என் வயதிலும்
காதல் உண்டு
எந்த வயதிலும்
காதல் உண்டு...
தா தா என
கேட்க்கும் பொழுது
தேனாய் அல்லவா இனிக்கிறது
என்னவளை கரம்பிடித்த
பொழுது
ஏற்ப்பட்ட ஆனந்தம்
இரட்டிப்பாய்
என் கரத்தை உன் சந்தன
விரல்கள் பிடித்து நடக்கையில்...
நான் பெற்ற மகளிடம்
அன்னையை கண்டேன்
மகனே
உன் மகளிடம்
என்னவளை காண்கிறேன்.
வயது முதிர்ந்தாலும்
என் காதல் உதிரவில்லை
மீண்டும்
என் பேத்தியுடன்....
Bookmarks