Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 49

Thread: பனி விழும் கொலை வனம்...!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    பனி விழும் கொலை வனம்...!

    பதினெட்டாயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருந்தது அந்த ராணுவத்தளம்.சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சனையில் இருக்கும் சியாச்சின் மலைப் பிரதேசம்.ரோஜாத் தோட்டம் என்று அர்த்தம்...ஆனால் அபாயம் நிறைந்த,எதிரிகளின் ஊடுருவல் அதிகமாக நிகழக்கூடிய சென்ஸிடிவ் பகுதி.முருகைய்யா.....தருமபுரி மாவட்டத்தின் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன்..சர்வீஸில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகிறது.சமீபத்தில்தான் இந்த இடத்துக்கு மாற்றலாகியிருந்தான்...அவுல்தார் அவனுடைய பதவி.மேஜர் கன்னாவின் குழுவில் அவருக்கு நம்பிக்கையான வீரன்.

    கையில் இருந்த வெள்ளை உலோக கோப்பையில் தேநீர் இருந்தது.ஒரு மடக்குக்கு ஒரு முறை சூடு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.அத்தனைக் குளிர்.இங்கு வருவதற்குமுன் உடனிருந்த நன்பர்கள் நிறைய சொல்லியிருந்தார்கள்...இந்த பிரதேசத்தின் குளிர் பற்றியும்....ஆபத்துகள் பற்றியும்.சண்டையில் இறந்தவர்களை விட பனிப்பொழிவிலும்,நிலச் சரிவிலும்,கடுமையான குளிரிலும் இறக்கும் வீரர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம் என்று.ஆனால் ஒரு உண்மையான கீழ்படிதல் உள்ள வீரனாய் எதைப்பற்றியும் அச்சப்படாமல்...இங்கே வந்திருந்தான்.

    இங்கு வந்து பார்த்தப் பிறகுதான் இவனைப்போல எத்தனையோ பேர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக காவல் இருப்பதைப் பார்த்துவிட்டு...இவனும் அவர்களில் ஒருவன் என்ற பெருமிதத்தை அடைந்தான்.மிகச் சிறிய கூடாரங்கள்...அதுவும் அக்டோபர் மாதங்களில் பணிப்பொழிவில் பூமிக்கு அடியில் போய் விடும்.ஒரு ஆள் மட்டும் நுழையக்கூடிய வகையில் பேரல்களால் ஆன சுரங்கப்பாதை போன்ற வழியில்தான் அந்த கூடாரங்களை அடையவேண்டும்.இதற்குள்தான் எட்டு பேர் வசிக்க வேண்டும்.கெரசின் ஸ்டவ்தான் பல விஷயங்களுக்கு உதவுகிறது.பனியை உருக்கி குடிநீராக்குவதற்கும்,கூடாரத்துக்கு வெளிச்சம் மற்றும் கதகதப்பைத் தருவதற்கும் அந்த ஸ்டவ்தான் துணை.

    சரேலென்று இறங்கும் அபாயமான சரிவுகளில்...கொஞ்சமும் பயமின்றி ஆடு மேய்க்கும் சிறுவர்களை ஆச்சர்யத்துடன் பார்ப்பான்.அவர்கள்தான்...இந்திய ராணுவத்தினருக்கு நம்பகமான தகவல் தரும்....உளவாளிகள்.எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனித்து உடனுக்குடன் தகவல் சொல்லி விடுவார்கள்அப்படி ஒரு சிறுவனிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில்தான்...முருகய்யாவும்,இன்னும் சில ஜவான்களும்...அந்த இடத்துக்குப் போனார்கள்.யாரையோ எதிர்பார்த்து....மறைந்திருந்தார்கள்....வெப்பமான மூச்சுக்காற்றால் மீசை முடியில் உருவான..ஐஸ் கட்டிகளை அடிக்கடி உடைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்....

    கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் மிக மிக மெதுவாக...அசாதரணமான...ஜாக்கிரதை உணர்வுடன்...மெள்ள முன்னேறி வந்து கொண்டிருந்தது.தெளிவாகத் தெரியாததால்...ஆளை அனுமானிக்க முடியவில்லை....கிட்ட நெருங்கியதும்...ஒரே பாய்ச்சல்...தரையில் கிடத்தி..கைகள் இரண்டையும் முதுகுக்கு கொண்டு வந்து விலங்கிட்டார்கள்.பின் அப்படியே கொத்தாக தூக்கி நிறுத்தியதும்தான் தெரிந்தது அது ஒரு பெண்.நல்ல திடகாத்திரமாக இருந்தாள்.பஞ்சாபிப் பெண்களுக்கே உரிய நல்ல உயரம்....வலுவான உடல்.அடிக்கடி அந்தப்பக்கத்திலிருந்து இங்கே ஊடுருவும் எதிரிகளில் பெண்களும் இருப்பார்கள்.இவர்கள் ஆண்களை விட அழுத்தக்காரர்கள்...சாமான்யமாக அவர்களை பேச வைக்க முடியாது.

    முதல் வேலையாக அவளை முழுச் சோதனை செய்து...வெடிகுண்டு எதுவும் அவள் வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு...காலில் கட்டி வைத்திருந்த கத்தியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு...கூடாரத்துக்கு அழைத்து வந்தார்கள்.மேஜர் கன்னா...கீழே இருந்த மற்றொரு பேஸ்(BASE)க்கு போயிருந்ததால்..அவரைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லியதும்,உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார்.அவர் வரும் வரை அவளை பத்திரமாக...நாற்காலியோடு சேர்த்து கட்டி வைத்தார்கள்.ஒரு அலட்சிய புன்முறுவல் அவள் உதட்டில் ஓடிக்கொண்டிருந்தது....ஜவான்களைப் பார்த்து கேலி செய்வதாய் அது இருந்தது....அது கொடுத்த எரிச்சலில்...ஒரு ஜவான்..பளிச்சென்று அவள் முகத்தில் அறைந்தான்.அதற்கெல்லாம் அசராத உறுதியுடன் ஏதோ முணுமுணுத்தாள்.....க்யா போல்த்தியே தூ குத்தி....என்ன முணுமுணுக்கிறாய் நாயே..என்று மறுபடியும் அவனே அறைந்தான்...இப்போது சத்தமாக பஞ்சாபியில்....அந்தர்கே கல் நை குலா சக்தே.....எனக்குள்ள இருக்கற எந்த தகவலையும் உங்களால வெளியே எடுக்க முடியாது என்று இரைந்தாள். ஓ பி தேக்லேங்கே..சாலி...அதையும் பாத்துடலாம்...என்று மீண்டும் அடிக்கப் போனவனை முருகையா தடுத்து...மேஜர் வரும் வரை அவளை எதுவும் செய்ய வேண்டாம்..என்று சொல்லிவிட்டு அவளுக்கருகில் இரண்டு ஜவான்களை நிற்கச் சொல்லிவிட்டு...வெளியே வந்தான்.மேலும் சில ஜவான்களை அழைத்து கூடாரத்துக்கு காவல் வைத்துவிட்டு தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பிப்போனான்.மேஜர் வருவதற்குள் திரும்பிவிடலாமென்று நினைத்துக்கொண்டு.

    மேஜர் கன்னா வந்ததும்....நேரே அவளைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்குள் நுழைந்தார்.அவரும் பஞ்சாபி என்பதால்...அவளை பஞ்சாபியிலேயே விசாரித்தார்....எந்த பலனும் இல்லை.வாயைத் திறக்கவே இல்லை.தனது இராணுவ முறையைப் பிரயோகித்தார்...எந்த மாற்றமும் இல்லை.தவ நிலையில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.அப்படி அவள் அமர்ந்திருந்தது அவரை இன்னும் ஆத்திரப்படுத்தியது....ரைஃபிள் பிடித்துக் காய்த்துப்போயிருந்த.அந்த வலுவான கைகளால் ரப் பென்று அவள் கன்னத்தில் அடித்ததில்...விரல் நகம் கண்னில் பட்டு கீழிமை கிழிந்து ரத்தம் வந்தது....சிவந்த கண்ணம் மேலும் சிவந்து விரலடையாளங்களை வெளிக்காட்டியது.அதற்கும் அசையாமல் தலையை மட்டு சாய்த்து தோள்பட்டையால் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டாள்.

