Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: உப்பு காஃபி - காதல் கதை.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0

    உப்பு காஃபி - காதல் கதை.

    ஆழமான காதல் கதை..

    அவள் அழகான தேவதை. பல பேர் அவள் மீது காதல் கொண்டுள்ளனர்.

    ஒருநாள் அவன், அவளை ஒரு பார்ட்டியில் பார்க்கிறான். அவனுக்கும் அழகுக்கு குறைச்சல் இல்லை. அந்த பெண்ணை பலரும் ரசிக்கின்றனர். ஆனால் ஒருவருக்கும் அவளிடம் பேச துணிச்சல் இல்லை.

    பார்ட்டி முடிந்ததும் அவன் அவளிடம் சென்று 'என் கூட காபி சாப்பிட முடியுமா' என்று கேட்கிறான். நாகரீகம் கருதி அவளும் அதை மறுக்காமல் அவனுடன் சென்று ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் காபி சாப்பிடுகிறாள்.

    அவனுக்கு அவளிடம் பேச வார்த்தைகள் எழவில்லை. அவளுக்கும் கூச்சமாக இருந்தது. அவள் நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்றாள்: உடனே அவன் சர்வரை கூப்பிட்டு 'கொஞ்சம் உப்பு கொண்டு வாங்க.. காப்பில போடணும்' என்று சொன்னான்.

    அந்த ரெஸ்டாரண்டில் இருந்த அனைவரும் அவனையே கவனித்தனர்..அவனுக்கு வெட்கமாகி விட்டது..இருந்தாலும் அவன் அந்த உப்பை அவன் காப்பியில் போட்டு சாப்பிட்டான்.

    அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இந்த பழக்கம் உனக்கு' அவனிடம் கேட்டாள்.

    'நான் சிறுவயதில் இருந்தது கடற்கரையை ஒட்டிய கிராமத்தில். நான் சுவாசித்தது , உண்டது எல்லாமே உப்பைத்தான். எப்ப நான் காபி குடித்தாலும் அதில் உப்பை சேர்ப்பேன். அது என் பால்ய காலத்தை நினைவுபடுத்தும். என் பெற்றோர், என் கிராமம் என்று நான் என் பழைய உலகத்துக்கு செல்வேன்'

    இதை சொல்லும்போதே அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பின.

    அவளுக்கு இது ரொம்ப பிடித்திருந்தது. ஒருவன் தன் வீட்டை பத்தி நினைவுகொள்கிறான் என்றால் அவன் ரொம்ப நல்லவனாகத்தான் இருப்பான். குடும்பத்தை அக்கறையாக கவனித்துக் கொள்வான் என்று எண்ணினாள்..

    அப்புறம் இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். அவளுக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. நல்ல குணம், அதிக அக்கறை, அதீத அன்பு என திக்கு முக்காடி போனாள். அந்த உப்பு காப்பிக்கு அடிக்கடி நன்றி சொல்வாள்.

    இந்த கதை மற்ற காதல் கதை போலவே நன்றாக சென்றன.. இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.

    அவள் அவனுக்கு எப்ப காபி கொடுத்தாலும் அதில் உப்பு போட்டுத்தான் கொடுப்பாள். அவனும் அதை அன்பாக குடிப்பான்..

    பல பல வருடங்கள் கழித்து, கணவன் இருக்கும் தருவாயில் ஒரு கடிதம் எழுதி வைத்து, தான் இறந்த விட்ட பிறகு படிக்குமாறு கூறி, ஒருநாள் இறந்தும் விட்டான்..

    அந்த கடிதம்

    'என்னை மன்னித்துவிடு அன்பே. நான் ஒரே ஒரு தடவை உன்னிடம் பொய் சொல்லி இருக்கிறேன்.. நம் முதல் சந்திப்பில், தடுமாற்றத்தில் நாக்கு உளறி, சக்கரை என்பதற்கு பதிலாக உப்பு என்று சொல்லிவிட்டேன். அதை உடனே என்னால் மாற்றி சொல்ல முடியவில்லை. அதனால் அந்த உப்பு காபி குடித்தேன். உப்பு போட்ட காப்பி யாருக்குத்தான் பிடிக்கும்..எனக்கும் பிடிக்காதுதான்.. ஒவ்வொரு தடவையும் உன்னிடம் நான் அதை சொல்ல வருவேன். முடியவில்லை. உன் மீது நான் கொண்ட காதலால் அந்த உப்பு காபி கூட எனக்கு இனித்தது. எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்து, அதில் நீ என் மனைவியாக வந்தால், அந்த வாழ்க்கை முழுதும் நான் உப்பு காப்பி குடிக்க தயாராக இருக்கிறேன்....'


    அந்த கடிதத்தை அவளின் கண்ணில் இருந்த வழிந்த உப்பு நீர் நனைத்தது..


