தினமலரின் முட்டாள் தனங்களை, புரட்டு செய்திகளை நிறைய அடுக்கலாம். முன்பே ஒரு திரியில் தினமலரின் வண்டவாளங்களை பற்றி விவாதித்திருக்கிறோம். கைப்பேசி பயங்கர ஆயுதம் என்றால் அதை உபயோகப்படுத்த ஊக்கப்படுத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறதா..? இதெல்லாம் ஒரு பத்திரிக்கை என்று காசு கொடுத்து இதை வாங்குபவர்களைச்சொல்ல வேண்டும்.
பரபரப்பு செய்தி வெளியிட்டு மக்களை கவர முன்னுக்கு பின் முரணான, பொய்யான செய்திகளை வெளியிடுவதில் தினமலருக்குத்தான் முதலிடம்..! இது போன்ற பத்திரிக்கைகளை வாங்குவதை புறக்கணிப்பதன் மூலம் தான் சரியான பாடம் புகட்ட முடியும். இல்லையென்றால் இன்று தின மலர் என்றால் நாளை தின மொட்டு ஒன்று முளைக்கும்.!!
தகவலை தந்த நண்பருக்கு நன்றிகள்.!!!
Bookmarks