந்து உட்கார்ந்து இதைப் படிச்சுகிட்டு இருக்காரு,,

    இது காட்சி,



    தலைவி சொல்றாங்க

    வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
    வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
    உண்டா ரமரர்


    அதாவது, புதுப்பெண்ணாய், அறியாப்பெண்ணாய் பயத்தில் வெளுத்திருந்த வெண்தாமரை அவள், அவள் வெட்கிச் சிவந்து செந்தாமரையாய் ஆகி, வண்டுகள் மொய்க்கும் தேன் போன்ற இனிய குரலில் தமிழ் பேச உண்டார் என் தேவன்.. அது ஒருகாலம்..

    தேன் உண்ணா ரமரரே
    கண்டாரா திச்செந் தமிழ்.


    அந்தத் தலைவன் இப்பொழுது அந்த பழைய சிவப்புத்தோல்காரி தமிழைக் கண்ட பின் இந்தத் தேனை உண்ண மாட்டேனென்கிறார்..

    ஊடலாய், மன்றத்தில் தமிழ் படித்துக் கொண்டிருக்கும் தலைவனைப் பார்த்து அங்கே என்ன பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறீர்கள், இங்கு இருக்கும் தேன் உண்ணாமல் எனக் கேட்கிறாள்..!!!

    ஆக
    முதல் கருவில் தமிழ்,
    இரண்டாம் கருவில் காதலியின் இனிய மொழி,
    மூன்றாவது கருவில் தமிழ் மேல் காதலி கொண்ட பொறாமை



    இவ்வளவுதானா இந்த நான்கு வரிகளில்? இன்னும் இருக்கு..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    ஏற்கன்வே சொன்னேன் இல்லையா, கவிதை பிறந்த சூழ்நிலைக்கும் கவிதையின் பொருளுக்கும் தொடர்பு இருக்கும் என்று..

    அப்படி என்ன சூழ்நிலை இருந்தது? இக்கவிதை எழுதும் பொழுது கவிஞன் கண்டதென்ன நிஜத்தில்??

    Quote Originally Posted by ஆதி View Post
    எழுத்துக்களில் நீயமர்ந்து இருக்க வேண்டும் - உனை
    எழுதாத கவிதையினி இறக்க வேண்டும்
    பொழுதுகளை உனையெண்ணிப் போக்க வேண்டும் - என்
    புன்னகையும் உன்நினைவில் பூக்க வேண்டும்
    விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
    விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்
    கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
    கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்
    Quote Originally Posted by சாம்பவி View Post
    வேண்டுமென கேட்டால் நான்
    வந்திடுவேனோ... !
    கொழுந்தீயினில் நானுந்தான்
    வெந்திடுவேனோ.... !

    நானில்லா உன்கவிதை
    வேண்டாமென்றாயே... !
    நானிருக்க என்னிருக்கை
    வெண்டாமரையே...
    !

    இந்த இரண்டு கவிதைகள் படித்து முடித்த உடன் இதன் தொடர்ச்சியாய் இக்கவிதை வெளிப்பட்டிருக்கிறது..

    அப்படியானால் இது இன்னொரு கோணத்தில் பார்க்கப் பட வேண்டியது..

    இது நான்காவது கோணம் நண்பர்களே!!!

    ஆதி என்ன சொல்கிறார்? சாம்பவி என்ன சொல்கிறார்?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கவிதைகளில் இருக்கும் எழுத்துப் பிழைகள் வேண்டாம், நெருடல்கள் மட்டும் சொல்கிறேன்

    மேலோட்டமாய் ஆதியின் கவிதையைப் படித்தால் அவர் தமிழ் பித்து கொண்டு தமிழ் மட்டுமே எழுத வேண்டும், தமிழ் மட்டுமே வாழ வேண்டும், தமிழினைத் துணை கொண்டே தன் பொழுதுகள் போகவேண்டும், தன் உதட்டில் உதிர்க்கும் புன்னகை கூட தமிழ் சுவை கண்டு மகிழ்ந்ததால் இருக்க வேண்டும் தமிழ் அவருள் விழுது விட்டு வளர, தமிழ் தாகத்தில் அவர் அலைய, தமிழ் அவருள் கொழுந்து விட்டு எரிய அவர் மழை போல் பலகவிதை பொழிய வேண்டும் என கூறுகிறார்..

    ஆனால், கவிதையை ஊன்றிக் கவனித்தால் சட்டென தெரியும் வித்தியாசம்..

    தமிழில் தமிழினைப் பற்றி மட்டுமா எழுத முடியும்?

    முரண் 1 : எழுத்துக்களில் நீ அமர்ந்து இருக்க வேண்டும்.. என்றால் ஆங்கில எழுத்துக்களில் தமிழ் இருக்க வேண்டும் என அர்த்தமா? இல்லை.. பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி என்ற பாரதியின் வரிகள் இங்கு மாறுவேடம் போட்டு அமர்ந்திருக்கிறது.

    முரண் 2: என்னதான் தமிழ் பித்தனென்றாலும், எல்லா மொழிகளும் தமிழினைப் பற்றிதானே எழுத வேண்டும் எனச் சொல்லுவான்? தமிழ் மட்டுமே இருக்க வேண்டும், அதில் தமிழைப் பற்றியே பாடவேண்டும்..

    முரண் 3:

    பொழுதுகளை உனையெண்ணிப் போக்கவேண்டும், என் புன்னகையும் உனையெண்ணிப் பூக்க வேண்டும்..

    அப்படி என்றால் இப்பொழுது அப்படி இல்லை என்று அர்த்தமா? அதாவது இது விருப்பம்.. இதற்கு தமிழறிவு தேவையில்லை..

    முரண் 4:
    விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
    விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

    இதுவரை உன்னை, உன்னை என்ற ஆதி, இப்பொழுது தமிழ் எனப் படர்க்கையில் போகிறார். அப்படியானால் உன்னை என முன்னிலையில் அவர் வைத்தது யாரை என கேள்வி போகிறது..

    இது போன்ற இட மாறுதல்கள், ஆதியின் கவிதையில் சாம்பவி சில சமயம் சுட்டிக் காட்டி இருப்பார்..

    முரண் 5 :

    கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
    கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்

    ஆக மீண்டும் இவ்வரிகளில் பாடப்படும் பொருளும், தமிழும் இரண்டாய் பிரிகிறது

    அப்படிப் பார்க்கப் போனால் மூன்றாம் வரியில் உள்ள

    விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
    விரகத்தில்
    நானேங்கி திரிய வேண்டும்

    என்ற வரியில் உள்ள தமிழ் என்ற வார்த்தை மாற்றப்பட்டது கண்கூடாய் தெரிகிறது..

    அவசரகதியில் எழுதிய கவிதையில் இப்படி முரண்கள் வருவது சகஜம்..

    ஆதியின் கவிதையின் உட்கருத்து ::

    நான் தமிழ் பைத்தியம்.. தமிழ் தமிழ் தமிழ் இது மட்டுமே!!

    இப்படிக் காட்ட முயன்றிருக்கிறார்..

    அதற்குச் சாம்பவி என்ன சொல்கிறார்?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இந்த பாட்டில் இந்த கவிதை எழுதிய பொழுதில் சில தடுமாற்றம் கொண்டமை உண்மையே

    என் எழுத்துக்களில் என்று துவங்கினேன், எண்சீர் எழுத ஆசை வந்ததால் "என்"னை நீக்கிவிட்டேன்..

    எழுத்துக்களில் நீயமர்ந்து இருக்க வேண்டும் - உனை
    எழுதாத கவிதையினி இறக்க வேண்டும்
    பொழுதுகளை உனையெண்ணிப் போக்க வேண்டும் - என்
    புன்னகையும் உன்நினைவில் பூக்க வேண்டும்
    "அலுக்காமல் உனைமட்டும் பேச வேண்டும் - உனை
    அடுத்தபிறப்பிலேனும் பிழையின்றி எழுத வேண்டும்"

    என்று எழுதினேன், விருத்தம் இலக்கணத்துள் அமரவில்லை அதனால் அந்த வரிகளை நீக்கிவிட்டு


    விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
    விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

    இந்த இருவரிகளை சேர்த்தேன்.. நான் கொண்ட தடுமாற்றத்தை கடைசி வரிகள் தெளிவாக ஒளிபரப்பிவிட்டது..

    கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
    கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்
    அன்புடன் ஆதி



  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அப்பப்பா பல்பாடக் கதம்பமிது.
    ஆரம்பித்த அண்ணனுடன் பழம்.

    அண்ணா இன்னொரு க்ளூ தாருங்களேன்..
    சாம்பவி சொல்வது வெள்ளை உள்ளம் இருந்தால் வருவேன் என்பதா??

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    தமிழில் தமிழினைப் பற்றி மட்டுமா எழுத முடியும்?

    தமிழினை தமிழாய் எழுதுவதில்லையே நாம்.. தமிழினை தமிழாய் எழுத ஆசைப்படுதல் தவறில்லை..

    எடுத்துக்காட்டாக..

    இலக்கணம் - இலக்கம் - இலக்கு

    இலக்கு - லஷ்சியம் என்னும் வேரில் இருந்து பிறந்தது இலக்கு தமிழில்லை, இலக்கணம், இலக்கியம் தமிழில்லை..



    முரண் 1 :
    எழுத்துக்களில் நீ அமர்ந்து இருக்க வேண்டும்.. என்றால் ஆன்கில எழுத்துக்களில் தமிழ் இருக்க வேண்டும் என அர்த்தமா? இல்லை.. பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி என்ற பாரதியின் வரிகள் இங்கு மாறுவேடம் போட்டு அமர்ந்திருக்கிறது.

    அயல் மொழியில் அன்னைத் தமிழை எழுத இயலாது, அயல் மொழியை அன்னைத் தமிழில் எழுத வேண்டாமே தமிழைத் தமிழாய் எழுத எண்ணுதல் தவறோ ?

    முரண் 2:

    என்னதான் தமிழ் பித்தனென்றாலும், எல்லா மொழிகளும் தமிழினைப் பற்றிதானே எழுத வேண்டும் எனச் சொல்லுவான்? தமிழ் மட்டுமே இருக்க வேண்டும், அதில் தமிழைப் பற்றியே பாடவேண்டும்..


    தமிழால் தமிழைப் பாட கேட்கிறேன்..

    அப்படியானால் தற்போது எழுதுவது தமிழ் இல்லையா என்றால் இல்லை, வார்த்தை என்பதே தமிழ் இல்லை சொல் என்பதே தமிழ்..

    ஹிருதயம், ஷணம் என்ற சொற்களைப் பயன்படுத்தி வேண்டுமெனே கவிசமரில் ஒரு பாடல் புனைத்தேன் யாரும் எதிர்க்கவில்லை கண்டிக்கவில்லை..


    முரண் 3: பொழுதுகளை உனையெண்ணிப் போக்கவேண்டும், என் புன்னகையும் உனையெண்ணிப் பூக்க வேண்டும்..

    என் புன்னைகையும் தமிழெழுத்தில் பூக்க வேண்டும் என்று எழுத விழைந்தேன் தமிழ் பற்றிப் பாடுகிறோம் என்று கடைசி வரியில் கண்பிக்கலாம் என்று எண்ணியே அதை கைவிட்டேன், போக்க பூக்க ஓசை ஒருங்கே இசைந்ததால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்

    அப்படி என்றால் இப்பொழுது அப்படி இல்லை என்று அர்த்தமா? அதாவது இது விருப்பம்.. இதற்கு தமிழறிவு தேவையில்லை..

    தமிழறிவு தேவையில்லைதான், அறிவுக்கு தமிழ் தேவைப்படுகிறது

    முரண் 4:
    விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
    விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

    இதுவரை உன்னை, உன்னை என்ற ஆதி, இப்பொழுது தமிழ் எனப் பட்ர்க்கையில் போகிறார். அப்படியானால் உன்னை என முன்னிலையில் அவர் வைத்தது யாரை என கேள்வி போகிறது..

    இது போன்ற இட மாறுதல்கள், ஆதியின் கவிதையில் சாம்பவி சில சமயம் சுட்டிக் காட்டி இருப்பார்..

    தமிழைப் பற்றியே பாடுகிறேன் என்று சுட்டவே வலிந்து இழுத்து வார்த்த சொல்தான் தமிழ்..


    ஆதியின் கவிதையின் உட்கருத்து ::

    நான் தமிழ் பைத்தியம்.. தமிழ் தமிழ் தமிழ் இது மட்டுமே!!

    இப்படிக் காட்ட முயன்றிருக்கிறார்..

    காட்ட அல்ல தமிழ் தமிழ் என்று எழுத முயன்றிருக்கிறேன் அண்ணா..

    இந்த பாட்டு அக்கா கையெழுத்தைத் தழுவி எழுதியதே..
    அன்புடன் ஆதி



  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    அவங்க இலேசுப்பட்டவங்க இல்லை அமரா, அதுவும் ஒரு க்ளூ,

    இன்னொன்னு என்னான்னா, அவங்களுக்கு என் நாற்காலி வேணுமாம்!!!

    வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் இந்தப் பாட்டையும் பாருங்க

    தமிழாக ஒரு பதில். கலைமகளா ஒரு பதில்.., சாம்பவியா ஒரு பதில்..

    மூணையும் யோசியுங்கள்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சாம்பவி View Post
    வேண்டுமென கேட்டால் நான்
    வந்திடுவேனோ... !
    கொழுந்தீயினில் நானுந்தான்
    வெந்திடுவேனோ.... !

    நானில்லா உன்கவிதை
    வேண்டாமென்றாயே... !
    நானிருக்க என்னிருக்கை
    வெண்டாமரையே...
    !

    கல்வியின் தலைவியாக :


    கல்வி என்பது வேண்டிப் பெறுவது அல்ல, அந்தக் கல்வி தீயில் இட்டாலும் வேகாது அழியாது..

    கலைமகளுக்கு வெண்தாமரை தான் இருக்கை. அதாவது தூய்மையும் மென்மையும் இனிமைகொண்ட தேனும் கொண்டது. அந்த கலைமகள் வாழுமிடம் அதே போல், இனிமையாக தூய்மையாக, மென்மையாக இருத்தல் வேண்டும்..

    ஆக நானில்லாத உன் கவிதை இருக்க வேண்டாம் என்றாயே!! அப்படி இருக்க வேண்டுமானால் உன் கவிதையில் இவை இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்.

    தமிழாக :

    வேண்டுமெனச் சொன்னால் நான் வந்திடுவேனா! இப்படிப் பிழைகள் மலிய எழுத அந்தக் கொழுந்து விட்டெறியும் தீயில் நான் வெந்திடுவானா?

    நானில்லாத என் கவிதை உன் கவிதை வேண்டாமென்றாயே!.. கவிதை வேண்டாம்.. நானிருக்க வெண்தாமரை போன்ற இனிய உள்ளங்கள் இருக்கின்றன.


    சாம்பவியாய் :

    (ஏன்னா அவருக்கும் இந்தத் தமிழ்க் குழப்படி தெரிஞ்சு போச்சு)

    சாம்பவியாய் அவர் சொன்னது இறுதி வரிகள் மட்டுமே..

    நானிருக்க ஆசைப்படுவது, என் இருக்கை யாக இருக்க வேண்டியது வெள்ளை உள்ளம் கொண்ட தாமரையின் இருக்கை.. அவரைப் போல வர வேண்டுமென ஆசைப்படுகிறேன் எனச் சிலேடையாய் எழுதி விட்டிருக்கிறார்.

    -------------------------------

    இதையெல்லாம் இப்படி அர்த்தப்படுத்திக் கொண்ட தாமரை சொல்ல நினைத்தது

    கண்டார் ஆதிச் செந்தமிழே

    நேர்ப் புகழ்ச்சியாய் ஒரு அர்த்தம்,
    வஞ்சப் புகழ்ச்சியாய் ஒரு அர்த்தம்,
    மறைபொருளாய் ஒரு அர்த்தம்..


    அதனுடன் இந்த தாமரையின் இருக்கை பற்றிப் போற்றி பேசினதாலே
    உண்டான கூச்சம், வெட்கம்.. இதையும் இணைத்து ஒரு கவிதை எழுதவேண்டும் என ஆரம்பிக்கப் பட்டது.

    பாரதி சின்னப் பயல் எப்படி பார் அதிச் சின்னப்பயல் ஆனதோ அது மாதிரி இம்மூன்று அர்த்தங்களையும் போட

    வெண்டாமரை என்ற முதற்சொல்லுடன் ஆரம்பித்ததால், வெட்கத்துடன் ஆரம்பித்தேன்.

    சரி சரி, ரொம்பச் சொல்லியாச்சு.. இரு நாட்கள் மன்றம் வரமுடியும்னு தோணலை.. ஆகவே உங்க சந்தேகங்கள், விளக்கங்கள், எல்லாத்தையும் போட்டு திரியை உயிரோடு வைங்க. திங்கள் கிழமை மீண்டும் தொடங்கறேன்.. பிரிச்சு மேய..

    அந்த மூணு அர்த்தங்களையும் அதற்கு முன் கண்டு பிடிப்போருக்கு தக்க ஈ பணம் சன்மானம் கிடைக்கும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •