Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 130

Thread: விளையாட்டும் வினையும் ............. முற்றியது.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    விளையாட்டும் வினையும் ............. முற்றியது.

    புகு முன் : எல்லாரும் கதை எழுதுறாங்கனு நானும் கதை எழுத ஆரம்பிச்சன்.
    (என்னடா இது மன்றத்துக்கு வந்த சோதனைனு மலரு புலம்புறது கேக்குது)
    இவன் கூட கதை எழுத ஆரம்பிச்சுட்டான் பாருங்கற ஆத்திரத்தில மன்ற மென்பொருள் ஒட்டு மொத்தமா பத்துநாள் பதிவுகளை அழிச்சுடுச்சு. ஏண்டா இந்த வம்பு அப்படின்னு கதை எழுதுற எண்ணத்த அப்படியே உட்டாச்சு. ஆனா இந்த மனசு இருக்கே அது இப்படித்தான் அப்பப்ப கதை எழுது கதை எழுதுண்ணு வேற எந்த வேலையும் பாக்க உடுறதில்ல. அதுலயும் சிவா அண்ணா கதை எழுதுற வேகத்த பாத்ததும். அடேய் இனிமே சிவா அண்ணானு சொல்லிட்டு அவர் பின்னால போவ. அண்ணன் எழுதுறதுல பாதியாவது தம்பி எழுத வேணாமானு ஒரே நச்சரிப்பு சரி.. மன்ற மக்கள் தான் எதையும் தாங்கும் இதயமாச்சே (இதயம் மொறைக்கிறாரு பாருங்க.. அட உங்கள இல்லீங்க). எழுதித்தான் பாப்பமேண்ணு அழியாம தப்பிச்ச பகுதிய இங்க போடுறேன். முடிச்சுடுவங்குற நம்பிக்கையில தான் எழுதுறன்... பாக்கலாம்.
    ********************************************************************************************************
    பீப் ….. பீப்…..பீப்……………..

    எதிரே தெரிந்து கொண்டிருந்த இயற்கையில் மனம் தொலைத்திருந்த அவன் சத்தம் கேட்டு கலைந்தான். கை அனிச்சையாக அலைபேசியைத் தேடிப்பிடித்தது. பார்த்தான் குறுந்தகவல் வந்துள்ளதாகக் காட்டியது அலைபேசி.

    “நான் வந்துவிட்டேன் …. எங்கே போய்த் தொலைந்தாய்…..?”
    அவள் தான் அனுப்பியிருந்தாள்…..

    “உங்கள் ஊரின் வனப்பு என் கண்களை கட்டிப் போட்டு விட்டது, உனக்குப் பின்னால் தான் இருக்கிறேன் வருகிறேன்”
    பதில் அனுப்பிவிட்டு மெதுவாக எழுந்து திரும்பினான். அதற்குள் அடுத்த பீப்…பீப்.

    இவளால் மட்டும் எப்படி இத்தனை வேகமாக அலைபேசியில் தட்டச்ச முடிகிறது… மறுபடியும் மனதிற்குள் அந்த வியப்பு

    “யார சைட் அடிச்சிட்டு இருக்க….”

    “இயற்கையை…….நீயும் வா .. சேர்ந்தே சைட் அடிக்கலாம்….”

    ஐந்தடி நடப்பதற்குள் மறுபடியும் பீப்…பீப்…..

    “அடி இடி மாதிரி விழும். பசில உயிர் போகுது… நீ காத்திருப்ப சேர்ந்து சாப்பிடலாமென்று வேகவேகமா வந்தா … அடசீ வாடா.”
    அலைபேசியைப் பூட்டி பைக்குள் போட்டுவிட்டு நடையைத் துரிதமாக்கினான்……

    காத்திருந்த வெளிர்பச்சை நிற ஹோண்டா சிட்டி யின் முன் பக்க கதவைத் திறந்து இருக்கையை ஆக்ரமித்தான்.

    கையில் வைத்திருந்த… பாலித்தீன் பையை அவளிடம் கொடுத்தான். சில இனிப்பு வகைகள்.
    ஆவலோடு வாங்கி வைத்துவிட்டு.
    தன் மடியிலிருந்த குழந்தையை அவன் மடிக்கு மாற்றினாள்.

    குழந்தையை வாங்கும் சாக்கில் தேவைக்கு அதிகமாகவே அவள்மேல் உராய்ந்தான்.

    “புள்ளய தூக்குண்ணா தூக்காம என்ன பண்ணிகிட்டுருக்க….. “
    அவன் எழாமல் அப்படியே இருக்க தலைமுடியைப் பிடித்து… தூக்கினாள்….

    “போதும் எழும்பு நான் வண்டி ஓட்டணும் பசிக்குது….. என்ன சாப்பிடுற… “

    என்று கேட்டவாறே வண்டியைக் கிளப்பினாள்….

    யாரோ முடியைப் பிடித்து இழுத்ததுப் போல் சுரீரென்று வலித்தது……

    நினைவுகளிலிருந்து மீண்டவள் மடியிலிருந்த குழந்தையைச் சரிசெய்தாள்.

    குழந்தைதான் முடியைப் பிடித்திழுத்திருக்கிறது. சுற்றும் முற்றும் பார்த்தாள் நிலையம் வெறிச்சோடிப் போயிருந்தது. எங்கும் அமைதி. மொத்தமாகப் பார்த்தால் ஐந்து பேர் இருக்க மாட்டார்கள். எதிர் திசையில் பார்த்தாள். ரயில் வர இன்னும் நேரமிருக்கிறது.

    இந்த நிலையத்தில் தான் அவனுடனான மூன்றாவது சந்திப்பு. அந்த நினைவுகளில் இருந்தவளைத்தான் குழந்தை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்திற்கு கூட்டி வந்திருந்தது…..

    தொடர்ச்சி
    Last edited by செல்வா; 11-05-2010 at 04:01 PM.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உங்கள் புதுப் பிரவேசத்திற்கு,
    முதல்வனாய்,
    முதல்வனாய்ப் புகழ் பெற
    வாழ்த்துகின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    அடடே அதுக்குள்ள வாழ்த்துக்கள்... நன்றி அக்னியாரே

    Quote Originally Posted by அக்னி View Post
    உங்கள் புதுப் பிரவேசத்திற்கு, முதல்வனாய்,
    நல்லவேள பிரதேசத்திற்கு முதல்வனாய்னு சொல்லாம விட்ட இல்லண்ணா பெரிய அரசியல் பிரச்சனையே உண்டாகியிருக்கும்
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அட நம்ம செல்வா கதையா இது ?, அடச்சே எல்லாம் தப்பித் தப்பாகவே வருது செல்வா எழுதின கதைனு சொல்லப் போக, நாக்குத் தவறி...........

    மன்னிச்சுக்கோங்கோ செல்வா.........!!!

    ஆரம்பமே அசத்தலா இருக்கு (உண்மையாகத் தானுங்கோ..!! ), தொடர்ந்து அசத்த என் வாழ்த்துகள்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    செல்வா...
    கலக்கல் ஆரம்பம்.. இதை ஏற்கனவே மன்றத்தில் பதிச்சீங்களா...?
    படித்ததாய் ஞாபகம்..

    மேலும் வினைகளை அறிய ஆவல். உங்கள் விளையாட்டுகளைத் தொடருங்கள்..

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    படித்ததாய் ஞாபகம்..
    நினைவுப் பேளை மதி வாழ்க..!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    காணாமல் போனப் பத்துநாள் பதிப்புக்களில் இதுவும் ஒன்று.. மீண்டும் இந்தக் கதையை துவயங்கியமைக்கு வாழ்த்துக்கள்.. தொடர்க..
    அன்புடன் ஆதி



  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஒரு முக்கிய அறிவிப்பு...! முன்பு ஒரு முறை மன்றத்தில் கதை எழுதி, நம் மன்றத்தின் பத்து நாள் பதிவுகளையும் காணாமலடித்த இ.சோ. செல்வா மீண்டும் மன்றத்தில் அதே கதையை (அட தேவுடா..!!) போட்டுள்ளதால், மிகவும் கஷ்டப்பட்டு படைப்புகளை அளித்த மன்ற மக்கள் தங்கள் பதிவுகளை நகலெடுத்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..!! இந்த எச்சரிக்கையை புறக்கணிப்பவர்கள் பிறகு மன்றத்தில் அவரவர்களின் பதிவுகளை இழந்தால் அதற்கு மன்றம் பொறுப்பாகாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்..!!

    பதிவுகள் போன பின் அவருக்கு பரிசு கொடுக்க விரும்புபவர்கள் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். எனக்கு அவர் இருப்பிடம் தெரியும்..!!! (போக்குவரத்து செலவு இலவசம்..!)

    (ஏதோ என்னால முடிஞ்சது செல்வா..!!! ஹி..ஹி..!!)
    அன்புடன்,
    இதயம்

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அசத்தலான இந்தக் கதை, காணாமல்போனது போனதுதானா என்ற ஏக்கமிருந்தது. மீண்டும் தொடங்கிவிட்டார். ஆனால் ஏற்கனவே பதிந்தது. இதெல்லாம் கட்டுப்படியாகாது. அடுத்தடுத்த பாகங்களை உடனே கொடுக்கனும். ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டாவது எழுதனும்...ஆமா...

    கலக்கலா போகுது...தொடருங்க செல்வா...கூடவே வரோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டாவது எழுதனும்...
    அதுக்கு ஏன் மொத்த ஆபிஷூக்கே லீவ் போடணும், நம்ம செல்வா மட்டும் லீவ் போட்டால் போதாதா சிவா..??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஆரம்ப கதை நன்றாக இருக்கிறது செல்வா..வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!

    ஆமா..இந்த கதை முடிஞ்சிடுச்சா..? இல்லை இன்னும் தொடருமா..? முடி(வி)ல்லாம மொட்டையா நிக்கிற மாதிரில்ல இருக்குது..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    அத்தியாயம் 2

    வாந்தி எடுப்பது போன்ற அந்த சத்தம் வந்ததும் திடுக்கிட்டு குழந்தையைப் பார்த்தவள்…. குழந்தையின் வாயில் சிக்கியிருந்த முடியை உருவினாள். தன் முடியை இழுத்தபோது குழந்தையின் கையில் சிக்கிய முடியோடு குழந்தை வாயில் கை வைத்திருந்தாள். குழந்தையின் வாயைத் துடைத்து விட்டு கையில் சிக்கியிருந்த முடியை உருவி எறியும் முன் பார்த்தாள்.

    “ம் பரவால்ல கொஞ்சம் நீளமாகவே வளந்திருக்கிறது” முனகிக் கொண்டாள். இதுவும் அவனுக்காக….

    அவளுக்கு தலையில் பாரம் இருப்பதே பிடிக்காது. கொஞ்சம் வளர்ந்தாலே வெட்டி விடுவாள். ஆனால் அவனுக்கோ நீளமான தலைமுடி ரொம்பப் பிடிக்கும்.

    “தூங்குவதற்கு தலையணைத் தேவையில்லை உன் கூந்தலை சுருட்டி தலைக்கு வைத்துத் தூங்கிக் கொள்வேன்” என்பான்.

    “அப்டிண்ணா நீ என் தங்கையைத் தான் காதலிச்சுருக்கணும்” என்பாள் அவள்.
    அந்த சம்பாசனை நினைவுக்கு வர இதழோரம் புன்னகை.

    இந்த புன்னகை பூத்த முகத்தைக் கண்டால் மயங்கி விடுவான். குழைவான். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்குத் தான் வெட்கத்தில் கன்னங்கள் சிவக்கும்.

    “டேய் அப்படிப் பாக்காதடா “ என்று சிணுங்குவாள்.

    “அட உனக்கு வெட்கம் கூட வருமா?” என்று சீண்டுவான்.

    மறுபடியும் நினைவுகள். நினைவால் கன்னங்கள் மறுபடியும் சிவந்தது. ஆனால் பார்த்து சிரிக்கவோ இல்லை சீண்டவோ அவன் அருகில் இல்லை.
    வெட்கம் மாறி கண்களில் ஒரு கலக்கம். உடலில் ஒரு நடுக்கம் பரவியது….

    “நான் தான் தவறு செய்து விட்டேனோ?” மனதிற்குள் கேள்வி….. பெருமூச்சு ஒன்று அவளறியாமல் வெளிவந்தது…. சற்று நினைவுகள் கலைந்து எதிர்ப்புறம் பார்த்தாள்
    இரயில் வந்துகொண்டிருந்தது……..

    பரபரப்பாய் எழுந்து குழந்தையைத் தோள் மேல் சாய்த்துக் கொண்டு பெட்டிகளை தூக்குவதற்கு ஏதுவாய் எடுத்து வைத்தாள்.

    இரயில் வந்து நின்றதும் தானியங்கிக் கதவுகள் தானாகத் திறந்து கொள்ள உள்ளிருந்து இருவர் இறங்க வழிவிட்டு. பெட்டியையும் இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல முயற்சித்தாள்.
    பெட்டியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
    நல்ல வேளையாகப் பக்கத்து பெட்டியிலிரந்து இறங்கிய ஒருவர் வந்து உதவிசெய்தார். “நன்றி” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு. இருக்கையில் அமர்ந்தாள். மனதிற்குள் கவலை மறுபடி குடிகொண்டது.

    குழந்தை அழத் தொடங்கினாள். தோள் பையைத் திறந்து கலக்கி வைத்திருந்த பால்குப்பியைச் சப்ப கொடுத்தாள்.
    குழந்தை அமைதியாகப் பால் குடிக்கத் துவங்கியது. குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தபடி முகத்தைப் பார்த்தாள்.

    குழந்தைகளின் முகத்தைப் பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. கள்ளங்கபடமில்லா அந்த பிஞ்சு முகங்களைப் பார்க்கும் பொழுது. நம் கவலைகள் எல்லாம் ஒரு நிமிடம் மறந்து குழந்தைப் பருவத்திற்கு நாமும் செல்வது…. நம்மால் தடுக்க முடியாத ஒன்று. இந்த உலகத்தில் தன் குழந்தைப் பருவத்தை நினைத்து ஏங்காத மனிதர்களே இல்லை எனலாம்.

    அவளுக்கும் அப்படியே…. இந்த குழந்தைக்காகத் தானே அவள் வாழ ஆரம்பித்தாள். இந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவள் சோகம் மறைந்து மனதில் குதூகலம் பொங்குமே. குழந்தையும் அவள் இல்லை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரைக்கூட்டி விடுமே. அம்மா கூட சலித்துக் கொள்வார்கள்.

    “இந்தா உன் பொண்ண நீயே வச்சுக்க… உன்ன விட்டு யாருகிட்டயும் இருக்க மாட்டிங்குறா” பெருமையாக இருக்கும் அப்போதெல்லாம்.

    “என் செல்லம்” என்று மார்போடு அணைத்துக் கொள்வாள்.

    செல்லம் …. அவன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அவன் கொஞ்ச ஆரம்பித்து விட்டான் என்றால் …

    அப்பப்பா… உடல் சிலிர்த்தது இப்போதும். காதுக்குள் கேட்கும் அவன் குரல்

    “செல்லம், செல்லக் குட்டி “ என்று ஆரம்பிப்பவன் “பண்ணிக் குட்டி …. லூசுக் குட்டி “ என்று கொண்டு நிறுத்துவான்.

    அவளுக்கு மெல்ல கோபம் ஏறும்.

    “போடா நீ தான் பண்ணி… நாய் என்று திட்டுவாள்.” கையில் கிடைத்ததைத் தூக்கி எறிவாள் அவன் மீது.

    நினைவுகள் விட்டுச் சென்ற புன்னகை உதட்டோரத்தில்.

    குழந்தை பால்குடித்து முடித்திருந்தாள். தூங்கிப் போயிருந்தாள். பால்குப்பியை வாயிலிருந்து எடுத்து பைக்குள் போட்டுவிட்டு குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    குழந்தையின் முகம் மறுபடி அவனை நினைவுக்கு இழுத்து வந்தது. அவனோடு கூட கடைத் தெருவிற்கு சென்றிருந்த போது ஒரு பெரியவர் அவனையும் குழந்தையையும் பார்த்து விட்டு

    "மகாலட்சுமியே உனக்கு வந்து பிறந்திருக்கிறாள் பா"
    என்று வாழ்த்திவிட்டுச் சென்றது இன்னமும் காதில் ஒலித்தது.

    அவளுக்குப் புரியாத விசயங்களில் இதுவும் ஒன்று.
    அவனுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்தக் குழந்தைக்கு அவனது சாயல் எப்படி வந்தது என்பது….?

    தொடர்ச்சி
    Last edited by செல்வா; 18-04-2008 at 01:32 AM.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •