ஆழமான காதல் கதை..
அவள் அழகான தேவதை. பல பேர் அவள் மீது காதல் கொண்டுள்ளனர்.
ஒருநாள் அவன், அவளை ஒரு பார்ட்டியில் பார்க்கிறான். அவனுக்கும் அழகுக்கு குறைச்சல் இல்லை. அந்த பெண்ணை பலரும் ரசிக்கின்றனர். ஆனால் ஒருவருக்கும் அவளிடம் பேச துணிச்சல் இல்லை.
பார்ட்டி முடிந்ததும் அவன் அவளிடம் சென்று 'என் கூட காபி சாப்பிட முடியுமா' என்று கேட்கிறான். நாகரீகம் கருதி அவளும் அதை மறுக்காமல் அவனுடன் சென்று ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் காபி சாப்பிடுகிறாள்.
அவனுக்கு அவளிடம் பேச வார்த்தைகள் எழவில்லை. அவளுக்கும் கூச்சமாக இருந்தது. அவள் நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்றாள்: உடனே அவன் சர்வரை கூப்பிட்டு 'கொஞ்சம் உப்பு கொண்டு வாங்க.. காப்பில போடணும்' என்று சொன்னான்.
அந்த ரெஸ்டாரண்டில் இருந்த அனைவரும் அவனையே கவனித்தனர்..அவனுக்கு வெட்கமாகி விட்டது..இருந்தாலும் அவன் அந்த உப்பை அவன் காப்பியில் போட்டு சாப்பிட்டான்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இந்த பழக்கம் உனக்கு' அவனிடம் கேட்டாள்.
'நான் சிறுவயதில் இருந்தது கடற்கரையை ஒட்டிய கிராமத்தில். நான் சுவாசித்தது , உண்டது எல்லாமே உப்பைத்தான். எப்ப நான் காபி குடித்தாலும் அதில் உப்பை சேர்ப்பேன். அது என் பால்ய காலத்தை நினைவுபடுத்தும். என் பெற்றோர், என் கிராமம் என்று நான் என் பழைய உலகத்துக்கு செல்வேன்'
இதை சொல்லும்போதே அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பின.
அவளுக்கு இது ரொம்ப பிடித்திருந்தது. ஒருவன் தன் வீட்டை பத்தி நினைவுகொள்கிறான் என்றால் அவன் ரொம்ப நல்லவனாகத்தான் இருப்பான். குடும்பத்தை அக்கறையாக கவனித்துக் கொள்வான் என்று எண்ணினாள்..
அப்புறம் இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். அவளுக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. நல்ல குணம், அதிக அக்கறை, அதீத அன்பு என திக்கு முக்காடி போனாள். அந்த உப்பு காப்பிக்கு அடிக்கடி நன்றி சொல்வாள்.
இந்த கதை மற்ற காதல் கதை போலவே நன்றாக சென்றன.. இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.
அவள் அவனுக்கு எப்ப காபி கொடுத்தாலும் அதில் உப்பு போட்டுத்தான் கொடுப்பாள். அவனும் அதை அன்பாக குடிப்பான்..
பல பல வருடங்கள் கழித்து, கணவன் இருக்கும் தருவாயில் ஒரு கடிதம் எழுதி வைத்து, தான் இறந்த விட்ட பிறகு படிக்குமாறு கூறி, ஒருநாள் இறந்தும் விட்டான்..
அந்த கடிதம்
'என்னை மன்னித்துவிடு அன்பே. நான் ஒரே ஒரு தடவை உன்னிடம் பொய் சொல்லி இருக்கிறேன்.. நம் முதல் சந்திப்பில், தடுமாற்றத்தில் நாக்கு உளறி, சக்கரை என்பதற்கு பதிலாக உப்பு என்று சொல்லிவிட்டேன். அதை உடனே என்னால் மாற்றி சொல்ல முடியவில்லை. அதனால் அந்த உப்பு காபி குடித்தேன். உப்பு போட்ட காப்பி யாருக்குத்தான் பிடிக்கும்..எனக்கும் பிடிக்காதுதான்.. ஒவ்வொரு தடவையும் உன்னிடம் நான் அதை சொல்ல வருவேன். முடியவில்லை. உன் மீது நான் கொண்ட காதலால் அந்த உப்பு காபி கூட எனக்கு இனித்தது. எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்து, அதில் நீ என் மனைவியாக வந்தால், அந்த வாழ்க்கை முழுதும் நான் உப்பு காப்பி குடிக்க தயாராக இருக்கிறேன்....'
அந்த கடிதத்தை அவளின் கண்ணில் இருந்த வழிந்த உப்பு நீர் நனைத்தது..
(மெயிலில் வந்தது)
.
Bookmarks