    (மெயிலில் வந்தது)

    .
    Last edited by இராசகுமாரன்; 18-03-2008 at 01:38 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஏதேதோ உணர்வலைகள்.
    ஒரு பொய்க்காக, வாழ்நாள் முழுவதும் காப்பியில் உப்பிட்டுக் குடித்ததை,
    தண்டனை என்பதா? தியாகம் என்பதா? வறட்டுக் கௌரவம் என்பதா?
    சொன்ன பொய்யை, கண்டறிய முடியாமல் வாழ்ந்ததை,
    நம்பிக்கை என்பதா? மடமை என்பதா? புரிந்துணர்வின்மை என்பதா?

    கதையாக இருந்தாலும், பல உணர்வுகளைத் தூண்டுகின்றது.
    விடையில்லாத கேள்விகளை எழுப்புகின்றது.

    பகிர்தலுக்கு நன்றி மன்மிஜி....

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    எனக்கும் இதே எண்ணங்கள்தான் வந்தது..ஆனாலும் அந்த சூழ்நிலை.. அந்த nervous.. வாய் தவறி சொல்லிவிட்டு, அதை சமாளிக்க ஒரு கதை.. அதன் காரணமாக கிடைத்த காதல்.. அதை இழக்க விரும்பாத கணவன்.. இது தியாகம் இல்லை.. ஒருவேளை அது பொய் என்று சொன்னாள், இருவருக்குமிடையே சிறு விரிசல் ஏற்படலாம் என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்.. என்னதான் இருந்தாலும்..
    எனக்கு ரொம்ப பிடித்திருந்தது...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஹூம்.. எல்லாவற்றிற்கும் மேல்... அடுத்த ஜென்மத்திலும்...அதே உப்புக் காப்பியை மனைவி கையால் குடிக்க விரும்பிய கணவர், உண்மையில் என் மனதில் உயர்ந்தே நிற்கிறார்.

    டச்சிங் கதை.. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் மதன் அண்ணா...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    கதையாகப் பார்க்கவில்லை. உணர்ச்சிகளின் சங்கமமாக உணர்ந்தேன். தியாகத்திற்கு விலையேது?

    உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற முதுமொழிக்கு உகந்த உற்ற நட்பு,

    பகிர்தலுக்கு நன்றி மன்மதன்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அன்பிற்காக.... ஒரு சுவையை தியாகம் செய்வதில் தவறில்லை..

    ரொம்ப டச்சிங்க்பா... நன்றி மன்மதா...

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அவன் ஆயிரத்தில் ஒருவன்.....

    பகிர்வுக்கு நன்றி.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சில முகமூடிகள் அழகானவை..
    இன்னொரு முகத்தோலாகும் அளவுக்கு நிலையானவை!

    அவனை ரசிக்க முடிகிறது எனக்கு!

    பகிர்தலுக்கு நன்றி மன்மதன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    இதற்கு முன்னமே வாசித்திருந்தும்,
    தமிழில் அதுவும் உங்கள் அழகான எழுத்து நடையில் வாசிக்க தனி சுகம்தான்....

    காதல் உப்பையும் இனிப்பாக்கி விடுகிறது,
    உப்பு சப்பிலாத காதல் தான் இனிப்பில்லாமல் ஆகிவிடுகிறது.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இந்த உப்பில் காதல் தெரிகிறது.தவறுதலாய்ச் சொன்னாலும் அப்படிச் சொன்னதாலேயே காதலும்,காதலியும் கிடைத்ததால் இரண்டையுமே இழக்க விரும்பாமல்...இறக்கும்வரை உப்பு போட்டுக்காப்பி குடித்ததை நினைக்கும்போது மனித மனங்களின் விசித்திரமான முகம் தெரிகிறது.

    டச்சிங்கான கதை.பகிர்தலுக்கு நன்றி மன்மதன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    ஹூம்.. எல்லாவற்றிற்கும் மேல்... அடுத்த ஜென்மத்திலும்...அதே உப்புக் காப்பியை மனைவி கையால் குடிக்க விரும்பிய கணவர், உண்மையில் என் மனதில் உயர்ந்தே நிற்கிறார்.

    டச்சிங் கதை.. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் மதன் அண்ணா...!!
    நன்றி பூ..

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by சாலைஜெயராமன் View Post
    கதையாகப் பார்க்கவில்லை. உணர்ச்சிகளின் சங்கமமாக உணர்ந்தேன். தியாகத்திற்கு விலையேது?

    உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற முதுமொழிக்கு உகந்த உற்ற நட்பு,

    பகிர்தலுக்கு நன்றி மன்மதன்
    பொருத்தமான் பின்னூட்டம்..நன்றி ஜெயராமன்..

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •