வித்தியாசமான நடை.. வர்ணனை...விவரிப்பு...
கடைசியில சின்னதாய் ஒரு சஸ்பென்ஸ்..
தொடருங்க அண்ணா..
இரயில் அறிவிப்புடன் அங்குலம் அங்குலமாக நகரத் துவங்கியது.
சன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பியவளின் கண்களுக்கு இயற்கை அன்னை வாரிக்கொட்டியிருந்த மலேசியாவின் அழகு மனதிற்கு சிறிது அமைதி அளித்தது.
எங்கு நோக்கினும் பச்சைப் பசேலென்று… பட்டுக் கம்பளம் விரித்தார் போன்ற கண்ணிற்கு குளிர்ச்சியான காட்சிகள்.
இரயில் இப்போது வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.
சன்னலுக்கு வெளியே மரங்களின் வேகமான ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத கண்கள் களைப்படைய … இமைகள் மெள்ள மூடின.
மீண்டும் அவள் கண்திறந்து பார்க்கும் போது ரவாங் நிலையத்தில் இரயில் நின்று கொண்டிருந்தது.
வேகமாக குழந்தையையும், பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
கே.எல் சென்ட்ரல் நிலையத்திற்கு செல்ல இங்கிருந்து அடுத்த வண்டியைப் பிடிக்க வேண்டும்.
நடைபாதை வழியாக தண்டவாளங்களைக் கடந்து எதிர்ப்பக்கத்திற்குச் செல்லவேண்டும்.
குழந்தையையும் வைத்துக் கொண்டு பெட்டிகளையும் இழுத்துச் செல்வது மிகக் கடினமாக இருந்தது. அண்ணணிடம் கேட்டிருக்கலாம் கே.எல் சென்ட்ரல் நிலையத்தில் இறக்கிவிட. இல்லை அவன் கண்டு கொள்ளவே மாட்டான். வீட்டிற்கு அவன் வருவதே உணவருந்தவும் உறங்கவும் மட்டும் தான். மற்ற நேரங்களில் என்ன செய்கிறான் எங்கு செல்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
அப்பாவிடம் கேட்டிருக்கலாம் கொண்டும் விட்டிருப்பார் ஆனால்…. அவரால் தான் இத்தனைப் பிரச்சனைகளும். ஒரு தந்தையின் இடத்திலிருந்து செய்ய வேண்டிய எத்தனை கடமைகளைத் தான் அவர் செய்தார். மாலையானால் கோல்ப் விளையாடப் போகிறேன் என்று கிளப்பில் சென்று மூக்கு முட்ட குடித்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டியது.
அம்மா …. ஆம் அவர்கள் குடும்பத்தையே தனது உழைப்பால் தாங்கிக் கொண்டிருப்பவள் அவள். அம்மாவுக்கு அவள் போவது சற்றும் பிடிக்கவில்லை.
நாளை முதல் அம்மா தனியாகக் கஷ்டப்படப் போகிறாள். என்ன செய்வது? ஆனால் சமீபகாலமாக அப்பாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவது சிறிது நம்பிக்கையளிக்கிறது.
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இனிமேல் அதைப்பற்றி கவலைப் பட்டு எதுவும் ஆகப்போவதில்லை. வேண்டுமென்றால் வேலைக்கு யாரையாவது வைத்துக் கொள்ளட்டும்.
சிந்தித்த படியே ஒருவழியாக பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து நடைபாதையில் இருந்த மரப்பலகையில் அமர்ந்தாள். நல்ல வேளையாக touch & go அட்டையைக் கொண்டுவந்திருந்ததால் பயணச்சீட்டுக்காக அலையவேண்டிய வேலை இல்லை. இரயில் வர இன்னும் நேரமிருக்கிறது.
குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு தூங்க வைப்பதற்காக தட்டிக் கொடுத்த படி காத்திருக்க ஆரம்பித்தாள். நடந்து வரும்போது விழித்த குழந்தை மறுபடியும் தூங்க ஆரம்பித்தது.
ராஸா நிலையத்தை விட ரவாங் நிலையம் சற்று பெரிய நிலையம். எப்போதும் ஆள் நடமாட்டமகவே இருக்கும். இரண்டாவது முறையாக அவனைச் சந்தித்த இடமிது.
எவ்வளவோ எதிர்பார்ப்புகளோடு அவனது மலேசிய வருகை இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு அவனோடு உரையாடவோ அவனைச் சந்திக்கவோ முடியவில்லை. கடைவேலை மிக அதிகம் அந்த நேரம் பார்த்து. வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரும் நின்று விட அனைத்து வேலைகளும் அவள் தலையில் இதனால் வேலையை விட்டு விட்டு அவனைப் பார்க்க அடிக்கடி போகமுடியவில்லை.
ஆனால் பட்டு குகை முருகனை தரிசிக்க அவன் வருவதாகச் சொன்னதும் தான் தோன்றியது அந்த எண்ணம்.
ஆசையாசையாய் சந்திக்க வந்து விட்டு சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்து போன அந்த இரண்டாவது சந்திப்பு அவள் நினைவுக்கு வந்தது.
தொடர்ச்சி
Last edited by செல்வா; 20-04-2008 at 01:53 AM.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
அதான் அண்ணா...
எல்லோருக்கும் நான் சின்னவன்ல... ஹிஹி
சும்மா சொல்லக்கூடாது... அசத்தலா எழுதறீங்க..
சுஜாதா ஒரு கதையில் முதல் முப்பது பக்கத்திற்கு எழுதியது யாருக்குமே புரியாது...ஒரு அத்யாயத்தின் இறுதியில் "சுழன்று கொண்டிருந்த டேப் நின்றது"னு முடிக்கறப்போன்னு சொல்லும் போது தான் புரிய ஆரம்பிக்கும்.
அதே மாதிரி உங்க கதையும் சுத்தமா புரிந்ததுன்னு சொல்லமாட்டேன். ஆனா என்னவோ இருக்கு இதுலன்னு எதிர்பார்ப்ப உண்டாக்கிடுச்சு. மேலும் என்னவா இருக்கும்னு யோசிக்கவும் வைக்குது. மேலும் தொடருங்கள்...
செல்வா மூன்றுபாகத்தையும் மறுபடி முழுமையாகப் படித்தேன், மதி கூறியது போல முழுமையும் புரிந்ததாகக் கூறமுடியாது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. குழந்தையில் தான் எதோ சூட்சுமம் இருப்பதாகத் தெரிகிறது. சரி, சரி தொடருங்க பார்ப்போம்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks