Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 60

Thread: ஒப்பிய ஒப்புமைகள் (5) கடலாகும் அடர் வனமே

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    கதிர் கண்ட கொண்டலோ தன் உயிர் கொண்ட காதலோ..

    வருவதைக் கண்டதும் சிவப்பதும்
    எரிவதை உண்டதும் கறுப்பதும்
    இறுகிய குளிர்ச்சியில் அழுவதும்
    கதிர் கண்ட கொண்டலோ தன்
    காதல் கண்ட முகமோ...?

    (இதையே சற்று மாற்றி.... எழுதியுள்ளேன்... )

    எரிவதைக் கண்டதும் கருத்தனள் - தலை
    தெரிவதைக் கண்டதும் சிவந்தனள் - மனம்
    நிறைந்த நல் மகிழ்ச்சியில் அழுதனள் - அவள்
    தன் கதிர் கண்ட கொண்டலோ - இல்லை
    என் உயிர் கொண்ட காதலோ(லியோ) ?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    ஆக சிலேடை என்பது இரட்டுற மொழிதல்.
    சிலேடையாய் இரு பொருட்களை ஒன்று படுத்தலாம்
    எதிரெதிர் அர்த்தம் கொடுக்கலாம்.

    ஆனால் அனைத்திற்கும் பொதுவாய் ஒன்றுண்டு ஒரு சொல் அல்லது சொற்றொடருக்கு வெவ்வேறு அர்த்தங்கள் காண்பிக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி..
    தங்களது விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. தலைப்பை மாற்றிவிடுகிறேன் ஒப்புமை என...
    இதோடு விட்டு விடாமல் இன்னும் எங்களுக்கு கற்பிக்க வேண்டுகிறேன்...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    வருவதைக் கண்டதும் சிவப்பதும்
    எரிவதை உண்டதும் கறுப்பதும்
    இறுகிய குளிர்ச்சியில் அழுவதும்
    கதிர் கண்ட கொண்டலோ தன்
    காதல் கண்ட முகமோ...?

    (இதையே சற்று மாற்றி.... எழுதியுள்ளேன்... )

    எரிவதைக் கண்டதும் கருத்தனள் - தலை
    தெரிவதைக் கண்டதும் சிவந்தனள் - மனம்
    நிறைந்த நல் மகிழ்ச்சியில் அழுதனள் - அவள்
    தன் கதிர் கண்ட கொண்டலோ - இல்லை
    என் உயிர் கொண்ட காதலோ(லியோ) ?

    கொண்டல் என்றால் என்ன அண்ணா?

  4. #40
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடடா...இரு தமிழ் வித்தகியரின்...விளக்கங்கள்...பாமரனையும் பா எழுதவைத்துவிடும்.இதுநாள்வரை சிலேடை என்றால் ஒரு வார்த்தை இரு பொருளைக் குறிப்பிட உபயோகிப்பது என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என ஆச்சர்யத்தில் அயர்ந்து நிற்கிறேன்.

    பத்தாம் வகுப்பில் தமிழ் இலக்கணம் படித்ததோடு சரி...முப்பது வருடங்களுக்கு முன்....அதற்குப்பின்னால் இம்மன்றத்தில்தான் அதை எளிமையாய் படித்து புரிந்து கொள்ள முடிகிறது.

    இதற்காக செல்வாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அழகான கவிதைகளை எழுதி...அதற்கு விளக்கமளிக்க இந்த தமிழரசிகளை இங்கே வரவழைத்த செல்வாவுக்கு நன்றி.

    வாழ்த்துகள் செல்வா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    கொண்டல் என்றால் என்ன அண்ணா?
    மேகம்.....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #42
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    வருவதைக் கண்டதும் சிவப்பதும்
    எரிவதை உண்டதும் கறுப்பதும்
    இறுகிய குளிர்ச்சியில் அழுவதும்
    கதிர் கண்ட கொண்டலோ தன்
    காதல் கண்ட முகமோ...?

    (இதையே சற்று மாற்றி.... எழுதியுள்ளேன்... )

    எரிவதைக் கண்டதும் கருத்தனள் - தலை
    தெரிவதைக் கண்டதும் சிவந்தனள் - மனம்
    நிறைந்த நல் மகிழ்ச்சியில் அழுதனள் - அவள்
    தன் கதிர் கண்ட கொண்டலோ - இல்லை
    என் உயிர் கொண்ட காதலோ(லியோ) ?
    வெய்துயர் ஒப்புமை அருமை..

    சிலாகிக்க இன்னும் நிறைய ஒப்புமைகளைக் கொடு..

    அன்புடன் ஆதி
    அன்புடன் ஆதி



  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    பச்ச சட்டைகளுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த திரியில் இடம் பெற்ற இலக்கணம் தொடர்பான விவாதங்களையும் விளக்கங்களையும் தனித்திரியாக்கினால் இன்னும் பலரும் பார்த்து பயனுறவும். மேலும் பல விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும் வசதியாகும் என எண்ணுகிறேன் ஆவன செய்வீர்....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இங்கே(யும்) இருக்கட்டும் செல்வா.. உதாரணத்துடன் பயிற்றுவித்தமை பயன் மிக்கதாக உள்ளது.

  9. #45
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    மேகம் கறுத்தல் நீருண்டதால் கதிர் எரிந்து வெய்யிலில் நீராவியானதால்
    அவள் முகம் கறுத்தது நீர் எரிந்து விழுந்ததால்

    அவள் முகம் கறுக்க நான் எரிந்து விழுந்தால் போதும். மேகம் கருக்க சூரியன் எரிய வேண்டும்.. மேகத்தின் மேலல்ல.. நீரின் மீது.. பாலைவனத்தில் சூரியன் எரிந்தால் மேகம் கருப்பதில்லை. இங்கு இன்னொரு பொருள் வந்து விடுகிறது.

    கதிர் முகம் கண்டதும் சிவந்தது மேகம். இது ஒரு நிகழ்ச்சி. அதே போல் உயிர் முகம் கண்டது நாணிச்சிவத்தலும் ஒரு நிகழ்ச்சி.

    ஆனால் கதிரவன் மறையும் பொழுதும் மேக முகம் சிவக்கும். காதலி முகம்? இது மறைபொருளாய் தொக்கி கொஞ்சம் உரசுகிறது..

    (சூரியன் வந்தாலும் சரி, போனாலும் சரி மேகம் முகம் சிவக்கும்.. அதையும் சேர்த்துச் சொல்லணும்.. ஏனென்றால் சிவப்பது என்பது ஒரு பொழுது மட்டுமல்லவே! பிரியும் காதலன் கொடுத்த முத்தத்தில் சிவக்கும் முகத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.)


    இறுகிய குளிர்ச்சி - நிறைந்த மகிழ்ச்சி அடைமொழி நெருடுகிறது. குளுமை என்பதற்கும் (கூல்) குளிர் (கோல்ட்) என்பதற்கும் சிறிய வித்தியாசம். இறுகிய குளிர்ச்சி என்பது மகிழ்வுச் சொல்லா? உறைய வைக்கும் குளிர்.. சிலீரென குத்தும் குளிர் என சற்று மாறித் தோற்றம் காட்டுகிறது.. அந்தக் குளிரில் உறைபனியாய் பனிமழை பெய்யும்.

    ஆக முதல் கவிதையை விட இரண்டாம் கவிதை பொருத்தமாய் தெரிகிறது,,


    குளிர்ந்த மேகம் மழைபொழியும் பொழுது கதிர் கண்ட மேகமா எனப் பார்த்தால் இல்லையே செல்வா! கதிர்கானா மேகமும் அல்லவா!

    கதிர் கண்ட மேகம், உயிர் கண்ட காதல் என சொல்லும் பொழுது அப்பொழுதைய இயக்கங்களை மட்டுமே ஒப்பிட வேண்டுமல்லவா? பொதுவாய் இருத்தலை தள்ளி வைத்தல் நலம்..

    மேகம் மழை பொழிதல் இரவிலும் நடக்கும்..
    சொல்லப் போனால் கதிர் காணா மேகமே அதிக மழை தரும்.
    இரவிலேயே அதிக மழைப்பொழிவு இருக்கிறது.

    கொண்டல் என்றால் கிழக்கில் இருந்து வீசும் காற்று என படித்திருக்கிறேன்

    கிழக்கு - கொண்டல் காற்று
    மேற்கு - மேலைக் காற்று
    தெற்கு - தென்றல் காற்று
    வடக்கு - வாடைக் காற்று

    இவை திசையொட்டிய காற்றின் பெயர்கள்..

    தென்றல் சுகமானது என அறிந்த நாம் அதன் பண்பைக் கொண்டு தென்றலை உபயோகிக்கிறோம். இது தெற்கிலிருந்து வருவதால், ஈரப் பதமும், மிதமான வெப்பமும், கொண்டது.. வடக்கிலிருந்து (சைபீரியா, இமயமலை வழியாக ) வீசும் காற்று சில்லென இருப்பதால் ஜில்லென்ற காற்றை வாடைக் காற்றாக்கி விட்டோம்.

    இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் இன்னும் பட்டை தீட்டலாம்.

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தெற்கிலிருந்து வீசும் காற்றை எமதூரில் சோளக்காற்று (சோலைக்காற்று மருவி சோளக்காற்று ஆயிற்று??) என்றும் சொல்வார்கள்.

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    முதலில் தங்களது மேலான விமர்சனத்திற்கு எனது நன்றி அக்கா (என்றழைக்கலாம் அல்லவா?).

    Quote Originally Posted by அல்லிராணி View Post
    ஆனால் கதிரவன் மறையும் பொழுதும் மேக முகம் சிவக்கும். காதலி முகம்? இது மறைபொருளாய் தொக்கி கொஞ்சம் உரசுகிறது..

    (சூரியன் வந்தாலும் சரி, போனாலும் சரி மேகம் முகம் சிவக்கும்.. அதையும் சேர்த்துச் சொல்லணும்.. ஏனென்றால் சிவப்பது என்பது ஒரு பொழுது மட்டுமல்லவே! பிரியும் காதலன் கொடுத்த முத்தத்தில் சிவக்கும் முகத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.)
    நான் இதை எழுத நினைத்ததும் விழுந்த வார்த்தை "கண்டதும் சென்றதும் சிவந்தனள்" என்பதே... ஆனால் பிரியும் போது காதலி ஏன் சிவக்கிறாள் எனும் கேள்விக்கு விடை புத்திக்கு எட்டாததால் விட்டு விட்டேன்.
    இறுகிய குளிர்ச்சி - நிறைந்த மகிழ்ச்சி அடைமொழி நெருடுகிறது. குளுமை என்பதற்கும் (கூல்) குளிர் (கோல்ட்) என்பதற்கும் சிறிய வித்தியாசம். இறுகிய குளிர்ச்சி என்பது மகிழ்வுச் சொல்லா? உறைய வைக்கும் குளிர்.. சிலீரென குத்தும் குளிர் என சற்று மாறித் தோற்றம் காட்டுகிறது.. அந்தக் குளிரில் உறைபனியாய் பனிமழை பெய்யும்.
    இறுகிய குளிர்ச்சி எனக்கும் நெருடியதால் தான் இரண்டாவதை எழுதினேன் நான் எண்ணிய பொருள்.. இறுகிய குளிர்ச்சி.. முதலில் எரிந்தவன் பின் தணிந்து குளிர்ந்த வார்த்தைகளால் இறுக்கினான் - அணைத்தான்
    (கோபத்தில் அழாமல் குளிர்ச்சியில் அழுவது பலருக்கு இயல்பு தானே.)

    நிறைந்த மகிழ்ச்சி - எனும் போது மகிழ்ச்சி சரியான பதம் அல்ல என நினைக்கிறேன். நான் சொல்ல நினைத்தது. நிறைந்த மகிழ்ச்சி யால் அவள் அழுதாள். நிறைந்த நீரினால் மேகம் மழையாக அழுதது.
    ஆக முதல் கவிதையை விட இரண்டாம் கவிதை பொருத்தமாய் தெரிகிறது,,
    குளிர்ந்த மேகம் மழைபொழியும் பொழுது கதிர் கண்ட மேகமா எனப் பார்த்தால் இல்லையே செல்வா! கதிர்கானா மேகமும் அல்லவா!
    கதிர் கண்ட மேகம், உயிர் கண்ட காதல் என சொல்லும் பொழுது அப்பொழுதைய இயக்கங்களை மட்டுமே ஒப்பிட வேண்டுமல்லவா? பொதுவாய் இருத்தலை தள்ளி வைத்தல் நலம்..
    ஓ.... சந்திப்பை தொடரும் நிகழ்வுகள் தானே... என எழுதினேன். இனி கவனத்தில் கொள்கிறேன்.

    கொண்டல் என்றால் கிழக்கில் இருந்து வீசும் காற்று என படித்திருக்கிறேன்
    மேகம் என படித்த ஞாபகம் அதனால் தான் எழுதினேன்.
    இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் இன்னும் பட்டை தீட்டலாம்.
    நிறைய வாசிக்கவும் யோசிக்கவும் வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். தற்போது நான் தமிழ் வாசிப்பது மன்றத்தில் மட்டுமே. பணி முடிய கிடைக்கும் இடைவெளியில் மனதில் தோன்றுவதை மன்றில் பதிகிறேன்.
    விழுந்து எழும் என்னில் தூசு தட்டுதலுக்கு நன்றி அக்கா....
    இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் ஆவலைக் கிளப்பியிருக்கிறது. அதோடு ஊர் செல்லும் போது தமிழாசிரியரைச் சந்திக்க வேண்டிய அவசியத்தையும்.
    நன்றி அக்கா...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இங்கே(யும்) இருக்கட்டும் செல்வா.. உதாரணத்துடன் பயிற்றுவித்தமை பயன் மிக்கதாக உள்ளது.
    சரி அமரா அதுவும் நல்லதுதான்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •