தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல!
இவை எல்லாம் இருந்தும்
எழுதுகோலும் தாளும் இல்லாமல் போனதால்
சொல்லாமல் போன கவிதைகள் பலப்பல!
போகிற போக்கில் பொழிகிற மேகம் போல்
மழலை இனம் மட்டும் தானே
நினைத்தவுடன் சிரிப்புக் கவிகளை உதிர்த்து
நிலமெல்லாம் கொட்டமுடியும்!
மரங்களால் காற்று சுத்தமாகிறது - அறிவியலுக்கு!
மழலைச் சிரிப்பால், காற்று சுத்தமாகிறது - கவிஞனுக்கு!
சுற்றும் பூமி சுலபமாய் சுற்ற
மசை* போடுவதே மழலையின் சிரிப்பு தானே!
இத்தனை பாவம் செய்தும் - இயற்கை
மனிதனை விட்டு வைத்திருப்பது
அவன் கொஞ்ச காலம் மழலையாய் இருந்ததனால் தானோ?
பூமியைச் சிலிர்க்கச் செய்பவை இரண்டு!
தரையைத் தொட்டு தெறிக்கும் மழை!
தரையில் குதித்து சிரிக்கும் மழலை!
சூரியன் குளிறும்!
யின் சிரிப்பில் மயங்கி நின்றால்!
மிளகாய் இனிக்கும்!
குழந்தையின் சிரிப்புடன் குழைத்துத் தின்றால்!
ப் பேச்சு - கவிதைகளின் தொகுப்பு!
ச் சிரிப்பு - அந்த கவிதை தொகுப்பின் தலைப்பு!
அது வரை மழலிய* கவிதைகளை எல்லாம்
ஒரு தலை(சிரி)ப்புடன் தொகுப்பாய் வெளியிட்டு விட்டு
அடுத்த கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது
சிரித்து விட்டு பேசும் குழந்தை!
இரண்டு வயதுக்குள் இருநூறு இதிகாசங்களை
இப்படித் தான் குழந்தைகளால் எழுத முடிகிறது!
பொக்கை வாய் வழியே ஒரு பிடி சிரிப்பு!
மரண பூமி மறுபடி உயிர்ப்பு!
எப்போதெல்லாம் கவிதை படிக்க தோன்றுகிறதோ
அப்போதெல்லாம் நூலகத்திற்குச் செல்லாதீர்கள்!
பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்!
அங்கே,
விளம்பரமே இல்லாத கவியரங்கங்கள்
விளையாட்டாய் நடந்துகொண்டிருக்கும்!
-------------
குறிப்பு:
- வரும் இடத்தில் 'மழலை' என்று படிக்கவும்
*மசை - மாட்டு வண்டியில் சக்கரம் சுலபமாய் சுழல போடப்படும் பசை.
*மழலிய - மழலை பேசிய (நானாக சொன்னது )
Bookmarks