நண்பரே
ஒலிவடிவத்தை தான். ஒளி வடிவத்தை அல்ல.
நானும் அந்த ஆசையில்தான் இந்த திரியை துவக்கினேன். முதலில் நண்பர் அமரன் அவர்களிடம் தனிமடல் அனுப்பி விசாரித்தேன். அவர் தான் இலக்கிய பகுதியில் துவங்கும் படி ஆலோசனை வழங்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
மஜ்னு மற்றும் காதல் தேச பட பாடல்கள் நான் கேட்டதில்லையம்மா. நீங்கள் விரும்பும் தாலாட்டு பாடல் எல்லாமே தரலாம்.
(கண்ணன் ஒரு கைக்குழந்தை... மாதிரி பாடல் வேண்டாம் என நினைக்கிறேன்)
நான் இணைப்பு கொடுக்க விரும்பும் பாடல்கள்: குழந்தைகளை பற்றிய பாடல்கள், அவர்களை பாராட்டும் பாடல்கள், குழந்தைகளை தாலாட்டும் பாடல்கள்...
நண்பர்கள் சொன்னது இல்லாமல் எனக்கு நினைவுக்கு வரும் பாடல்கள்:
கண்னான பூமகனே கண்ணுறங்கு சூரியனே...
சிங்கார புன்னகை கண்ணார கண்டாலெ...
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே..
அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா...
இப்படியோர் தாலாட்டு பாடவா...
ஆழக்கடலில் தேடீய முத்து....
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே....
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ..
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்..
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்..
வரம் தந்த சாமிக்கு வகையான லாலி...
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா..(வண்ணக்கிளி)
ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்ப கனியே..
பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா...
தேனூறும் நேரம் நான் பாடும்ராகம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....
செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு....
என் தெய்வம் தந்த பூவே..
பூஞ்சிட்டு கண்ணங்கள் பொன்மணி தீபத்தில்....
பத்து மாசம் சுமக்கவில்லை செல்லையா..
மற்றும் திரையில் வராத நாட்டுப்புற தாலாட்டு பாடல்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக,
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று...
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று...
இந்த இரண்டு பாடல்களும் கூட.
பிள்ளை இல்லாதவர்களின் வேதனை இந்த பாட்டில்தான் தெரியும்
Bookmarks