பரவால்ல மதி. நேரம் கிடைக்கும்போது படிச்சு பின்னூட்டம் போடுங்க. இங்கதானே இருக்கப்போகுது.
உங்கப் பின்னூட்டம் பளிச்சுன்னு இருக்கும்......பொளேர்ன்னும் இருக்கும். அதைப் பாக்காத ஆதங்கம்தான் வேறென்ன?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நாகர்கோவில் திருவனந்த புரம் நெடுஞ்சாலையில் பயணித்த வண்டி அழகிய மண்டபம் சந்திப்பில் வலதுபக்கமாகத் திங்கள் சந்தைக்குச் செல்லும் பாதையில் திரும்பியது.
பின்னிருக்கையில் இப்போது விசும்பல்களொடு மூக்குச் சீந்தும் ஒலியும் அதிகமாகக் கேட்க. என்னாச்சும்மா… எதாச்சும் பிரச்சனையா என்று பரிவோடு அந்த முதிய ஓட்டுனர் கேட்கவும்.
சற்றுத் தெளிந்தவள் நிமிர்ந்து பரவால்லண்ணா கொஞ்சம் ஓரமா வண்டிய நிறுத்துங்க.. கொஞ்சம் முகங்கழுவிக்கிறேன்.
நிற்க இறங்கி முகம் கழுவியவள்.
சற்று கூந்தல் மற்றும் ஆடைகளைச் சரிப்படுத்திவிட்டு மீண்டும் வண்டியில் அமர்ந்தாள்.
“இன்னும் எவ்ளோ தூரங்கண்ணா?”
“இன்னும் 6 – 7 கி.மீ தாம்மா போயிடலாம்”
வண்டி அதற்குள் திருவிதாங்கோடு வந்திருக்க…
பர்தா அணிந்த பெண்களும் … குழந்தைகளுமாக கடைத்தெரு கலகலப்பாக இருந்தது.
சூரியன் மேற்குப் பக்கத்திலிருந்து கூரைகளுக்கு தங்க வர்ணம் பூசிக்கொண்டிருந்தான்.
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கும் போது மனம் லேசாகியது…
வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள்..
ஓட்டு வீடுகள்
காரைவீடுகள்
இடையிடையே குடிசைகளும்.
எங்கும் தென்னந்தோப்புகள்
நடுவில் குளங்கள்…
குளங்களில் நிறைய தாமரைகள்….
மழைக்காலம் என்பதால் சாலைகள் சேற்றில் குளித்திருந்தன…
சரியாகப் பராமரிக்கப் படாத சாலைகள்..
வண்டி குலுங்கிய படியேப் பயணித்துக் கொண்டிருந்தது.
நினைவுகளின் தொடர்ச்சி மறுபடியும் அவளை ஆட்கொண்டது…
மறுநாளும் அதற்கடுத்த நாளும் அவரைப் பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் அவர் வந்தபோது அவரிடம் பேசி அவனுடன் பேச முடியுமா அலைபேசி எண் கிடைக்குமா என்று கேட்டாள்.
என்னிடம் இல்லை ஊரில் கேட்டு சொல்கிறேன் என்று சொன்னவர் மறுநாள் வந்து.
“அவங்கிட்ட தொலைபேசி இல்லியாம்மா…
அவன் இப்ப அவங்க வீட்டில இல்லை
அவன் பாட்டி வீட்டில் தங்கிருக்கானாம்…
அங்க எந்த எண்ணும் இல்லை… ஆனா அவங்க ஊரும் விலாசமும் தெரியும்.”
சரி என்று அவனுடைய பாட்டி வீட்டு முகவரியைக் கொடுங்கள் என்று எழுதி வாங்கிக் கொண்டாள்.
முகவரி வாங்கும் போது கடிதம் எழுத என்று தான் வாங்கினாள். ஆனால் அதன் பின் என்ன நினைத்தாளோ …
இதோ இப்போது அவனைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறாள்…
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
"இது தாம்மா .. திங்கள் சந்தை இங்கே எங்க போகணும்…?"
"பட்டர் விளை… என்று கேளுங்கள் அண்ணா…"
வழிகேட்டு ... சொன்ன வழியில் பிரதான சாலையிலிருந்து பிரிந்த மண்சாலையில் வண்டி பயணிக்கத் துவங்கியது.
இது ஆற்றின் கரைச் சாலை…
மறுபக்கம் கண்ணுக் கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள்… அங்கே நெல்லும், வாழையும், மரவள்ளிக் கிழங்கும் தென்னந் தோப்புகளும்…
இருபக்கமும் வயல் வெளிகளுக்கு நடுவே இருந்தச் சாலையில் வண்டி பயணித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஊர் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை…
எங்கும் வயல்கள் வாய்க்கால்கள்..
சூரியன் அஸ்தமன நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். கொக்குகள் எழுந்து பறக்கத் துவங்கின.
கொஞ்ச தூரம் ஆளில்லாத சாலையில் பயணித்த பின் ஒன்றிரண்டு வீடுகள் தென்பட்டன.
சற்று உள்ளேச் செல்லச் செல்ல இன்னும் பல வீடுகள் வரிசையாய்…
பிரதான சாலையில் போகும் யாரும் உள்ளே இப்படி ஒரு ஊர் இருப்பதாய் சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.
வண்டியை நிறுத்தி… அவன் பாட்டி பெயர் சொல்லி கேட்டாள்…
அந்தப் பாட்டியைத் தேடி வண்டியில் வந்தவர்கள் கேட்பதை ஏதோ அதிசயம் போலவே பார்த்த மக்கள்… உற்றுக் கவனிக்கத் துவங்கினர்.
வண்டி ஒரு மேட்டை அடைந்தது. அந்தச் சாலையின் இறுதியில் போய் நின்றது. அதற்குப் பின் சாலை இல்லை.
இறங்கி விசாரித்தாள். பேன்ட்டும் சட்டையும் அணிந்திருக்கும் அவளை வித்தியாசமாகப் பார்த்தபடியே கூட்டம் வழி சொன்னது. அதற்குள் இரண்டு சிறுவர்கள்..
பாட்டி உங்களைத் தேடி ஆளுவந்திருக்காங்க என்று கத்தி கட்டியம் கூறியபடி ஓடினர்.
காசு கொடுத்து வண்டியை அனுப்பியவள். ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சென்றாள் குழந்தையைத் தூக்கியபடி. பின்னால் இரண்டு சிறுவர்கள் அவள் சொல்லச் சொல்ல கேட்காமல் அவள் பெட்டியை இழுக்க முடியாமல் ஒருவன் முன்னிருந்து இழுக்க ஒருவன் பின்னிருந்து தள்ள வந்து கொண்டிருந்தார்கள்.
அந்த வழி வீட்டின் பின்பக்கத்தை அடைந்தது. சுற்றிக் கொண்டு முன்பக்கம் வந்தாள்.
பழைய ஓட்டு வீடு அது.
வெளியேத் திண்ணை..
முற்றம் விரிந்திருந்தது. நன்றாக சாணமிட்டு மெழுகப் பட்டிருந்தது.
ஒரு பக்கத்தில் வைக்கோல் குவித்து வைக்கப் பட்டிருந்தது.
வெளியே கட்டில் போட்டு அதில் அமர்ந்திருந்தாள் பாட்டி.
தென்னந்தோப்புகளுக்கு நடுவே இருந்த அந்த வீட்டிற்கு எப்போதும் காற்றிற்குப் பஞ்சமில்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.
நேராகப் பாட்டியிடம் சென்று தான் மலேசியாவிலிருந்து வருவதாகவும். அவனைப் பார்க்க வந்திருப்பதாகவும் சொன்னாள்.
பாட்டி சற்று நேரம் திகைத்துப் போனாள்.
என்ன கேட்க..? என்ன சொல்ல..?
என்று தெரியவில்லை…
ஒரு வாறு தன்னைச் சமாளித்தவள்…
"இரு பிள்ளே" என்று சற்று நகர்ந்து இடம் விட்டாள்.
தோளில் தூங்கிக் கொண்டிருந்தக் குழந்தையை மடிக்கு இடம் மாற்றியபடி அமர்ந்தாள்.
என்ன சொல்வதென்று இருவருக்கும் தெரியவில்லை…
கனத்த மெளனம்….
மீண்டும் பாட்டிதான் எதாவது சாப்புடிறயா.. என்றபடி அவள் வேண்டாம் பாட்டி என்றதையும் பொருட்படுத்தாமல் உள்ளேச் சென்று செவ்வாழைப் பழம் இரண்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
சாப்பிட்டு முடித்து கொண்டு வந்திருந்த தண்ணீரை குடித்தவள் சற்று ஆசுவாசமடைந்து…
அவன் எங்கே.. என்று கேட்டாள்…
பாட்டி கையைக் காட்டினாள்…. வீட்டிற்கு வெளியே…
குழந்தையைப் பாட்டி வாங்குவாளென்று எதிர்பார்த்தாள் எதுவும் சொல்லாததால் அவளாகவே கட்டிலில் ஒரு ஓரத்தில் குழந்தையைக் கிடத்தினாள்.
பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். எதுவும் சொல்லவில்லை..
குழந்தையைக் கிடத்திவிட்டு எழுந்து பாட்டி கைகாட்டிய திசைப் பக்கம் சென்றாள்.
பாட்டியின் வீட்டிற்கு முன்னால் பரந்திருந்தன வயல்கள்.
எங்குப் பச்சைப் பசேலென்றிருந்தது.
தூரத்தில் வரப்பில் முதுகு காட்டிய படி அமர்ந்திருந்தான் அவன்.
எழுந்து நடந்து வரப்பைத் தாண்டப் போனாள். அவளது செருப்பைப் பார்த்த பாட்டி வயலுக்குள்ள போற செருப்ப கழட்டிட்டுப் போ என்றாள்.
செருப்பை கழட்டிவிட்டு நடந்தாள்.
வரப்புகளில் புற்கள் காலில் குறுகுறுப்பை உண்டாக்கியது.
மனதிலோ அவனே எதிர்பார்க்காமல் அவனுக்குத் தரும் அதிர்ச்சி வைத்தியம்…
இன்னும் படபடப்பு ஏற்றுக் கொள்வானோ என்னமோ என்று…
சூரியன் மிக பூமி மட்டத்திற்கு விழுந்து விட்டான் இருள் மெல்லத் துவங்கிக் கொண்டிருந்தது.
காலுக்குக் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சிறு மீன்களை கவனித்துக் கொண்டிருந்தவன்…
யாரோ வரும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
அவனால் நம்ப முடியவில்லை…
அவளா அது உண்மையா… அல்லது கனவா…
சற்று கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தான்.
ஒயிலாக நின்று சிரித்துக் கொண்டிருந்தாள் அவனைப் பார்த்து.
இருவரும் பேச வில்லை…
இருவர் கண்களும் ஏதேதோ பேசின...
அவனை நேராகப் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொண்டாள் அவள்.
அவன் ஒரு கையை நீட்டினான்…
நிமிர்ந்தவள்... மெல்ல நடந்து ..
அவன் பக்கத்தில் இருந்த தாங்குக் கட்டைகளைத் தூக்கி அப்பால் வைத்து விட்டு.
அருகே அமர்ந்தாள்.
“எப்படிடா இருக்க…. “ ஒரே நேரத்தில் துவங்கிய வார்த்தைகளை முடிக்கவில்லை இருவரும்.
இருவர் கண்களிலும் கண்ணீர்… ஆறாக வழிந்தது.
*****************************
குழந்தை விழித்தது…
அங்கும் இங்கும் புரண்டது…
பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
லேசாகச் சிணுங்கிய குழந்தை சற்று நேரத்தில் அழவாரம்பித்தது.
பாட்டி எழுந்து அவளைத் தேடினாள்
அங்கேத் தூரத்தில் … வயல் வரப்பில்
இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்திருக்கும் காட்சியை கதிரவன் தன் கறுப்புக் கதிர்களால் எழுதிக்கொண்டிருந்தான்.
சற்று நிதானித்த பாட்டி என்ன நினைத்தாளோ… குழந்தையைத் தூக்கி தோளில் போட்ட படி .
வெகுகாலத்திற்கு முன் அவனுக்காகப் பாடிய அதே தாலாட்டுப் பாட்டை பலவருடங்களுக்குப் பின் பாடவாரம்பித்தாள்.
ஆராரோ…. ஆரீராரோ… என் கண்ணே… நீ கண்ணுறங்கு…
அத்தை அடிச்சாளோ… என் கண்ணே உன்ன அரளிப்பூச் செண்டாலே..
மாமன் அடிச்சானோ.. என் கண்ணே.. உன்ன மல்லிகைப்பூச் செண்டாலே..
ஆரரோ… ஆரீராரோ…
குழந்தை நிம்மதியாய் மறுபடித் தூங்கத் துவங்கியது...
பாட்டி மெல்லத் தன் குரலைக் குறைத்து பாட்டை நிறுத்த...
வெள்ளி நிலா வெளிச்சத்தில்
அழகிய அமைதி ஒன்று அங்கே குடிபெயர்ந்தது....!
**************************************************************************
அப்பாடா...............
கிட்டத்தட்ட ரெண்டு வருசமா எழுதுறன் எழுதுறன்னு இழுத்து இழுத்து இப்போ.... ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு....
இதிலருந்து ரெண்டு விசயம் கத்துக்கிட்டேன்.
ஒண்ணு என்னாலயும் தொடர்கதை எழுத முடியும்கிறது.
ரெண்டு இனிமேல் தொடர்கதையே எழுத கூடாதுங்கிறது.
இதுவரை உடனிருந்து ஊக்கமளித்த அனைத்து மன்ற உறவுகளுக்கும் நன்றிகள்.
குறிப்பா எல்லா அத்தியாயங்களையும் உடனுக்குடன் வாசிச்சு பின்னூட்டம் எழுதி ஊக்கப் படுத்திய சிவா. அண்ணா. பாக்கும் போதும் பேசும் போதும் கதை என்னாச்சு என்று கேட்டு கேட்டு எழுத வைத்த
பாரதி அண்ணா, மதி , ஆதி எல்லாருக்கும் நன்றி.
கண்டிப்பா வாசிச்சு உங்களோட கருத்துகளைக் கொடுங்க...
குறைகளைச் சுட்டுங்கள்.
மிக்க நன்றி.
(இதுதான் என் 2000மாவது பதிவும் கூட)
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
கடைசிவரைக்கும் பேரையே சொல்லாம சாதிச்சுப்புட்டீங்களே செல்வா....
சரி விடுங்க....இனி அவனுக்கு இவள்தான் தாங்குக்கட்டைகளாக இருப்பாள். எத்தனையோ சூறாவளியிலும், சுழலிலும் சிக்கித்தவித்த இருவரின் வாழ்க்கைப் படகும்...இனி அந்தப் பச்சைப் புல்வெளிக்கடலில் அமைதியாகப் பயணிக்கும்.
அழகான எழுத்துநடையில், சிலாகிக்கவைக்கும் கருத்துக் குவியல்களுடன்....நெஞ்சம் நிறைத்த காதல்கதை. மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்வா.
இத்தனை அலைக்கழிப்புக்களுக்குப் பிறகு சேரும் இருவரின் சங்கமம்....கொஞ்சம் கனம் குறைவாயிருக்கிறதோ..பட்டென்று முடிந்(த்)த உணர்வு.
இருந்தாலும்...சுவைக் குறையா உணவு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நானும் இதைத்தான் சொல்லனும்னு நினைத்தேன்...கடைசிவரைக்கும் பேரையே சொல்லாம சாதிச்சுப்புட்டீங்களே செல்வா....
ஒரு நல்ல காதல் கதை படித்த திருப்தி...
வாழ்த்துக்கள் செல்வா...
என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க...ரெண்டு இனிமேல் தொடர்கதையே எழுத கூடாதுங்கிறது
கதையின் பாதையை சரியாகக் கணக்கிட்டு முடிக்கவேண்டிய இடத்தில் முடித்திருக்கிறீர்கள். இடையில் எழுதுவதை விட்டிருந்தாலும் கதையில் தொய்வு இல்லை என்பது உண்மை.
இனிமேல் தொடர்கதை எழுதமாட்டேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.
முதல் முயற்சி வெற்றி பெற்றபிறகு அடுத்தடுத்த படிகளில் கால் வைப்பதுதானே பெருமை. எனவே தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களாகிய எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
நீங்கள் தொடராமல் போயிருந்தால் ஒரு நல்ல கதையை நாங்கள் இழந்திருப்போம். கதையைத் தொடர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
அண்ணே.. உங்ககிட்ட சொன்னமாதிரி.. இன்னிக்கு முழுசா... படிச்சு முடிச்சுட்டேன்.... இவ்ளோ அழகா உணர்வுகளையும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த முடியுமான்னுஅதிசயிக்கறேன்... ஆரம்பம் முதல் இறுதிவரை அவள் பயணமும்.. அவன் நினைவுகளும் என மாறி மாறி சொல்லி..அவள் அதிரும்போது எங்களையும் அதிர வைத்து.. இறுதிக் காட்சி..நச்..
நல்ல சினிமா எடுக்கலாம் இந்த கதையை வைத்து... அவ்ளோ டச்ச்சிங்கா இருந்தது... உங்கள் வார்த்தைப் பிரயோகங்களும்.. தெளிவான சுத்த தமிழ் நடையும்... அவ்ளோ அழகு.. நீங்க இன்னும் நிறைய எழுதணும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks