தமிழைக் கொலை பண்ணும் தமிழ்ப்பட பாடலாசிரியர்களுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்
என் அருமை தங்கிலிஷ் (tanglish) பாடலாசிரியர்களுக்கு,
நொந்து போன தமிழ்க்காதலன் எழுதிக்கொள்வது,
எதுகை மோனைகளும் இரட்டைக்கிளவிகளும்
அழகான சந்தங்களும் அடுக்குத்தொடருமாய் இருந்த
தமிழ்ப்பாடல்கள்
கோக்கக்கோலா குடிச்ச நிலாவாகவும்
புரியாத ஆங்கில ரேப் பாடல்களின் இடைச்சொருகல்கள் நிறைந்ததாகவும்,
இப்படி தேங்கிய குட்டையாக
சீர்கெட்டுப் போய்விட்டது...
தமிழுக்கு தண்ணீர் ஊற்றினேன்,
தமிழுக்கு சோறு போட்டேன்
என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு சில கவிகள்...
கவியரசுவின் தமிழ்த்திரைப்பாடல்களில்
இலக்கியம் வாழும்...
தமிழ் துள்ளும்...
பட்டுக்கோட்டையின் பாடல்களில்
ஒரு கம்யூனிச வாசம்..
இருந்த போதும் அழகுத்தமிழ்...
சரி,
ஆங்கிலத்தை சொருகுனீங்க...
அதுக்காக தமிழை ஏன் கொலை
பண்ணுனீங்க...
புரியாத வார்த்தைகள்...
உட்டாலக்கடி...
முக்காலா முக்காப்புலா...
இப்படி
புதிய கண்டுபிடிப்புகள்...
சரி தமிழைக் கொலை பண்ணியாச்சு...
அதோட நிறுத்தியிருந்தாப் பரவாயில்லை...
காமமும் காதலைப் போன்று
அழகானது...
வள்ளுவன், கம்பன், இளங்கோ
இவர்கள் வரிசையில்
இவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும்
தனக்குத் தெரிந்த வகையில்
கண்ணதாசன், மற்றும் பலர்...
அதைக் கொச்சப்படுத்தி...
இலை மறை காயாக இருந்தால் தான் அழகு...
எல்லாத்தையும் அவுத்தாச்சுன்னா?
சரி,
காமத்தையும் கொச்சைப்படுத்தியாச்சு...
அதற்கு அப்புறம்...
நம் நாட்டுப்புறப்பாடல்கள்...
அது என்ன பண்ணுச்சு உங்களை...
உருப்படியா இருந்ததையும்
தேடிப்பிடிச்சு கொண்டு வந்து
துரியோதனன் சபையில் நின்ற பாஞ்சாலியாக்கிட்டீங்க....
இதோட நின்றிருந்தாப் பரவாயில்லை...
நல்ல கவிஞர்கள் நாலு பேரு..
அவங்க பாட்டுக்கு ஒதுங்கி இருந்தாங்க...
அவங்களையும் வம்புக்கிழுத்து
சினிமாக்கு பாட்டெழுதத் தெரியுமான்னு ஒரு நையாண்டி வேற...
இந்தக் கண்றாவியெல்லாம் வேண்டாம்னுதானே
அவங்க ஒதுங்கி இருக்கிறாங்க...
அவங்களையும் சினிமாக்கு கொண்டு வந்து
உங்களைப் போல ஆக்கனுமா?
முடிந்தால் எழுதுங்கள்..
இல்லை நிறுத்திக் கொள்ளுங்கள்...
மற்றவை அடுத்த கடிதத்தில்...
சரி வர்ட்டா...
இப்படிக்கு,
நொந்து போன தமிழ்க்காதலன்..
Bookmarks