பெங்களூரில் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர் கன்னட வேதிகே என்ற அமைப்பு மற்றும் பாஜக
தமிழ் படம் ஓடிய திரைஅரங்கம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது,மிகவும் நாகரீகமற்ற முறையில் நடந்துள்ளனர்
தமிழர்கள் பகுதிகளில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது,
எடியூரப்பா வீரப்பா இன்று இருந்தால் நீ உள்ளே வருவீயாப்பா என்று விஜய டி.ராஜேந்தர் அடுக்கு மொழியில் மதுரையில் கூறியது தான் நினைவில் வருகிறது
தமிழ் நாட்டில் உள்ள ஓகனேக்களில் கூட்டு குடிநீர் திட்டத்தை நிரைவேற்றினால் கன்னடர்களுக்கு என்ன வந்தது
முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேட பாஜக செய்த சதி,விரைவில் கர்னாடகா மாநில தேர்தல் வருவதால் தான் இந்த கூத்து
தமிழக முதல்வர் மிகவும் வருத்ததுடன் இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு ஊறு விளைவித்து விடாதீர்கள் என்று கூறி உள்ளார்
மற்ற நாடுகளில் உள்ள ஒற்றுமையை பார்த்தாவது கன்னடர்கள் திருந்தட்டும்,
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மாநிலங்களின் ஒற்றுமை,
இனியாவது விரைவில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பும் என்று நம்புவோம்.
Bookmarks