புகு முன் : எல்லாரும் கதை எழுதுறாங்கனு நானும் கதை எழுத ஆரம்பிச்சன்.
(என்னடா இது மன்றத்துக்கு வந்த சோதனைனு மலரு புலம்புறது கேக்குது)
இவன் கூட கதை எழுத ஆரம்பிச்சுட்டான் பாருங்கற ஆத்திரத்தில மன்ற மென்பொருள் ஒட்டு மொத்தமா பத்துநாள் பதிவுகளை அழிச்சுடுச்சு. ஏண்டா இந்த வம்பு அப்படின்னு கதை எழுதுற எண்ணத்த அப்படியே உட்டாச்சு. ஆனா இந்த மனசு இருக்கே அது இப்படித்தான் அப்பப்ப கதை எழுது கதை எழுதுண்ணு வேற எந்த வேலையும் பாக்க உடுறதில்ல. அதுலயும் சிவா அண்ணா கதை எழுதுற வேகத்த பாத்ததும். அடேய் இனிமே சிவா அண்ணானு சொல்லிட்டு அவர் பின்னால போவ. அண்ணன் எழுதுறதுல பாதியாவது தம்பி எழுத வேணாமானு ஒரே நச்சரிப்பு சரி.. மன்ற மக்கள் தான் எதையும் தாங்கும் இதயமாச்சே (இதயம் மொறைக்கிறாரு பாருங்க.. அட உங்கள இல்லீங்க). எழுதித்தான் பாப்பமேண்ணு அழியாம தப்பிச்ச பகுதிய இங்க போடுறேன். முடிச்சுடுவங்குற நம்பிக்கையில தான் எழுதுறன்... பாக்கலாம்.
********************************************************************************************************
பீப் ….. பீப்…..பீப்……………..
எதிரே தெரிந்து கொண்டிருந்த இயற்கையில் மனம் தொலைத்திருந்த அவன் சத்தம் கேட்டு கலைந்தான். கை அனிச்சையாக அலைபேசியைத் தேடிப்பிடித்தது. பார்த்தான் குறுந்தகவல் வந்துள்ளதாகக் காட்டியது அலைபேசி.
“நான் வந்துவிட்டேன் …. எங்கே போய்த் தொலைந்தாய்…..?”
அவள் தான் அனுப்பியிருந்தாள்…..
“உங்கள் ஊரின் வனப்பு என் கண்களை கட்டிப் போட்டு விட்டது, உனக்குப் பின்னால் தான் இருக்கிறேன் வருகிறேன்”
பதில் அனுப்பிவிட்டு மெதுவாக எழுந்து திரும்பினான். அதற்குள் அடுத்த பீப்…பீப்.
இவளால் மட்டும் எப்படி இத்தனை வேகமாக அலைபேசியில் தட்டச்ச முடிகிறது… மறுபடியும் மனதிற்குள் அந்த வியப்பு
“யார சைட் அடிச்சிட்டு இருக்க….”
“இயற்கையை…….நீயும் வா .. சேர்ந்தே சைட் அடிக்கலாம்….”
ஐந்தடி நடப்பதற்குள் மறுபடியும் பீப்…பீப்…..
“அடி இடி மாதிரி விழும். பசில உயிர் போகுது… நீ காத்திருப்ப சேர்ந்து சாப்பிடலாமென்று வேகவேகமா வந்தா … அடசீ வாடா.”
அலைபேசியைப் பூட்டி பைக்குள் போட்டுவிட்டு நடையைத் துரிதமாக்கினான்……
காத்திருந்த வெளிர்பச்சை நிற ஹோண்டா சிட்டி யின் முன் பக்க கதவைத் திறந்து இருக்கையை ஆக்ரமித்தான்.
கையில் வைத்திருந்த… பாலித்தீன் பையை அவளிடம் கொடுத்தான். சில இனிப்பு வகைகள்.
ஆவலோடு வாங்கி வைத்துவிட்டு.
தன் மடியிலிருந்த குழந்தையை அவன் மடிக்கு மாற்றினாள்.
குழந்தையை வாங்கும் சாக்கில் தேவைக்கு அதிகமாகவே அவள்மேல் உராய்ந்தான்.
“புள்ளய தூக்குண்ணா தூக்காம என்ன பண்ணிகிட்டுருக்க….. “
அவன் எழாமல் அப்படியே இருக்க தலைமுடியைப் பிடித்து… தூக்கினாள்….
“போதும் எழும்பு நான் வண்டி ஓட்டணும் பசிக்குது….. என்ன சாப்பிடுற… “
என்று கேட்டவாறே வண்டியைக் கிளப்பினாள்….
யாரோ முடியைப் பிடித்து இழுத்ததுப் போல் சுரீரென்று வலித்தது……
நினைவுகளிலிருந்து மீண்டவள் மடியிலிருந்த குழந்தையைச் சரிசெய்தாள்.
குழந்தைதான் முடியைப் பிடித்திழுத்திருக்கிறது. சுற்றும் முற்றும் பார்த்தாள் நிலையம் வெறிச்சோடிப் போயிருந்தது. எங்கும் அமைதி. மொத்தமாகப் பார்த்தால் ஐந்து பேர் இருக்க மாட்டார்கள். எதிர் திசையில் பார்த்தாள். ரயில் வர இன்னும் நேரமிருக்கிறது.
இந்த நிலையத்தில் தான் அவனுடனான மூன்றாவது சந்திப்பு. அந்த நினைவுகளில் இருந்தவளைத்தான் குழந்தை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்திற்கு கூட்டி வந்திருந்தது…..
தொடர்ச்சி
Bookmarks