    வெளியே சின்னதாக ஒரு சலசலப்பு....தபால் கொண்டு வரும் நாய் வந்திருந்தது...உண்மையாகவே நாய்தான்.அந்த மலைப்பிரதேசத்தில் ஏறி வந்து குறிப்பிட்ட இடத்தில் தபால்களை சேர்க்குமாறு அந்த நாயைப் பழக்கியிருப்பார்கள். தற்காலிகமாக அவளை அந்த ஜவான்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த கன்னா...தபால் பையைப் பிரித்துக்கொண்டிருந்த ஜவானைப் பார்த்து...என் பெயருக்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.புரட்டிப் பார்த்துவிட்டு...நஹி சாப் என்றான்.
    மீண்டும் உள்ளே வந்த கன்னா....கண்ணாலேயே அந்த ஜவான்களைப் பார்த்து ஏதாவது சொன்னாளா என்று கேட்டார். நஹி சாப்...மணி எத்தனை என்று மட்டும் கேட்டாள். என்று ஒருவன் சொன்னதுமே...அவருக்கு இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று தெரிந்தது.மீண்டும் அவளிடம் போய் சொல் எதற்கு மணி கேட்டாய்...யாரை எதிர்பார்க்கிறாய்...அல்லது ஏதாவது நிகழ்த்த நேரம் குறித்திருக்கிறீர்களா...என்று சரமாரியாகக் கேள்விகளை வீசினார்.எல்லாவற்றையும் கேட்டவள்..முதல் முறையாக...கிழிந்த உதடுகளூடே மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.தொடர்ந்து பஞ்சாபியில்...இந்நேரம் எங்கள் திட்டம் நிறைவேறியிருக்கும் என்று மிகச் சத்தம் போட்டு சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கியவள் கன்னத்தில் மீண்டும் ஒரு அடி இடியாய் இறங்கியது.

    உண்மையைச் சொல்...என்ன உங்கள் திட்டம்....நீ இப்போது சொல்லவில்லையென்றால்....இதுவரை காட்டியதிலும் மிகக் கடுமையைக் காட்டவேண்டியிருக்கும்...சொல்...வாயைத் திற.....


    எதற்கும் அசையாத அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஜவான்...சாப்...இவளை இப்படிக்கேட்டால் சொல்ல மாட்டாள்...அவர்கள் நம் ஆட்களை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் தான் சொல்லுவாள்..

    மறுப்பதைப் போல தலையை அசைத்து வேண்டாம்...கொஞ்சம் பொறுக்கலாம்....இங்கே இன்னும் இரண்டு பேரைக் காவலுக்கு போடுங்கள்
    சரி எங்கே முர்கய்யா....உடனடியாக ஒரு குழுவை தேடுதலில் ஈடு படுத்துங்கள்..

    இவர் முருகய்யாவை தேடிக் கொண்டிருந்த அதே நேரம் முருகைய்யா தன்னுடன் மூன்று சிப்பாய்களை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணை மடக்கிய அதே இடத்துக்கு..வேறு வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.அந்த இடம் சமீபிக்கும்போதே தூரத்தில் நிழலாட்டத்தை உணர்ந்தார்கள்.காலடி சத்தம் கூட வராமல்...மெள்ள பதுங்கி அருகே நகர்ந்து ஒரு புதர் மறைவிலிருந்து கவனித்தார்கள்.மாலை நேரமென்றாலும்...அடர்ந்த மரங்கள் மேலும் பனியைப் போர்த்திக்கொண்டிருந்ததால் இன்னும் புஷ்டியாகி வெளிச்சத்தை வடிகட்டியிருந்தன.

    கண்களைக் கூர்மையாக்கி கவனித்ததில் நான்கு பேர் தெரிந்தார்கள்.அதில் ஒருவன் கையில் ராக்கெட் லாஞ்சருடன் இருந்தான்.மற்ற மூன்று பேரும் இயந்திரத் துப்பாக்கியுடன் கண்களை சிறுத்தைகளைப் போல நாலாபுறமும் அலையவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

    மெதுவாக கீழே அமர்ந்த முருகைய்யா குழுவினர்...அதிகம் பேசாமல்...அவர்களைத் தாக்கி பிடிக்க முடிவு செய்தார்கள்.திரும்பப்போய் இன்னும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வர இப்போது நேரமில்லை.துணிந்து தாக்குதலை நடத்தி விட வேண்டியதுதான்...மிக மிக மெதுவாக...இரண்டு சிப்பாய்களில் ஒருவன் இடப்பக்கமும்...அடுத்தவன் வலப்பக்கமும் நகர்ந்தார்கள்.மீதமிருந்த ஒருவன் முருகய்யாவைக் கவர் செய்வதற்காக துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவன் பின்னால் நின்றுகொண்டான்.

    வெகுக்கூர்மையான காதுகளால்...எதிரிகள் சட்டென்று இவர்கள் நடமாட்டத்தைக் கவனித்துவிட்டார்கள்...எந்தப்பக்கம் என்று உறுதியாகத் தெரியாததால் நாலாபுறமும் சுட்டார்கள்.அதில் இடது பக்கம் போன ஜவானின் மீது குண்டு பாய்ந்து விழுந்தான்...எதிரிகளின் கவனம் சற்றே அந்தப் பக்கம் திரும்பிய சொற்ப நேரத்தை சாதகமாக்கிகொண்டு..முருகைய்யா தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக்கொண்டு சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டதில் இருவர் விழுந்து விட்டனர்...ராக்கெட் லாஞ்சரை வைத்துக்கொண்டிருந்தவன் சடாரென்று அதைக் கீழே போட்டுவிட்டு இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான்.தோட்டா ஒன்ரு முருகையாவின் தோளைத் துளைத்துக்கொண்டு பாய்ந்தது.முருகய்யாவைக் கவர் செய்தவன்...சடாரென்று முன்னால் பாய்ந்து அவனைச் சுட்டதில் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்து விட்டது...அதற்குள் வலது பக்கம் போன ஜவான் இயந்திரத்துப்பாக்கியுடன் சுட்டுக்கொண்டிருந்தவனை வீழ்த்திவிட்டான்...தோளில் பட்டிருந்த தோட்டாவையும் சட்டை செய்யாமல்...முருகைய்யா பாய்ந்து நின்று கொண்டிருந்தவனை மடக்கிவிட்டான்.

    புயலடித்து ஓய்ந்ததைப் போல அந்தப் பகுதியே அமைதியாகிவிட்டது.விழுந்து கிடந்த மூன்று பேரையும் பார்த்துக்கொண்டே முருகைய்யா அந்த நாலாவது ஆளை கவனித்துக்கொள்ளும்படி மற்ற இரண்டு சிப்பாய்களுக்கும் உத்தரவிட்டான்.இரண்டு பேரும் அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு துப்பாக்கியை விலாவில் வைத்து அழுத்தினார்கள்.கீழே விழுந்துவிட்ட தன் துப்பாக்கியை எடுக்க குனிந்த முருகைய்யா டுமீல் என்ற சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டான்..கீழே விழுந்து கிடந்தவர்களில் ஒருவன் கையில் கைத்துப்பாக்கியுடன் மெல்ல கீழே சாய்ந்து கொண்டிருந்தான்...புகையும் தன் துப்பாக்கியுடன் மேஜர் கன்னா அங்கே வந்து கொண்டிருந்தார்.நடக்கவிருந்ததை கன்னா தடுத்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட முருகைய்யா அவரை நன்றியுடன் பார்த்தான்.

    இவனை இழுத்துட்டு வாங்க என்று உத்தரவிட்டுவிட்டு முருகய்யாவை ஆதரவுடன் தன் தோளில் சாய்த்துக்கொண்டு முகாமை நோக்கி நடந்தார்.

    மாட்டிக்கொண்டவனிடமிருந்து கிடைத்த சில ஆதாரங்களை வைத்து அவர்கள் அன்று அங்கே ஆயுதங்களுடனும்,கண்கானிப்பு சாதன்ங்களுடனும் வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.

    சரியான சமயத்தில் அங்கே சென்ற முருகய்யாவை பாராட்டிய கன்னா
    அதுசரி அந்தப் பெண்ணைக் கூடாரத்தில் வைத்துவிட்டு அந்த இடத்துக்குப் போகவேண்டுமென உனக்கு எப்படி தோன்றியது என்ரு கேட்ட்தும்

    சார்...இவர்களின் ஊடுருவலைப் பற்றின செய்தி கிடைத்ததும்...உடனடியாக அந்த இடத்துக்குப் போய்...காத்திருந்து இவளைப் பிடித்துக்கொண்டு வந்தோம்.இங்கு வந்து சேரும்வரை எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.ஆனால் பொதுவாக நமக்கு வரும் செய்தியில் துல்லியமாக இடம் குறிப்பிடப்பட்டு இருக்காது,ஆனால் இந்த முறை சரியான இடத்தைப்பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது...அதுமட்டுமல்லாமல்...நம்மைப் போலவே இவர்களும் பயிற்சிப் பெற்றவர்கள்...மேலும் கூடுதலான ஆக்ரோஷம் உள்ளவர்கள்.இருந்தும் இவள் அதிக எதிர்ப்பைக் காட்டவில்லை.கையிலும் பெரிதாக ஏதும் ஆயுதமில்லை.கூடாரத்துக்கு வந்த பிறகு யோசித்தபோதுதான்...இவள் வேண்டுமென்றே பிடிபட்டிருப்பாளோ எனத் தோன்றியது.அதனால் சில ஜவான்களை அழைத்துக்கொண்டு வேறு வழியாக அதே இடத்துக்குப் போனோம்...நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது.
    முருகைய்யா சொன்னதைக்கேட்டதும் உடனடியாக முகம் மலர்ந்து..வெல்டன் மை பாய்ஸ்..என்று அவன் முதுகைத் தட்டிக்கொடுக்க தூரத்தில் ஹெலிக்காப்டரின் கிர்ர்ர்ர்ர்ர் சத்தம் சமீபித்துக்கொண்டிருந்தது.........
    Last edited by சிவா.ஜி; 18-03-2008 at 07:22 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    மிக எளிமையாய் நயமாய் நளினாமாய் தொய்வில்லாமல் எப்படிதான் உங்களால் இப்படி கதை எழுத இயல்கிறதோ, எனக்கு வராத ஒன்று கதை எழுதுவது. நான் கதைப்பகுதிக்கு அதிகமா வரமாட்டேன் உங்களுடைய கதை யவனியக்கா, அப்பறம் நம்ம அமரன் அவர் குரு செல்வா இப்படி சிலப்பேர் கதைகளைப் பார்த்த இந்த பக்கம் வருவேன் காரணம் உங்கள் எழுத்துக்களில் மந்திர ஈர்ப்பு இருக்கு என்னை அப்படியே உள்ளிழுத்து கட்டிப்போட்டுவிடும். அப்படி கட்டிப்போட்ட வீரமான கதையண்ணா இது.
    பாராட்டுக்கள் அண்ணா படைத்த உங்களுக்கும் நம் படைவீரர்களுக்கும்.

    அன்புடன் ஆதி
    அன்புடன் ஆதி



  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    என் ஆரம்பக்காலக் கதைகளை விட சிறிதாவது உயர்ச்சி இருக்கிறதென்றால் அது இந்த மன்றத்தில் நான் படித்த பல கதைகள் கொடுத்த பாடம்தான் ஆதி.மிக அருமையான கதை சொல்லிகளான யவனிகா,மயூ,ராகவன்,பாரதி..மேலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும்..குரு,குருவுக்கு குரு அனைவரின் எழுத்துகள்தான் காரணம்.
    பாராட்டுக்கு மிக்க நன்றி தம்பி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஹ ஹ என்ன சிவா... ராஜேஸ்குமார் (மதியை சொல்லவில்லை) மாதிரி கதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்....
    இந்த வகை கதைகள் படித்தால் இதயத்தின் துடிப்பது அதிகமாவது என்னவோ உண்மைதான்...
    பாராட்டுகள்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சும்மா...ஏதாவது வித்தியாசம் வேண்டுமல்லவா...அதன் முயற்சிதான் இது...பெரியவங்க(?) நீங்க பாத்து ஏதாவது திருத்துங்க பென்ஸ்...
    பின்னூட்டப் பாராட்டுக்கு நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    தலைப்பு ஈர்க்க கதைக்குள் வந்தேன்...திரில்லர் கதை என்று நினைத்து ஆரம்பித்தேன். தேசப்பற்று கதையைக் கொடுத்து விட்டீர்கள அண்ணா...
    ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தொய்வின்றி பயணித்தது கதை. சிவா அண்ணாக்குள்ள ரைபிள் ஏந்தியவாறு ஒருத்தர் ஒளிஞ்சிருக்கார் போல...
    நல்ல கதை கொடுத்தமைக்கு வாழ்த்துக்ள அண்ணா.....தொடருங்கள்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றிம்மா யவனிகா(எங்கே அடிக்கடி காணாமப் போயிடறீங்க...)அந்தப் பகுதியில் பணியிலிருந்த சில நன்பர்கள் விவரித்ததை வைத்து சின்ன கற்பனையில் தோன்றிய கதை.பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிம்மா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    அருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.
    மதி நல்ல விமர்சனம்...

    இந்த மாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லுறது பேச்சுலரால் மட்டுமே முடியும்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆஹா... கையக் குடுங்க அண்ணா சேம் சேம் இனிப்பு குடுங்க.... இதே மாதிரி பின்னணியில், சூழலில் ஒரு கதை நானும் எழுதியிருக்கிறேன். தினமணிகதிரில் கார்கில் பற்றி ஒரு கட்டுரை வந்தது அதைப்படித்து அந்த குளிர்ப் பிரதேசத்தின் பிண்ணணியில் எழுதியது ஊருக்குச் சென்றால் பரணிலிருந்து இறக்கி மன்றத்தில் பதிகிறேன்... நிற்க.. அண்ணன் கதையை பார்ப்போம்...
    முதலில் கிரைம்தனமான அந்த தலைப்புக்கு என் பாராட்டுக்கள் அண்ணா...ஆரம்ப அறிமுகம் அந்த இடத்தின் வர்ணணை .. சில வரிகளில் கதையோட்டம் அருமை... தேசபக்தி தூண்டும் வகையிலான கதை.
    ஆனால் ஆரம்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் முடிவுக்கு இல்லை என நினைக்கிறேன் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாமோ அண்ணா? எனக்கு தோன்றுவது என்ன வென்றால் முருகய்யா இறுதியாகச் சொல்வதை அவனுடைய பேச்சாக இல்லாமல் ..... சற்று மாற்றி நிகழ்ச்சியாக காட்டியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்குமோ?
    வாழ்த்துக்கள் அண்ணா... இதையெல்லாம் வாசிக்கும் போது எனக்கும் எதையாவது எழுதணும்னு கையெல்லாம் பரபரக்குது....
    (ஹி...ஹி... அதான் பின்னூட்டம் எழுதுறமுல்ல.... )
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆதி..........நேர்ல வாங்க உங்கள அப்புறம் கவனிச்சுக்கறன்........
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உண்மையிலேயே, இந்தப் பாணியில் அமையும் (கிரைம் வகைக்) கதைகளுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம். மிகவும் ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றிகளும், பாராட்டுக்களும்...

    இனிக் கதை பற்றிச் சில வரிகள்...
    செல்வா கூறியது போல, அந்த சம்பவத்தை காட்சிப்படுத்தியிருக்கலாம்.
    இன்னமும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.
    ஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா?
    ஏன் என்றால், அவள் குறித்த நேரம் முடிந்ததுமே கேள்விக்கு விடை சொல்வதுபோல உண்மையை ஒப்புவித்து விட்டதாக கதை இருக்கின்றது. தாக்குதலை வெற்றியாக்க அவள் நாடகமாடி அகப்பட்டாள் என்றே வைத்துக் கொண்டாலும், மற்றைய நால்வரும் தாக்குதல் முடிந்ததும் தமதிருப்பிடம் திரும்பிச் செல்லவே முயன்றிருப்பார்கள். அதுவரை அடித்த போதிலும் அவ்வளவு உறுதியோடு இருந்தவள், தாக்குதலுக்கு முன்னரே உண்மையைச் சொல்வாளா? அதனால் இலக்கு பாதுகாக்கப்படும் வாய்ப்புள்ளதே.
    அடுத்து, தாக்கப்படத் தீர்மானித்த இலக்கு இன்னமும் முக்கியத்துவமானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த பனிபடர்ந்த பிரதேசத்தில் இதைவிட முக்கியமானதாக எதனைக் காட்டுவது என்ற பிரச்சினையும் உள்ளது. தவிர, வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
    இறுதியாக, வாசகர்களுக்கு அவளது மரணம் காட்சிப்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது, வன்முறையைக் காட்டுவதில் காட்டப்படும் கண்ணியமாகும். ஆனால், அகப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து, தகவல்களை மேலும் பெற முயல்வார்களே தவிர, உடனடியாக சுட்டுக் கொன்றிட மாட்டார்கள்.

    சிவா.ஜி யிடம் ஒரு வேண்டுகோள்...
    இதைப்போல விறுவிறுப்பான தொடர்கதை ஒன்றை எழுத இயலுமானபொழுது எழுதுங்கள்.
    அதற்கான எதிர்பார்ப்பே, எனது இந்தப் பதிவின் காரணமே தவிர குற்றம் சொல்லவல்ல.

    நீண்ட நாட்களின் பின்னர் (லியோமோகன் எழுதிய இவ்வகைக் கதைக்களுக்குப் பின்னர்) விறுவிறுப்பான ஒரு கதையை படித்த மகிழ்வுடன் பாராட்டுக்கின்றேன்...
    ஒரு நீண்ட நாவலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...
    Last edited by அக்னி; 18-03-2008 at 08:13 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •