Results 1 to 5 of 5

Thread: அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள்

    அந்திமாலைச் சூரியனின்


    தேய்ந்து கொண்டிருக்கும் வெம்மை
    எதையெல்லாமோ சொல்ல முனைந்து
    இறுதியில் எதையுமே சொல்லாமல்
    இருட்டின் நிழலுக்காய்
    தன்னை விட்டுக்கொடுக்கிறது

    தீராத தனிமையின் வலியில்
    தனக்குத்தெரிந்த மொழிகளின்
    ஊமை வாசகங்களை
    அங்கொன்றும் இங்கொன்றுமாய்
    பறைசாற்றுகின்றன பறவைகள்

    நட்சத்திரக் கண்களினுடே
    பூமியைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது
    கறுப்பாகிக் கொண்டிருக்கும்
    நீல வானம்

    வானவெளிப் பரப்பில்
    சுவடுபதிக்கும்
    காற்றின் மென்சலனமும்
    நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறது..

    இரவின் நீண்ட நிழலில்
    இளைப்பாறத் தொடங்கியிருக்கின்றன
    மரங்களும் ஆறுகளும்

    ஒவ்வொரு அந்திமாலையும்
    நமக்குள் எழுதிச்செல்லும்
    மொழிகளைத் தாண்டிய
    கவிதைகள் ஏராளம் ஏராளம்

    அவைகளை நாம் வாசிக்கப் போவதில்லை
    என்று தெரிந்தும் தினந்தோறும்
    அது எழுதிக் கொண்டேயிருக்கிறது
    வெவ்வேறு கவிதைகளை
    நம்மீது..!-

    நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    மிகவும் நல்ல கவிதை நண்பரே!!
    அதுவும் கவிஞரின் கவியல்லவா...
    அந்தி வெளையில் அழகே தனிதான்..
    இயற்கையின் அழகை மிகவும் ரசித்து கவிதை வடித்தது..
    ரசிக்க தக்கது..
    நானும் இந்த சாயங்காலம் சூரியவெளிச்சதை ரசித்திருக்கிறேன்..
    ஆனால் அதையே இங்கு கவிதையாக காணும் பாக்கியம்..
    என் நன்றி கவிஞரே!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by shibly591 View Post
    அந்திமாலைச் சூரியனின்




    அவைகளை நாம் வாசிக்கப் போவதில்லை
    என்று தெரிந்தும் தினந்தோறும்
    அது எழுதிக் கொண்டேயிருக்கிறது
    வெவ்வேறு கவிதைகளை
    நம்மீது..!-

    நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com
    ஷில்பி உங்கள் கற்பனை அழகாய் இருக்கிறது. இந்த வரிகள் அருமை. தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆஹா... மெய் மறந்து ரசித்திருந்தேன் வெகு நேரம்..!!
    அசத்தல் கற்பனை..!! மனம் நெகிழப் பாராட்டுகிறேன் சகோதரர் ஷிப்லி.

    சொல்லப்படாத கற்பனைகள்
    சொல்லிய வரிகளில்
    வானளக்கின்றன..!!

    பாராட்ட வார்த்தைகள் இல்லை ஷிப்லி அண்ணா..!!


    நல்லதொரு கவிஞரின் வருகையால் மன்றம் மேலும் சிறப்படைகிறது.
    இன்னும் நிறைய கவிதை தாருங்கள்..!!

    கவியமுது பருக கசக்குமா என்ன??!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    நன்றி பூமகள்...

    நன்றி பூமகள்...நான் தாங்களுக்கு அண்ணா இல்லை..தம்பி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •