உயிரை கொடுத்து
உயிரை உலகதிற்க்கு
அறிமுகம்படுத்தும்பொழுது
அவளது வலிகளுக்காக
அழுகையுடன் பிறந்து குழந்தை...
உயிரை கொடுத்து
உயிரை உலகதிற்க்கு
அறிமுகம்படுத்தும்பொழுது
அவளது வலிகளுக்காக
அழுகையுடன் பிறந்து குழந்தை...
இறுதி இரண்டுவரிகள் புருவத்தை உயர்த்த வைக்கின்றன
பாராட்டுக்கள் நம்பி..
அன்புடன் ஆதி
அன்புடன் ஆதி
பிர + சவம்.
பிறந்தது சவம்தானே. கண், காது, மூக்கு என்ற அனைத்தும் இருந்தும் சவமாகத்தானே இருந்தோம். கண் இருந்தும் பார்க்காமல், காதிருந்தும் கேட்காமல், அனைத்து உறுப்புகளும் செயல்பாடற்ற சவ நிலையில் உயிரின் நினைவை ஊட்டியது அச் சவத்தின் அழுகுரல்தானே.
உயிர்ப்பித்த தாய்க்கு தன்பொருட்டு அவள் பெற்ற வலிக்கான சப்தம் பிள்ளையின் அழுகுரல்.
ஆஹா தாய்மைக்கான அஞ்சலியில் அனைத்தையும் விஞ்சிவிட்டது உங்களின் கற்பனை மிக்க வளமான வரிகள்.
ஆம் இது கற்பனைதானே, நிஜவாழ்வில் தாய்மைதானே அழுகிறது. எந்தப் பிள்ளையும் தாய்க்காக கண்ணீர் விடுவதில் தயக்கம்தான் காட்டும்
சரி. கற்பனையிலாவது தாய்மையைப் போற்றுவோம்.
நல்ல கவிதை நம்பிகோபாலன்
தாயின் வலியறிந்து அழும் குழந்தை
தாய் மீண்டும் குழந்தையாகும் போது வலியாக நினைக்காமல் இருந்தால் நலம்.
ஜெயராமன் .. உங்கள் கருத்துகள் யதாற்த்தம்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அனைவருக்கும் என் நன்றி.
பத்து மாதம் நமக்காக பத்தியம் இருந்து
பெற்று எடுப்பவளை ஆயுள் முழுவதும் காப்பாற்றுவது கடமையாகவே நினைக்கிறேன்.
அழுது கொண்டே பிறக்கும் குழந்தைகளுக்கு இப்படி
ஒரு காரணம் கவிஞனால் மட்டுமே கண்டுபிடுக்க முடியும்.
பாராட்டுக்கள்.
படிக்கும் கவிதை படிப்பவருக்குள் ஒரு அனுபவத்தை விதைக்க வேண்டும்.
ஏற்கனவே படிக்கப்பட்டது எனில் அந்த அனுபவத்தை புதுப்பிக்க
வேண்டும். உங்கள் கவிதை இது இரண்டையும் தாண்டி நிற்கிறது.
இன்னும் கொஞ்சம் தட்டி/நெளித்து எழுதப்பட்டால் இது ஒரு மிகச்சிறந்த
கவிதையாகும் வாய்ப்பிருக்கிறது.
" இன்னும் கொஞ்சம் தட்டி/நெளித்து எழுதப்பட்டால் இது ஒரு மிகச்சிறந்த கவிதையாகும் வாய்ப்பிருக்கிறது. " --- கொஞ்சம் எனக்கு சொல்லி கொடுங்களேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks